search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாய தாமரை"

    • மானங்கெண்டான் ஆற்றில் வெங்காயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து மறைத்துள்ளது.
    • பாசனத்தை தடுக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

    வேதாரண்யம்:

    திருத்துறைப்பூண்டியில் வாய்மேடு வழியாக சென்று அங்கிருந்து ஆதனூர் ஊராட்சி வரை சுமார் 19 கிமீ தூரம் வரை சென்று பின்னர் கடலில் கலக்கும் மிகப்பெரிய வடிகால் ஆறான மானங்கெரண்டான் ஆற்றிலும், முள்ளியாற்றிலும் தாணிக்கோட்டகம் சட்ரஸ் முதல் வாய்மேட்டில் இருந்து பிரியும் மானங்கெண்டான் ஆற்றிலும் பல கி.மீட்டர் தொலைவு வரையில் தண்ணீரையே காணாத முடியாதபடி வெங்காயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து மறைத்துள்ளது.

    இதேபோல மணக்காட்டான் வாய்க்கால், ராஜன்வாக்கால், பெரிய வாய்க்கால் என பல வடிகால் வாய்க்கால்களிலும் மழை வெள்ள தண்ணீர் வடிவதையும், பாசனத்தை தடுக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

    இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள வடிகால்ஆறுகளிலும், வாய்க்கால்களில் வெங்காயத் தாமரைச் செடிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் அடர்ந்து படர்ந்துள்ளதால் வடகிழக்கு காலத்தில் மழைநீர்வடிய முடியாமல் பெருத்த வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    எனவே பருவமழை வலுக்கும் முன்னரே ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஆறு, வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆகாய தாமரைகளை அகற்றி குண்டாற்றை சுத்தம் செய்யவேண்டும் என நகராட்சி தலைவர்-கவுன்சிலர்கள் தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • ரேசன் கடைகளில் முதியவர்களால் கைரேகை பதிவு செய்யமுடியாதநிலை இருப்பதால் அவர்களால் பொருள்களை ரேசன் கடையில் பெற இயலவில்லை.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வார்டுகுழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல வார்டுகளில் பொதுமக்கள் ரேஷனில் பொருள்கள் சரிவர வழங்குவதில்லை, திருமங்கலம் நகரில் ஓடும் குண்டாற்றில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து அடைப்பை ஏற்படுத்தி யுள்ளது என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கவுன்சிலர்கள் ஆகியோர் தாசில்தார் சிவராமனை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

    அப்போது அவர்கள் கூறு கையில், திருமங்கலத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது பகுதியில் ரேசன் பொருள்கள் சரிவரை விநியோகிப்பதில்லை, பலருக்கும் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என புகார் செய்தனர்.

    மேலும் ரேசன் கடைகளில் முதியவர்களால் கைரேகை பதிவு செய்யமுடியாதநிலை இருப்பதால் அவர்களால் பொருள்களை ரேசன் கடையில் பெற இயல வில்லை. மழைகாலம் துவங்கியுள்ள நிலையில் திருமங்கலம் நகரில் ஓடும் குண்டாற்றில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்றவேண்டும், ஷட்டரை திறந்துவிட்டு அடைப்பு களை நீக்கி நீர்வரத்து கால்வாய் மூல மாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த னர்.

    நகராட்சி கவுன்சிலர்கள், தலைவர்களின் கோரிக்கை யின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார்.

    • மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
    • ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரம் கீழவீதியில் அமைந்துள்ளது தேரடி குளம். இந்த குளத்தை அப்பகுதி மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர். சமீப காலமாக ஆகாய தாமரை, செடி கொடிகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குளம் காணப்பட்டது.

    இது குறித்து 13-வது வார்டு நகா்மன்ற உறுப்பினர் மயில்வாகனன் கோரிக்கையை ஏற்று வேதாரண்யம் நகராட்சி தலைவா் புகழேந்தி, ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின் பேரில் ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    ஆட்களோடு வார்டு கவுன்சிலர் மயில்வாகணன் இறங்கி வேலை செய்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

    ×