search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attached"

    • புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
    • சரியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வது உள்பட எந்த தவறும் செய்யாதபட்சத்தில் நோட்டீஸ் ஏதும் அனுப்ப மாட்டோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வணிக வரித்துறை துணை கமிஷனர் முருககுமார் தலைமை வகித்து பேசியதாவது:-

    புதிய ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். அரைகுறை ஆவணங்களுடன் விண்ணப்பிப்பதாலேயே பதிவு எண் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய பதிவு சார்ந்த கள ஆய்வின்போது சில வணிக நிறுவனங்களை கண்டறிய முடிவதில்லை. அனைத்து வர்த்தகர்களும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மாதாந்திர ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டும். பல்வேறு காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பினால் உடனடியாக பதிலளிக்க வேண்டும். காலம்தாழ்த்தினால் நோட்டீஸ் உத்தரவாக மாறும். அபராதம் செலுத்தவேண்டிய நிலையும் ஏற்படும்.

    ஜி.எஸ்.டி., சார்ந்து எந்த சந்தேகம், விளக்கங்கள் தேவைப்பட்டாலும் வணிக வரி அதிகாரிகள், அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். சரியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வது உள்பட எந்த தவறும் செய்யாதபட்சத்தில் நோட்டீஸ் ஏதும் அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் மாவட்ட வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் பேசுகையில், காலதாமதமாக செலுத்தப்படும் வரிக்கு 18 முதல் 14 சதவீதம் வரை வட்டி தொகை வசூலிக்கப்படுகிறது. இதை 6 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு கருத்துரு அனுப்பவேண்டும்.

    தொழில்நுட்ப கோளாறுகளால் ஆன்லைனில் பதிவு சான்றுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றார். 

    ரூ.4 ஆயிரத்து 300 கோடி பினாமி சொத்துகளை முடக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய நிதி இணை மந்திரி பிரதாப் சுக்லா தெரிவித்தார். #BenamiProperties #ShivPratapShukla
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி இணை மந்திரி பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    பினாமி சொத்துகளை கண்டறிந்து முடக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பினாமி பரிமாற்ற நடவடிக்கைகளை வருமான வரித்துறையும் 24 மணி நேரமாக தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    கடந்த ஜூன் 30-ந் தேதி வரை 1,600 பினாமி பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் ரூ.4 ஆயிரத்து 300 கோடி பினாமி சொத்துகளை முடக்கி அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BenamiProperties #ShivPratapShukla #tamilnews 
    ×