search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூனியன் கூட்டம்"

    • கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய கணபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்விஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்பிரமணியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, மேலாளர் முனியப்பன், ஓவர்சீஸ் முத்துமாரி, கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முத்துக்குமார், சுரேஷ், உள்ளார் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி வாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி தலைமையில் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி வாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத் தில் ஆமத்தூர், குந்தலப்பட்டி, வள்ளியூர், பட்டம்புதூர், தம்ம நாயக்கன்பட்டி, சின்னவாடி, வி.முத்துலிங்காபுரம், தாதம்பட்டி, வச்சக்காரப்பட்டி, கன்னிசேரி புதூர், ஒண்டிப் புலிநாயக்கனூர், கட்டனார்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள யூனியன் தொடக் கப்பள்ளியில் உள்ள சமையலறைகளை தலா ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் மன்னார்குடி, சத்திரரெட்டியபட்டி, மற்றும் பட்டம்புதூர் கிராமங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களை ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • திருப்புல்லாணி யூனியன் கூட்டம் பெயரளவில் நடந்தது.
    • பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் சிவலிங்கம் பங்கேற்ற மறுப்பு தெரி வித்து பார்வையாளர் அமரும் இடத்தில் உட்கார்ந்தார்.

    கூட்டம் தொடங்கிய வுடன் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் பேசுகையில், 8-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தற்போ தைய திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையாவின் மனைவி கமலா தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

    இதற்கு முழு ஆதாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பதிவேட்டில் உள்ளது. அவர் கடந்த கூட்டத்தில் பங்கேற்றதாக போலியாக கையொப்பம் பெற்றுள்ளீர்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

    அவருக்கு ஆதரவாக துணை சேர்மன் சிவலிங்கம், காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆகியோர் போலி கையொப்பம் தவறா னது என்று தெரிவித்தனர்.அப்போது வெளியே நின்றிருந்த சிலர் கோஷ மிட்டனர். இதை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆவேசமாக சேரை எடுத்து வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

    அவரை தொடர்ந்து கவுன்சிலர்கள் மற்றும் துணைத்தலைவர் வெளி நடப்பு செய்தனர். பின்னர் 5 கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் மட்டுமே பங்ேகற்ற கூட்டரங்கில் சிறிது நேரம் விவாதம் நடந்தது. இதையடுத்து பெயரளவில் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் முடிந்தது.

    மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காண வேண்டிய யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்களின் நடவடிக்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்காமல் தேவையில்லாத விவாதங்களை கூட்டத்தில் எழுப்பி பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் லதாஅண்ணாதுரை தலைமையில் நடந்தது. ஆனையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்ட அலுவலர் வரவு-செலவு மற்றும் கூட்ட பொருள் பற்றி வாசித்தார். கீழபசலை ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் பேசுகையில், 15-ந்தேதி யூனியன் அலுவலகத்தில் டெண்டர் நடைபெற்றுள்ளது. இதுபற்றி குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அதிகாரிகளுக்கு தெரியாத திட்டங்கள் இல்லை.

    ஆனால் ஆனையாளர் இங்கு நடைபெறும் டெண்டர் பற்றி தெரியாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த டெண்டர் இது என்று கூறுகிறார். இங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி நடைபெறும்? ஒன்றியகுழு உறுப்பினர்களிடம் தெரியாது என்று கூறக்கூடாது. எங்கள் ஊரில் நடைபெறும் பள்ளி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கூட்டுகுடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். 

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்திற்கு பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்ரமணியன், விஜயபாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், ஓவர்சீஸ் ராமசாமி, முத்துமாரி, அலுவலர்கள், பணியாளர்கள், சிலம்பரசன், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் அனைத்து கவுன்சிலர்களின் வார்டுகளிலும் உள்ள அடிப்படை மற்றும் அவசர பணிகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, தீர்மானத்தில் ஏற்றப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என்று பேசினார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணா தேவி பாலசுப்பிரமணியன், விஜய பாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், உதவி பொறியாளர் அருள் நாராயணன், மேலாளர் கருத்தப்பாண்டியன், அலுவலர் சிலம்பரசன், அரசு ஒப்பந்ததாரர் கதிர், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக கவுன்சிலர் கூறினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்-வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் வரவேற்றார்.

    இதில் பா.ஜ.க. கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், மக்கள் திட்ட பணிகள் எதுவும் இந்த கூட்டத்தில் இடம் பெறவில்லை. செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பணிகள் நடந்தால் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றார்.

    பா.ஜ.க. கவுன்சிலர் கதிரவன் பேசுகையில், போகலூர் யூனியனில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும். நிதி ஆதாரத்தை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளித்து பணிகள் வழங்க வேண்டும் என்றார். அதற்கு துணைத்தலைவர் பூமிநாதன் பதில் அளிக்கையில், இது குறித்து அனைவரும் பேசி முடிவு எடுப்போம் என்றார்.

    பின்பு பா.ஜ.க. கவுன் சிலர்கள் 3 பேரும் இந்த அஜெண்டாவில் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் இடம் பெறவில்லை.

    ஆகை யால் இந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறி வெளி நடப்பு செய்தனர். பின்பு மற்ற கவுன்சிலர்களில் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் கூறியதாவது:-

    பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.70 லட்சத்தில் சாலை வசதிகள், பள்ளிகளில் சுத்திகரிப்பு குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சுகாதார வளாகங்கள் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

    சரிவர மழை பெய்யாததால் போகலூர் ஒன்றியத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்றுஎம். எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் ஆகியோரது பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். யூனியன் மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    • கமுதி யூனியன் கூட்டத்தில் கோரிக்கைகளை வேற்றக்கோரி கவுன்சிலர் உடலில் மண்எண்ணை ஊற்றினார்.
    • கூட்டத்தில் மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்விபோஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், உதவி சேர்மன்.சித்ரா தேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.

    அ.தி.மு.க. (ஒ.பி.எஸ்.அணி) பேரையூர் கவுன்சிலர் அன்பரசு, கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை திறந்து தலையில் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது மண்எண்ணை மற்ற கவுன்சிலர்கள் மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

    சேர்மன் தமிழ்செல்வி போஸ் 11-வது வார்டு பேரையூர் கவுன்சிலில் நடந்த திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும் பேரையூரில் ரூ.50 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

    அப்ேபாது கவுன்சிலர் அன்பரசு, பிற துறை அதிகாரிகள் யாரும் யூனியன் கூட்டத்திற்கு வருவதில்லை. மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளதை மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். உடனே மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுந்து, பழுதடைந்துள்ள மின்கம்பங்களை படிப்படியாக மாற்றி வருகிறோம் என்றார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் யூனியன் கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் தெரிவித்தார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா. கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர் பார்வதி பேசுகையில், மேலக் கிடாரம் கிராமத்தில் கண்மாய் கரையை சேதப் படுத்தியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையாளர் கண்மாய் கரையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.

    கவுன்சிலர் மாய கிருஷ்ணன் பேசுகையில், ஓரிவயலுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை சரி செய்ய நிதி ஒதுக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஜெயச்ச ந்திரன் பேசுகையில், மீனங்குடி, கருங்குளம் கடுகு சந்தை ஆகிய ஊராட்சிகளில் உள்ள தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனங்குடி கிராமத்தில் இருந்து அம்மன் கோவில் செல்லும் சாலையை மெட்டல் சாலையாக அமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் அம்மாவாசி:- சிக்கல் பாண்டியன் ஊரணியை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். கவுன்சிலர் காதர் சுல்தான் அலி:- வாலிநோக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் பிச்சை:- ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். கவுன்சிலர் பைரோஸ் பானு ஜலில்:- ஒப்பிலான் கிராமத்தில் இருந்து செல்லும் கடற்கரை சாலை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனையூர் கிராம பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் வசந்தா கதிரேசன்:- மாரியூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் ராஜே ந்திரன்:- வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உசவன் குளம் கிராமத்தில் இருந்து வாலிநோக்கம் செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர்புரம் சாலை முதல் ராஜாக்கள் பாளையம் வரை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.

    • பரமக்குடி யூனியன் கூட்டம் நடந்தது.
    • பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் கூட்டம் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா முன்னிலை வகித்தனர். மேலாளர் லட்சுமி வரவேற்றார். கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அறிவு சார் மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இடம் கேட்கப்பட்டுள்ளது. யூனியன் அலுவலகத்தில் அதற்கான இடமில்லை.

    அறிவு சார் மையத்தை பரமக்குடி நகரின் மையப் பகுதியான பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், எமனேசுவரம் பகுதி, சந்தை கடை பகுதிகளில் அமைத்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும். அதேபோல் மையப் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளது. மாணவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, கலெக்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் அறிவு சார் மையம் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். உடனே அனைத்து கவுன்சிலர்களும் அறிவுசார் மையத்திற்கு இடம் வழங்க முடியாது என்று ஏக மனதாக அந்த தீர்மானத்தை நீக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நீக்கப்பட்டது.

    துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது. ஆனால் நிதி ஒவ்வொரு மாதமும் குறைவாகத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. யூனியனில் இருக்கும் நிதியையும் எங்கள் அனுமதி இல்லாமலேயே மாவட்ட நிர்வாகம் வங்கி கணக்கில் எடுத்து விடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் கூடுதலாக நிதி ஒதுக்கினால்தான் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆகவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

    • கண்ணங்குடி ஒன்றியத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என யூனியன் கூட்டத்தில் தீர்மானம் எழுந்துள்ளது.
    • பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி யூனியன்கூட்டம் தலைவர் மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சந்திர போஸ், ஆணையாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சுப்பிரமணியன் வரவேற்றார். யூனியன் தலைவர் பேசுகையில், ஒன்றியத்தில் நடைபெறும் திட்ட பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக பால பணிகள் நடைபெறும் பொழுது அதிகாரிகள் முன்னிலையில் கான்கிரீட் போடப்பட வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

    சில மாதங்களாக தேவகோட்டை நகரில் இருந்து கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளுக்கு வரும் சாலையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தலைவர் பேசுகையில், சித்தானூர், தாழையூர், கோடகுடி, தேரளப்பூர் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இது வேதனையாக உள்ளது.

    கண்ணங்குடி ஒன்றியத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்களால் தற்போது பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    துணைத் தலைவர் சந்திர போஸ் பேசுகையில், கண்ணங்குடி ஒன்றியத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக வழிப்பறி நடக்கிறது. இதுகுறித்து தலைவர் காவல்துறைக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை, பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது. மேலும் ஆண்கள் தற்பொழுது இரவு நேரங்களில் அச்சத்துடன் சாலைகளில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    திருப்பத்தூர் யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி   ஆய்வு செய்தார். 

    ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு ஒதுக்கப்படும் திட்ட நிதிகள் பற்றிய  விபரம், பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பீடு,  முடிவுற்ற பணிகளுக்காக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை, பிற துறைகளுக்கு கட்ட வேண்டிய கட்டணம், ஆக்கிரமிப்பு குறித்த விவரம், அவைகள் அகற்றப்பட்ட நிலவரம், மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீடு வழக்குகள், கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர், பணியாளர்களின் பணிவரன்முறை, நிலுவையிலுள்ள விவரம், பணியாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டார். 

    அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை  தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் முதலியவற்றை ஆய்வு செய்து அது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். 

    அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட உள்ள அலுவலகத்திற்கான இடம், அளவீடு, இடம்பெற வேண்டிய அலுவலகங்கள் அதற்கானவசதிகள் போன்றவற்றிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்தல் குறித்து கேட்டறிந்ததுடன்   கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ள இடத்தையும்  பார்வையிட்டார்.

    உதவி இயக்குனர் குமார், திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தென்னரசு, ஜஹாங்கீர் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள்   உடனிருந்தனர்.
    ×