search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம்
    X

    மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம்

    • மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் லதாஅண்ணாதுரை தலைமையில் நடந்தது. ஆனையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்ட அலுவலர் வரவு-செலவு மற்றும் கூட்ட பொருள் பற்றி வாசித்தார். கீழபசலை ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் பேசுகையில், 15-ந்தேதி யூனியன் அலுவலகத்தில் டெண்டர் நடைபெற்றுள்ளது. இதுபற்றி குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அதிகாரிகளுக்கு தெரியாத திட்டங்கள் இல்லை.

    ஆனால் ஆனையாளர் இங்கு நடைபெறும் டெண்டர் பற்றி தெரியாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த டெண்டர் இது என்று கூறுகிறார். இங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி நடைபெறும்? ஒன்றியகுழு உறுப்பினர்களிடம் தெரியாது என்று கூறக்கூடாது. எங்கள் ஊரில் நடைபெறும் பள்ளி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கூட்டுகுடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

    Next Story
    ×