search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Council"

    • கடலாடியில் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    சாயல்குடி

    கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெய ஆனந்தன் வரவேற்றார்.

    துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, மேலாளர் பாலதண்டாயுதம், கவுன்சிலர் குமரையா முன்னிலை வகித்தனர்.

    கடலாடி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கழிவறைகள் முறை யாக பராமரிக்கப் படாமல் உள்ளது. அதனை சரி செய்யவும், கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    கவுன்சிலர் பிச்சை: ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் ராமலட்சுமி: பொதிக்குளம் ஊராட்சி அருணகிரி கொட்டகை, ஆப்பனூர் ஊராட்சி இளையனை கொட்டகையில் பழுதடைந்த சாலைகளுக்கு தார் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் வசந்தா கதிரேசன்: மடத்தாகுளம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும். மாரியூர் வடக்கு தெரு பகுதியில் குடிநீர் தேவைக்காக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மாரியூர் வடக்கு தெருவில் நாடக மேடை அமைக்க வேண்டும். மாரியூர் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் நாடக மேடை அமைக்க வேண்டும்.

    கீழமுந்தல் கிராமத்தில் மின்வயர்கள் அடிக்கடி அறுந்து விழுகிறது. மின் வாரியம் புதிய மின்கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் முருகலட்சுமி மலைராஜ்: 10-வது வார்டு முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. காவிரி கூட்டு குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் செய்யது ராவியா: மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது, காமாட்சி புரம், பனையூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பொதுக் கழிவ றை பராமரிக்கப்பட வில்லை. முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் லதாஅண்ணாதுரை தலைமையில் நடந்தது. ஆனையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்ட அலுவலர் வரவு-செலவு மற்றும் கூட்ட பொருள் பற்றி வாசித்தார். கீழபசலை ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் பேசுகையில், 15-ந்தேதி யூனியன் அலுவலகத்தில் டெண்டர் நடைபெற்றுள்ளது. இதுபற்றி குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அதிகாரிகளுக்கு தெரியாத திட்டங்கள் இல்லை.

    ஆனால் ஆனையாளர் இங்கு நடைபெறும் டெண்டர் பற்றி தெரியாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த டெண்டர் இது என்று கூறுகிறார். இங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி நடைபெறும்? ஒன்றியகுழு உறுப்பினர்களிடம் தெரியாது என்று கூறக்கூடாது. எங்கள் ஊரில் நடைபெறும் பள்ளி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கூட்டுகுடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். 

    ×