என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் மாயமாகினர்.
    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள பிரண்டைகுளத்தை சேர்ந்தவர் முத்து இருளன். இவரது மகள் கலைச்செல்வி (வயது 22). பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்குமுன்பு ஊர் திரும்பினார். 

    இந்த நிலையில் வீட்டில் இருந்த கலைச்செல்வி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி துரைச்சாமிபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் காளீஸ்வரி(18). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி செய்தவர் மகேஸ்வரி (51). இவர் சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    வேனில் கடத்தி வந்த 2¾ டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் மதுரையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. கடத்தல்காரர்கள் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கி அதனை ஆலைக்கு அனுப்பி பாலிஸ் செய்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

    சில நேரங்களில் ரேசன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து, வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு காரியாபட்டி-மதுரை ரோட்டில் உள்ள மல்லாங்கிணறு-வலையங்குளம் சந்திப்பில் உணவு கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின்பிரைட் மேரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்தபோது 63 மூட்டைகளில் 2 ஆயிரத்து 835 கிலோ ரேசன் அரிசி (சுமார் 2¾ டன்) மதுரைக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மினி வேன், அரிசியை பறிமுதல் செய்தனர். வேனில் இருந்த 3 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில், அவர்கள் மதுரை காமராஜர் தெருவை சேர்ந்த பாண்டி (24), ஆறுமுகம் (32), முனீஸ்வரன் (23) என தெரிய வந்தது. இவர்கள் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கி மதுரையில் உள்ள ஆலைக்கு கடத்தி வந்துள்ளதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.


    விருதுநகர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அறி வுறுத்தலின்படி குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும்  நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் ஆய்வு கள் செய்யப்பட்டன. 

    விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே குடிநீர் உணவு மாதிரிகள் எடுத்து  ஆய்வு செய்யப்பட்டத்தின் அடிப்படையில் 13 கிரிமினல் வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2 வழக்குகளில்  அபராதமும், சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. 

    தன் தொடர்ச்சியாக இந்த வாரம் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இவற்றில் குறைகள் கண்டறி யப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு  உணவு பாதுகாப்புத் துறையின் மூலம்  நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. சந்தேகத் திற்குரிய குடிநீர் உணவு மாதிரிகள்  தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து  எடுக்கப்பட்டு  ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வுகளின் முடிவின் அடிப்படையில்  தயாரிப்பு நிறுவனங்களின் மீது  நீதி மன்றம் மூலம் வழக்குகள்  தொடரப்படும்.

    மக்களுக்கு கிடைக்கக் கூடிய குடிநீர்  பாதுகாப் பானதாக  இருக்க வேண் டும்.    குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள்  ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ்,  பொதுப் பணித்துறையில் இருந்து  நிலத்தடி நீர் அனுமதி சான்றிதழ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையில் இருந்து FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

    குடிநீர் விநியோகஸ்தர் கள், மொத்த விற்பனையாளர்கள்  உணவு பாதுகாப்பு  துறையில் உரிமம் மற்றும் பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பொதுமக்கள்  குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் கேன்கள்  வாங்கும்போது தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டுள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் கேன்களில் ISI  மற்றும் FSSAI  எண் இல்லை என்றால் அது போலியானது என்பதை  அறிய வேண்டும்.

    குடிநீர் தரம் மற்றும் உணவு கலப்படம் பற்றிய புகார்கள் இருந்தால் உணவு பாதுகாப்பு  துறையின் வாட்ஸ்அப் புகார் எண்: 94440-42322 என்ற எண்ணுக்கோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மாவட்ட உணவு பாதுகாப்பு  துறை அலுவலக 04562-225255 எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை தொந்தரவு செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.  இவர் தினமும் அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். பஸ்சில் செல்லும் போது குராயூர் பகுதியைச் சேர்ந்த வாலிபரும் பயணம் செய்வது வழக்கம். 

    அவர் அந்த மாணவியை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை செய்து வந்ததாக தெரிகிறது. பலமுறை மாணவி எச்சரித்தும் அந்த வாலிபர் பின்தொடர்வதை நிறுத்தவில்லை.

    இதனால் அந்த மாணவி அந்த வாலிபர் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று காலை அந்த மாணவி வழக்கம் போல் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவரை வாலிபர்பின் தொடர்ந்துள்ளார். 

    இதைப்பார்த்த மாணவியின் உறவினர்கள் வாலிபரை கையும், களவுமாக பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். 10க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்கியதால் அதிர்ச்சியடைந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார்.  இருப்பினும் அவருக்கு அடி-உதை விழுந்தது. 

    பின்னர் உறவினர்கள் எச்சரித்த பின் அந்த வாலி பர் அங்கிருந்து தப்பினார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் ஒரு கும்பல் வாலிபரை தாக்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் 1 மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவலை சேகரிக்க முடியவில்லை. தாக்கியவர்கள் விவரம், தாக்கப்பட்ட வாலிபரின் பெயர் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் ஏமாற்றத்துடன் சென்றனர்.

    விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மக்கள் கூடும் இடமான இங்கு சட்டம், ஒழுங்கை பாதுகாக்க புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு போலீசார்  இல்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    2 ரெயில்களில் ஒருவர்பின் ஒருவராக பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். அடுத்த பிறவியிலாவது சேர்ந்து வாழ வேண்டும் என கடிதத்தில் உருக்கமான தகவல் எழுதப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள எம்.ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகள் சோலைமீனா (வயது 20). விருதுநகரில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி பள்ளியில் 2-வது ஆண்டு படித்து வந்தார். பயிற்சிப்பள்ளியுடன் இணைந்த ஆஸ்பத்திரியில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இவரும், சாத்தூர் அருகே உள்ள சிறுகுளத்தை சேர்ந்த பிரவீன் குமார் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பிரவீன் குமார் எலக்ட்ரீசியன் ஆவார்.

    இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் சோலை மீனா தனது ஊர் அருகே உள்ள பட்டம்புதூர் ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு திடீரென பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்.

    இதுபற்றி தகவல் அறிந்த காதலன் பிரவீன்குமார் மனவேதனை அடைந்தார். இந்தநிலையில், விருதுநகர் வேலுச்சாமி நகர் அருகில் உள்ள தண்டாவளம் பகுதிக்கு சென்று குருவாயூரிலிருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக பிரவீன்குமார் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நீயும் (சோலை மீனா), நானும் சேர்ந்து வாழ முடியவில்லை. சாகவும் முடியவில்லை. ஏன் என்னை விட்டுச் சென்றாய்?. நீ இல்லாத இவ்வுலகில் நான் மட்டும் எப்படி வாழ்வேன்?

    என்னை மன்னித்துவிடு. தற்கொலைக்கு முக்கிய காரணம் மீனா பணியாற்றிய தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 3 பேர் தான் (இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்). அவர்கள்தான் எங்கள் சாவுக்கு முழுக்க காரணம். எங்களை வாழ விடாமல் பிரித்தார்கள். எங்களை சாவில் எப்படி பிரிப்பார்கள் என்று பார்ப்போம்? அடுத்த பிறவியிலாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு கடவுள் துணை இருக்கட்டும். என் மீது உண்மையான அன்பு வைத்த அனைவருக்கும் நன்றி.

    இப்படிக்கு பிரியாவிடையுடன் பிரவீன் குமார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உலக தண்ணீர் தினத்தை சிறப்பிக்கும் வகையில்  நாளை (-22ந்தேதி)  17 கிராம ஊராட்சிகளில்  சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய் யப்பட்டு வருகிறது. 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என்று முறையாக அறிவிக்க உலக தண்ணீர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நாளை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும்.

    சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும் கிராம ஊராட்சிகள் வருமாறு:-

    அருப்புக்கோட்டை- சுக்கிலநத்தம்,  வெள்ளையாபுரம். காரியாபட்டி-குரண்டி, நரிக்குடி- இலுப்பையூர், வத்திராயிருப்பு-ஆயர்தர்மம், கல்யாணிபுரம். வெம்பக்கோட்டை-இ.டி.ரெட்டியபட்டி, குகன்பாறை, கொங்கன் குளம், முத்தாண்டியாபுரம்,- புலிப்பாறைப்பட்டி. விருதுநகர்-சின்னவாடி, கோட்டையூர், முத்துலாபுரம், -நக்கலக்கோட்டை, நல்லம நாயக்கன்பட்டி, செங்குன்றாபுரம்.

    மேற்கண்ட கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட  கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 21-வது ஆண்டு விழா நடந்தது.
    சிவகாசி

     சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 20 மற்றும் 21-வது விளையாட்டு விழா நடந்தது.  கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று, தேசியகொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர் குளோரி டார்லிங் மார்க்ரெட் ஒலிம்பிக் கொடியை ஏற்றி  வைத்தார். 

    துணை முதல்வர் பாலமுருகன் கல்லூரி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சிறப்பு விருந்தினர் குளோரி டார்லிங் மார்க்ரெட் விளையாட்டு விழாவினை தொடங்கி வைத்து ஒலிம்பிக்ஜோதியை ஏற்றினார்.  வணிகவியல் துறை மாணவி சந்தியா விளையாட்டு விழாவிற்கான உறுதி மொழியை வாசித்தார். 

    அதனை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் ஏரோபிக் நடனம், மாணவிகள் நடனம், சிலம்பம், பிரமிடு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.  உடற்கல்வித்துறை இயக்குநர்  அய்யல்சாமி ஆண்டறிக்கை வாசித்தார். 

    நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர் குளோரி டார்லிங் மார்க்ரெட் தினமும் 30 நிமிடமாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். கோபம் அறிவை குறைக்கிறது. எனவே கோபத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.
     
    பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் சுசில்குமார் அணியும், பெண்கள் பிரிவில் பி.டி.உஷா அணியும் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தன. தனிப்பட்ட வெற்றியாளராக ஜான் பிரிட்டோவும், சுரபிஸ்ரீயும் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் யோகேஸ்வரன் நன்றி கூறினார்.
    வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந் துள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை, புலி, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 

    வத்திராயிருப்பை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி புலிகள் அதிகம் உள்ள பகுதி என கண்டறியப்பட்டு கடந்தவருடம் இந்த பகுதியை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் என்ற புதிய சரணாலயத்தை மத்திய, மாநில அரசுகள் அமைத்துள்ளது.

    இந்த பகுதிகளை சுற்றியுள்ள மலை அடிவார கிராமப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிடை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த கிடை மாடுகளை மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில்தான் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள்.
     
    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை யுனெஸ்கோ அமைப்பு  பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவித்து உள்ளதாலும்,  இந்தப் பகுதியில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதாலும் மேய்ச்சலுக்கு கிடை மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. 

    ஐகோர்ட்டு உத்தரவை மீறி வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்காக  அழைத்துச்சென்ற அலியார், லிங்கேஸ்வரன், அம்மாசி, அங்கப்பன், பாண்டி, சுப்பையா ஆகிய  6 பேரை எஸ்.கொடிக்குளம் வனத்துறையினர் கைது செய்து வனத்துறை அலு வலகத்தில் வைத்திருந்தனர். 

    இதனை அறிந்த உறவினர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பொது மக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி எஸ்.கொடிக்குளம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    மலை மாடுகளை நம்பியே தங்களது வாழ்வாதாரம் இருப்பதாகவும், உடனே தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் கைது செய்யப் பட்டவர்களை எந்தவித வழக்கும் இன்றி உடனே விடுவிக்க வேண்டுமென கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

     தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பாலாஜி, வனச்சரக அலுவலர் செல்லமணி, கூமாப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் மேய்ச் சலுக்கு சென்றதற்காக 6 பேருக்கும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து விடுவித்தனர்.  வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    தனது காதலியை காதலன் நண்பர்களுக்கு இரையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் பாண்டியன் நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும், விருதுநகர் மேலதெருவை சேர்ந்த ஹரிகரனும் காதலித்து வந்தோம்.

    சம்பவத்தன்று பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து கிடங்கிற்கு என்னை ஹரிகரன் அழைத்து சென்றார். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறினார். இதை ஏற்று நானும் அவரது ஆசைக்கு இணங்கினேன்.

    நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை ஹரிகரன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். சிறிது நாட்களில் அந்த வீடியோ குறித்த விவரம் தெரியவந்தது.

    அதனை அழிக்காமல் நான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார். அப்போது தான் ஹரிகரன் என்னை உண்மையாக காதலிக்கவில்லை என தெரியவந்தது.

    ஹரிகரனின் மிரட்டலால் அவர் அழைத்தபோதெல்லாம் சென்றேன். இந்த நிலையில் அவர் அந்த வீடியோவை அவரது நண்பர்களான மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோருக்கு அனுப்பி உள்ளார்.

    இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர்களும் அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டினர். இதில் மாடசாமி என்பவர் எனது வீட்டிற்கே வந்து தாயாரிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டினார். தொடர்ந்து மாடசாமி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இந்த நிலையில் அந்த வீடியோவை வைத்துக்கொண்டு மாரி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோரும் பலமுறை மிரட்டி உறவு கொண்டனர். இவர்களது மிரட்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஹரிகரன், மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

    இதன் அடிப்படையில் பாண்டியன் நகர் போலீசார் 8 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தனது காதலியை காதலன் நண்பர்களுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பேரியம் நைட்ரேட்டுக்கு தடை விதித்து இருப்பது பட்டாசு தொழிலை முடங்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.
    சிவகாசி:

    காற்று மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. பட்டாசு உற்பத்தியில் 80 சதவீத பங்கு பேரியம் நைட்ரேட்டுக்கு உள்ளது.

    குறிப்பாக சரவெடி பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் மிக முக்கிய தேவையாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பட்டாசு தயாரிப்பு சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை பகுதிகளில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் 90 சதவீதம் சரவெடிகள் தான் தயாரிக்கப்படுகின்றன.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் இந்த ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளித்திட வேண்டும்.

    பேரியம் நைட்ரேட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) அறிவித்தது.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) இந்த சங்கத்திற்குட்பட்ட பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தத்தை தொடங்கின. சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் இங்கு வேலை பார்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டால் பலவித பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டும் அவை புழக்கத்தில் உள்ளது.

    ஆனால் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு செய்யாத சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட்டுக்கு தடை விதித்து இருப்பது பட்டாசு தொழிலை முடங்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

    உலகில் வேறு எங்கும் தடை இல்லாத நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டாசு தொழிலை முடக்க முயற்சிக்கும் மத்திய-மாநில, மாவட்ட நிர்வாகங்களை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    பட்டாசு ஆலைகள் நாளை (21-ந் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்க தலைவர் காத்த லிங்கம் அறிவித்துள்ளார்.

    சிவகாசி:

    காற்று மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு பயன்படும் முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப் பொருளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    இதனை நீக்க வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு கேட்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தபோவதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் (டாப்மா) அறிவித்தது.

    இந்த சங்கத்திற்குட்பட்ட பட்டாசு ஆலைகள் விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை செவல்பட்டி, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இங்கு 90 சதவீத சரவெடிகள் மட்டும் தயாரிக்கப்படுகின்றன.

    தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாளை (21-ந் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்க தலைவர் காத்த லிங்கம் அறிவித்துள்ளார்.

    ராஜபாளையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ராஜபாளையம், 

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ராமலட்சுமி (வயது36). இவர்களுக்கு கவிதா (15) என்ற மகளும், கல்யாண்குமார் (12) என்ற மகனும் உள்ளனர்.

    குடும்பதகராறு காரணமாக ராமலட்சுமி வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரது தந்தை நாராயணன் புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×