என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுக்க கோர்ட்டில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகரில் காதலனுடன் இளம்பெண் நெருக்கமாக இருந்த வீடியோவை காண்பித்து மிரட்டி 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக இளம்பெண்ணின் காதலன் ஹரிகரன் மற்றும் மாடசாமி, ரவி, ஜூனத் அகமது உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர் மைனர் என்பதால் மதுரையில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ. டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் துறைக்கு அனுப்பி உள்ளனர். பலாத்காரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள ஹரிகரன், மாடசாமி, ரவி, ஜூனத் அகமது 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்தது.

    அதன்படி டி.எஸ்.பி. வினோதி கைதான 4 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் கூறின. 

    விருதுநகர் அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் சூலக்கரையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பை சேர்ந்தவர் ராஜீவ் பாண்டி (வயது 42). இவர் ஆயுதப்படையில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வந்தார். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக ராஜீவ் பாண்டிக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. ராஜீவ் பாண்டி மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த நிர்மலாதேவி மற்றும் அவரது பெற்றோர் நேற்று ராஜீவ் பாண்டி மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்றனர். இதை அறிந்த ராஜீவ் பாண்டி வழியிலேயே அவர்களை மறித்து மனைவியை தாக்கி மிரட்டினார். ஆனாலும் கணவர் மீது நிர்மலாதேவி சூலக்கரை போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போலீஸ் ஏட்டு ராஜீவ் பாண்டியை கைது செய்து நேற்று இரவே ஜாமீனில் விடுவித்தனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஜாமீனில் வந்த ராஜீவ் பாண்டி தனக்கு நேர்ந்ததை எண்ணி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சூலக்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது ராஜீவ் பாண்டி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் ஏட்டு தற்கொலை குறித்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையத்தில் சொத்துவரி நோட்டீசு கொடுக்க சென்ற அதிகாரிகளை தாக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
    ராஜபாளையம்

     ராஜபாளையம் பழைய பஸ்நிலையம் அருகே ஒரு சமுதாய பொதுபண்டுக்கு பாத்தியப்பட்ட 150கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு 4ஆண்டுகாலமாக சொத்துவரி கட்டவில்லையாம். 

    மொத்தம் ரூ. 11லட்சத்திற்கும் மேல் வரி பாக்கி உள்ளது. பலமுறை கட்டுமாறு கோரியும் எந்த  நடவடிக்கையும் இல்லை. அவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக வரிகட்ட இயலவில்லை என பதில் கூறினர். 

    இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் சம்பளத்தில் அந்த சொத்துவரி பாக்கி பிடித்தம் செய்ய உயர் அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர். 

    எனவே நகராட்சி வருவாய் அலுவலர் முத்துச்செல்வன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், பொதுப் பிரிவு ஊழியர்கள் அந்த கடைக்காரர்களுக்கு நோட்டீசு கொடுப்பதற்காக சென்றனர். 

    அப்போது நகராட்சி அதிகாரிகளிடம் கடைக்காரர்கள் வாக்குவாதம் செய்துதாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

     போலீசார் விரைந்து வந்து பூட்டப்பட்டிருந்த வணிகவளாக கதவை திறந்து உள்ளே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. இரு தரப்பினரையும் சமரசம் பேசி நாளை (இன்று) சொத்துவரி பாக்கியை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பேரில், நகராட்சி அதிகாரிகள் கலைந்துசென்றனர். 

    இதற்கிடையே தங்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும், பணியின்போது தாக்க முயற்சித்ததாகவும், அவர்கள்மீது நடவடிக்கை கோரியும் ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் நகராட்சி அதிகாரிகள் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வருகிற 28-ந் தேதி முதல் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் பட்டியலில் பட்டாசு சேர்க்கப்பட்டது. இதனால் பல்வேறு கட்டப்பபாடுகள் விதிக்கப்பட்டதால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    அதிக சத்தத்தை வெளியிடும் சரவெடி, பேன்சிரக பட்டாசுகளுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதனால் சிவகாசியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் முழுமையாக செயல்படவில்லை.

    இந்தநிலையில் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், சரவெடி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் பங்கேற்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், பட்டாசு சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பட்டாசு ஆலைகளை திறக்குமாறும் அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி பட்டாசு தொடர்பான வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது.

    அதில் சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தது.

    வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வருகிற 28-ந் தேதி முதல் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ராஜபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ராஜபாளையம்

    மத்திய அரசின் வேளாண்மை, பொருளாதார, நிதிகொள்கைகளை கண்டித்தும், பொதுநிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் நிலையை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தவேண்டும் உள்பட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. 

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தை விளக்கி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டவிளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     
    தி.மு.க. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருவேட்டை போத்தி, கமலக்கண்ணன், சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மகாலட்சுமி, விருதுநகர் மாவட்ட செயலாளர் கணேசன், என்.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பிரபாகரன், பஸ் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணன் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டதலைவர் ராமச்சந்திரராஜா உள்பட ஏராளமான தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
    ராஜபாளையம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் சாஸ்தா கோவில் ரோடுபகுதியை சேர்ந்தவர் அழகம்மாள்(55). இவரது மகளை அதே ஊரை சேர்ந்த மாரிக்கண்ணன் என்பவர் காதலித்து வந்தார். 

    பெற்றோர் கண்டித்ததால் அந்தப்பெண் மாரிக்கண்ணனிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த மாரிக்கண்ணன் சம்பவத்தன்று காதலியின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

    அப்போது காதலிக்கு தான் செலவு செய்த ரூ.30ஆயிரத்தை தருமாறு கேட்டார். ஆனால் அழகம்மாள் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரிக்கண்ணன் அவரை அரிவாளால் வெட்டினார். 

    இதனை தடுக்க வந்த முகவூரை சேர்ந்த விக்னேஷ்(23) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த 2பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பேராபட்டியை சேர்ந்த 25வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு கடந்தவாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் வேலைக்கு சென்ற இளம்பெண் அதன்பிறகு வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ஆலங்குளம் அருகே உள்ள கீழான்மறைநாடு பகுதியை சேர்ந்த 19வயது பெண் பிளஸ்2 படித்து வந்தார். வீட்டில் இருந்த இவர் மாயமாகி விட்டதாக அவரது தாயார் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
    சிவகாசி அருகே உள்ள தெற்கு குப்பணாபுரத்தைச் சேர்ந்த 17வயது மாணவி மாயமானதாக எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி அருகே பட்டாசு விபத்தில் காயமடைந்த வடமாநில தொழிலாளி சிகிச்சை பலனின்றி இன்று பலியானார்.
    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் சத்திரப்பட்டியில் செட் அமைத்து பட்டாசுகள் தயாரித்து வந்தார். 

    கடந்த 20ந்தேதி இங்கு கழிவு பட்டாசுகளை தீவைத்து எரித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித் தது. இதில் பணி யில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிட் (வயது 26), நிஷான் (25), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹேமந்த்(20) ஆகியோர் காயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி தீக்காய தடுப்பு பிரிவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களில் மேல்சிகிச்சைக்காக  நிட், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை நிட் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அடிப்படை வசதிகள் குறித்து சேர்மன் திடீர் ஆய்வு செய்தார்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டி பேரூராட்சி 15வார்டுகள் கொண்டது. இந்த பேரூராட்சியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை மற்றும் குடிநீர் வசதி, வாறுகால் வசதி ஆகியவை குறித்து புதுப்பட்டி பேரூராட்சி சேர்மன் சுப்புலட்சுமி சாந்தாராம் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வு பணியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என சேர்மன் உறுதியளித்தார்.

    ஆய்வின்போது வ.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சிவஅருணாச்சலம், பேரூர் செயலாளர் சாந்தாராம், பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் உடனிருந்தனர். 
    விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கில் விசாரணையை தொடங்கிய சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு முத்தரசி கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்தார்.
    விருதுநகர்:

    விருதுநகரைச் சேர்ந்த 22 வயது பட்டியலின இளம்பெண் மாணவர்கள் உள்பட சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம் மனதை விட்டு மறைவதற்குள் இந்த சம்பவம் நடந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

    இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், துணை சூப்பிரண்டு அர்ச்சனா ஆகியோர் அதிரடி விசாரணை நடத்தினர்.

    கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹரிஹரன், தி.மு.க.வைச் சேர்ந்த ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 9, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மாணவர்கள் உள்பட 4 பேர் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறை காவலில் வைக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்ட பெண் விருதுநகர் சமூக நலத்துறை மூலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    இளம்பெண்ணிடம் காதல் ஆசை காட்டி ஹரிஹரன் தான் முதலில் பழகியுள்ளார். அவர் அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்துள்ளார். அதன்பிறகு அதனை காட்டியே அடிக்கடி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும், நண்பர்களுக்கு வீடியோவை அனுப்பி அதன் மூலம் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத் காரம் செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்தன.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஜீனத் அகமதுவை கட்சியில் இருந்து நீக்கி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டார். மேலும் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுவதாக சட்டசபையில் அவர் அறிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு முத்தரசி நியமிக்கப்பட்டார்.

    அவரது உத்தரவின்பேரில் மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வினோதினி, விருதுநகர் சென்று விசாரணை விவரங்களை கேட்டார். அவரிடம் விருதுநகர் துணை சூப்பிரண்டு அர்ச்சனா வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார்.

    கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டன.

    இன்று காலை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு முத்தரசி விருதுநகர் வந்தார். அவர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணையை தொடங்கினார். கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை அவர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தார். அவரை தனி இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார். அடுத்த கட்டமாக வழக்கில் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
    வத்திராயிருப்பு அருகே மதுபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அத்திகோயில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதியில் வசித்த மூக்கன் என்பவரது மகன் ஈஸ்வரன் (வயது 22) இவரது தாய்-தந்தை உயிரிழந்த நிலையில் தனியாக அந்த பகுதில் உள்ள உறவினர்களிடம் உணவு சாப்பிட்டு வந்தார்.

    மேலும் இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு இவர் மது அருந்திவிட்டு அந்தப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறக்கினர்.

    பின்னர் மீண்டும் அந்த வாலிபர் அந்தப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறினார். இதில் மின்சாரம் தாக்கி ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து கூமாபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எந்திரத்தில் சிக்கி காயமடைந்த ஒடிசா வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    விருதுநகர்

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நாராயணபாண்டே (வயது 27). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பிளாஸ்டிக் எந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அப்போது எந்திரத்தில் சத்தம் வந்தது. உடனே சூப்பர்வைசர்கள் சக்தி சுகுமாறன், திரவியம் ஆகியோர் நாராயணபாண்டேவை அழைத்து கோளாறை சரி செய்யுமாறு கூறியுள்ளனர். 

    அப்போது அவர் எந்திரத்தை ஆப்செய்தால்தான் கோளாறை சரிசெய்ய முடியும் என தெரிவித்துள்ளார். ஆனால் சூப்பர்வைசர்கள் எந்திரத்தை நிறுத்தாமல் சரிபார்க்கும் பணியை செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. 

    இதையடுத்து நாராயணபாண்டே எந்திரத்தை சரிசெய்ய முயன்றார். அப்போது அதில் சிக்கி அவர் படுகாயமடைந்தார். உடனே ஊழியர்கள் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணபாண்டே பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து வில்லிபத்திரி கிராம நிர்வாக அதிகாரி சக்திமுருகன் கொடுத்த புகாரின் பேரில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி சூப்பர் வைசர்கள் சக்திசுகுமாறன், திரவியம் ஆகியோர் மீது விருதுநகர் கிழக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ×