என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயம்
பெண் உள்பட 3 பேர் மாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள பேராபட்டியை சேர்ந்த 25வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு கடந்தவாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வேலைக்கு சென்ற இளம்பெண் அதன்பிறகு வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள கீழான்மறைநாடு பகுதியை சேர்ந்த 19வயது பெண் பிளஸ்2 படித்து வந்தார். வீட்டில் இருந்த இவர் மாயமாகி விட்டதாக அவரது தாயார் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள தெற்கு குப்பணாபுரத்தைச் சேர்ந்த 17வயது மாணவி மாயமானதாக எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






