என் மலர்
விருதுநகர்
- அருப்புக்கோட்டை அருகே கார்-மொபட் மோதி பெண் பரிதாப இறந்தார்
- இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஏ.முக்குளத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செல்வி (வயது30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. செல்வி அருப்புகோட்டை ஊர் காவல் படையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதுரையில் நடந்த உறவினர் விசேஷ நிகழ்ச்சிக்கு நண்பர் லட்சுமணன் (26) என்பவருடன் செல்வி மொபட்டில் சென்றார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் 2 பேரும் ஊருக்கு புறப்பட்டனர். மொபட்டை செல்வி ஓட்டி வந்தார். அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வி, லெட்சுமணன் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். லெட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஏ.முக்குளத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் கல்குறிச்சி பகுதியில் நடந்த விபத்தில் பரிதாபமாக இறந்தார். அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியால் செல்வதால் விபத்தில் சிக்கி இறப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- குடியரசு தினத்திற்காக பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடப்பட்டிருந்த 20 அடி கொடி கம்பத்தை தினேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர்.
- நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மூவரைவென்றான் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் கண்ணன் (வயது 51). இவரிடம் கட்டையதேவன்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், அவரது சகோதரர் செந்தில்குமார் ஆகியோர் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மூவரைவென்றான் பஞ்சாயத்தில் நேற்று முன்தினம் குடியரசு தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ்கண்ணன் நத்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தினத்திற்காக பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடப்பட்டிருந்த 20 அடி கொடி கம்பத்தை தினேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர்.
குடியரசு தினத்தன்று வேறொரு கம்பத்தில் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டபோது அங்கு வந்த தினேஷ்குமார், செந்தில்குமார் கொடியேற்ற விடாமல் தகராறு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெண்கள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியை தர்ஷனா நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உள்தர உத்தரவாத அமைப்பு மற்றும் மாண வர்கள் ஆலோசனை அமைப்பு இணைந்து கல்லூரி பெண்களுக்காக "மனம் மற்றும் ஆரோக்கியம்'' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
கணினிப் பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியை மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மற்றும் மாணவர்கள் ஆலோசனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். கலுசிவலிங்கம், சிவகாசி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலக நேர்முக உதவியாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு "பொது சுகாதார பிரச்சினைகள்" என்ற தலைப்பில் பேசினர்.
விருதுநகர் சுகாதார பணிகள் துணை இயக்கு நர்-தேசிய வளர் இளம் பருவத்தினருக்கான நலத்திட்ட ஒருங்கி ணைப்பா ளர் உதயசங்கரி பேசினார் ''வளரும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகள்" என்ற தலைப்பில் பேசினர். தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய ஊட்டச்சத்து குறைபாடு- பிரச்சினைகளை மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும் இந்த வயதில் ரத்த சோகை, அதிக எடை மற்றும் குறைந்த எடை போன்ற முக்கிய பிரச்சினைகளை விவரித்தார். இன்றைய சூழலில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு முறை ஆரோக்கிய மற்ற உணவுமுறை என்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு திட்டங்கள் அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.
திருத்தங்கல் அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர் "இளம் பருவ மனநலப் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் பேசினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தழுவி நல்வாழ்வுக்காக மாணவர்களை வழி நடந்தியது. மேலும் ஆரோக்கி யமான வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் நினைவாற்றலை மதிப்பீடு செய்ய இது மாணவர்களை ஊக்கப்படுத்தியது.
சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியை தர்ஷனா நன்றி கூறினார்.
- விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம் 12 இடங்களில் நடக்கிறது.
- ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பால திட்டப்பணிகள் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2020-21-ம் ஆண்டில் நிறைவு பெற வேண்டிய இந்த பணிகள் தற்போது வரை நிறைவடையவில்லை. இதை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே சொத்துவரி அதிகமாக விதிக்கும் நகரமாக ராஜபாளையம் உள்ளது. சென்னையை விட (12.40 சதவீதம்) அடிப்படை வரி விகிதம் அதிகமாக (20.80சதவீதம்) உள்ளது.
இந்த வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று நகர்மன்றம் 6 மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதுவரை வரியும் குறைந்தபாடில்லை. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் செல்ல முடியாமல் நிரம்பி உள்ளது. அனைத்தையும் சரி செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிப்ரவரி 1-ந் தேதி தேதி முதல் 6-ந் தேதி வரை ராஜபாளையம் நகரில் 12 மையங்களில் போராட்டம் நடத்துவது என்று கிளைச் செயலாளர், நகர் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு நகர குழு உறுப்பினர் மேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நகர செயலாளர் மாரியப்பன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- பயோமெடிக்கல் துறையில் சாப்ட்வேர் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடந்தது.
- சிறப்பு விருத்தினராக புனே ‘‘பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்’’ தலைமை பொறியாளர் தங்கராஜ் கலந்துகொண்டார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் பயோமெடிக்கல் துறையின் சார்பில் ''பயோமெடிக்கல் துறையில் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு'' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.
பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.
துறையின் 3-ம் ஆண்டு மாணவி நூரூல் பெர்த்ஹெஸ் வரவேற்றார். மாணவி சோபியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பயோமெடிக்கல துறையின் தலைவர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருத்தினராக புனே ''பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்'' தலைமை பொறியாளர் தங்கராஜ் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், நவீன காலத்தில் பயோமெடிக்கல் துறையின் பங்களிப்பானது சமுதாயத்திற்கும், மருத்துவத்துறைக்கும் மாற்றத்தை ஏற்படுத்திய துறை ஆகும்.
ஏெனனில் கொரோனா காலக்கட்டத்தில் நோயின் தீவிரத்தை கண்டறிய பி.சி.ஆர். கிட், தடுப்பூசிகள் போன்றவை பயோமெடிக்கல் துறையின் வளர்ச்சிகள் ஆகும். இன்று மருத்துவ துறையில் உள்ள அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் கருவிகளான (இ.சி.ஜி., சி.டி., எம்.ஆர்.ஐ., பல்ஸ் ஆக்சிமீட்டர்) வெப்ப நிலைமானி, ரத்த அழுத்தமானி, புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு கருவி, ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை கருவிகள் அனைத்தும் ''எம்படட்'' தொழில்நுட்ப த்தின் மூலம் கருவிகள் ஆகும்.
எம்படட் தொழில்நுட்பம் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பைப் பெறுவது எளிதானது என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் கீர்த்திகா, காளீஸ்வரி மற்றும் துறையின் பிற பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- பெண்கள் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள காந்தி நகரில் தனியார் சிறுவர் காப்பகம் உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மாசாணிமுத்து (வயது 15) சேர்க்கப்பட்டார். சம்பவத்தன்று காப்பகத்தில் இருந்த சிறுவன் திடீரென மாயமானார். இதுகுறித்து காப்பக நிர்வாகி அருணா கிரேசி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஹரிப்பிரியா (19). தையல் கடையில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி பொன்னு லட்சுமி (24). குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்த இவர் திடீரென மாயமானார். ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விருதுநகரில் குடியரசு தின விழாவில் 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.
- அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தினவிழா நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டு காலை 8.15 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. பாண்டி உள்பட 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 247 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முருகேசன், வெங்கடேஸ்வரன், ராஜேஷ், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், நகரசபை கமிஷனர் ஸ்டான்லி பாபு, மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் நற்சான்றிதழ் பெற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு சென்ற கலெக்டர் அங்கு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவுத் தூணில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, நகரசபை கமிஷனர் ஸ்டான்லிபாபு, கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
- அ.தி.மு.க. செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு காட்ட தயாரா? என ராஜேந்திரபாலாஜிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. சவால் விடுத்துள்ளார்.
- புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பொன்விழா மைதானத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டார்வேல்முருகன் தலைமை தாங்கினார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி, மாநில விவசாய அணி செயலாளர் விஜயன் , தலைமை கழக பேச்சாளர் நன்னிலம் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-
கடந்த 5 ஆண்டுகளில் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரெயில்வே மேம்பாலம், அரசு மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் வசதி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது சட்ட மன்ற உறுப்பினரானபோது ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிட்டு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் அதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது.
ராஜபாளையம் வட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்ததை பிரித்து மீண்டும் சிவகாசி கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
இனிவரும் ஆண்டுகளில் ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ராஜபாளையத்திற்கு அரசு பெண்கள் கல்லூரி, எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து அமிழ் ஓட்டல்வரை இணைப்புசாலை அமைத்தல், ராஜபாளையம் தொகுதியில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
ராஜபாளையம் வளர்ச்சிக்கான பணிகள் நடக்காதது போல, பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இதற்குமுன் இருந்த எந்தவொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வும் ஒரே ஒரு வளர்ச்சி திட்டமாவது கொண்டுவந்து செயல்படுத்தியதாக அவர் நிரூபிக்க தயாரா? இந்த கூட்டத்தின் வாயிலாக அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். ஆதாரங்களோடு நான் செயல்படுத்திக் கொண்டி ருக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் காட்டத் தயார். அவரால் முடியுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா , பேரூர் சேர்மன்கள் பாலசுப்பிரமணியன் , ஜெயமுருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பா ளர் நவமணி பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோ வன் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேலு, துரை கற்பகராஜ், விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிச்செல்வம், மாணவரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்சங்கங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
- தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காமராஜர் சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தன், ஆட்டோ தொழிற்சங்க செல்வம் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி முன்னிலை வகித்தனர். 240 நாட்கள் நிறைவடைந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், கட்டிட தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆட்டோ,லோடு வேன்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம், ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்சங்கங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
- தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காமராஜர் சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தன், ஆட்டோ தொழிற்சங்க செல்வம் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி முன்னிலை வகித்தனர். 240 நாட்கள் நிறைவடைந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், கட்டிட தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆட்டோ,லோடு வேன்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம், ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளிகள் ரூ.5 கோடி வரை மானியத்துடன் சுயதொழில் கடனுதவி பெறலாம்.
- திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லாத மாற்றுதிறனாளிகள் மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் பெற்று சுயதொழில் தொடங்கலாம்.
வேலையில்லாத திண்டாட்டத்தினை போக்கு வதற்காக தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் சுயதொழில் கடனுதவி திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி தொழில் முனைவோர்களாக திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை நிறைவேற்றிட தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிறனாளிகள், 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.75லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையினை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத்தொழில் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை.
மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையில் திட்ட மதிப்பீடாக கொண்டு வரலாம்.
இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு மானியமாக ரூ.17.50 லட்சம் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மானியமாக வழங்கப்படு கிறது. திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்கு தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மானியங்களை பெற்று பயனடையுமாறும் மற்றும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 8925534036 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்கள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு இணைதளத்தில் வருகிற 29-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடர்பான தகவல்கள் இணைதளத்தில் பதிவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது கிரிக்கெட் விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவினர் கலந்து கொள்ளும் வகையில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது பிரிவினர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்கலாம்.
இதற்கு, தங்கள் அணி யினரை www.sdat.tn.gov.in என்ற இணைதள முக வரியில் பதிவு செய்து விருதுநகர் மாவட்ட வீரர்-வீராங்கனைகள் பெருமள வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளுக்கு இணைதளத்தில் வருகிற 29-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.






