என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 3 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தனர்.
    • முருகனின் மோசடி குறித்து அவர் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பனைக்குடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி. இவரது மகன் உதயக்குமார் (வயது 31). மாற்றுத்திறனாளியான இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து காரியாபட்டி பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் சர்வர் வேலை பார்த்து வருகிறார்.

    அப்போது உதயகுமாருக்கு உறவினர் பொட்டப்பச்சேரியை சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் உதய குமாரிடம், தான் திருச்சுழி நெடுஞ்சாலைத்துறையில் வேலை பார்த்து வருவதாகவும், மாற்றுத்திறனாளியான உனக்கு இடஒதுக்கீட்டில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    மேலும் அரசு வேலை பெற உயர் அதிகாரிகளுக்கு ரூ.15 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதயகுமாரிடம் முருகன் கூறி உள்ளார். இறுதியில் அரசு வேலைக்காக முருகனிடம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் கொடுக்க உதய குமார் ஒப்புக்கொண்டார்.

    உதயகுமார் அரசு வேலை விவகாரம் தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறினார். மகன் உதயகுமாருக்கு வேலை கிடைத்தால் போதும் என நம்பிய அவரது தந்தை சுப்பிரமணி நகைகளை அடகு வைத்தும், அதிக வட்டிக்கு கடன் வாங்கியும் பணத்தை ஏற்பாடு செய்தார்.

    பின்னர் 2021-2023 வரை முருகனின் ஜிபே எண்ணிற்கும், அவரது உறவினரான அகிலனிடம் ரொக்கம் மற்றும் கூட்டுச்சதிக்கு உடந்தையாக இருந்த முருகனின் தந்தையான சேகரிடம் ரொக்கப்பணம், மற்றும் அவரது நண்பர்களான சண்முகசுந்தரம், பஷீர்கனி, பிரபு, சூரியன்,ஹேமந்திர விஷ்வா, ஞானவேலன், சண்முகன், சதீஷ்குமார் ஆகியோருக்கு ஜிபே மூலமாகவும், ரொக்கப் பணமாகவும் மொத்தம் ரூ.11 லட்சம் வரை உதய குமார் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 3 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தனர். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதற்கிடையில் உதய குமாரிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். உதயகுமாரிடம் மோசடி செய்த பணத்தை வைத்துக்கொண்டு முருகன் ஆடம்பர வாழ்க்கை, கார், சொத்து, நண்பர்களுடன் போதை மயக்கம் என ஏக சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

    பணத்தை கேட்டு முருகனின் வீட்டிற்கு நடையாய் நடந்து கடும் உளைச்சலுக்கு ஆளான மாற்றுத்திறனாளி உதயகுமார் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். முருகனின் மோசடி குறித்து அவர் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து உதயகுமார் திருச்சுழி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    அதன்படி நரிக்குடி போலீசார் முருகன், அவரது தந்தை சேகர், உறவினர் அகிலன் மற்றும் கூட்டுச்சதிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்களான பொட்டபச்சேரியை சேர்ந்த பிரபு, சூரியன், பசீர்கனி, ஞானவேலன் உள்பட 12 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் மற்றும் கூட்டுச்சதிக்கு உடந்தை என பல்வேறு பிரிவுகளின் கீழ் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர் விசாரணையில் முருகன் நெடுஞ்சாலை துறையில் வேலை பார்த்து வருவதாக பொய் கூறி உதயகுமாரை மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் முருகனை கைது செய்து, மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சேகர், உறவினர் அகிலன் மற்றும் நண்பர்களான பிரபு சூரியன், ஞானவேலன் உட்பட 11 பேரை நரிக்குடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விரக்தியில் முத்திருளன் ஏற்கனவே ஒருமுறை தனது ஊரான வேம்பங்குடி பகுதியில் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வேம்பங்குடி காலனி பகுதியை சேர்ந்தவர் முத்திருளன் (வயது30), தனியார் வங்கி ஊழியர். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி (29) என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    தற்போது மனைவி-குழந்தைகளுடன் மறையூர் காலனி பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி சிலைமான் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்திருளன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தனியார் வங்கி வேலையையும் விட்டார். இதனால் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் மேலும் குடிக்கு அடிமையான நிலையில் எந்நேரமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதில் ஏற்பட்ட விரக்தியில் முத்திருளன் ஏற்கனவே ஒருமுறை தனது ஊரான வேம்பங்குடி பகுதியில் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முத்திருளன் மறையூர் காலனி வீட்டில் இருந்த வந்த நிலையில் அக்கம் பக்கம் யாருமில்லாத நேரம் பார்த்து திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் முத்திருளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மனைவியான விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கொரோனாவில் இறந்து போனவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வருகிறதா? என்று கேட்டார்.
    • சிறுவனின் தாயாரிடம் சிறுவனை கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பில் இடைநிற்றலான 5 மாணவர்களை கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் அம்மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஈடுபட்டார்.

    இது குறித்து அவர் மேற்கொண்ட கள ஆய்வில் இடைநிற்றலுக்கான காரணங்களை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கேட்டு அறிந்தார்.

    ஒரு மாணவனின் வீட்டிற்கு சென்ற கலெக்டர் மாணவனிடம் உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்.

    நீயும் லோடுமேன் வேலைக்கு தான் போகணும். லோடுமேன் வேலை எவ்வளவு கஷ்டம். இதெல்லாம் நீ தூக்கக்கூடாது. புக் மட்டும் தான் தூக்கணும். உதவி வேண்டுமானால் கேட்க வேண்டும் என தெரிவித்தார்

    அங்கிருந்த சிறுமியிடமும் தினமும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார் . சிறுமிக்கு உதவித்தொகை வருகிறதா என்றும் தாயாரிடம் கேட்டறிந்தார்.

    கொரோனாவில் இறந்து போனவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வருகிறதா? என்று கேட்டார்.

    ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எதுவும் இல்லாததால் விட்டு விட்டதாக என்று சிறுவனின் தாய் கூறினார்.

    என்னம்மா நீங்கள்... கொரோனாவில் இறந்தவர்களின் குழந்தைக்கு உதவித்தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளாரே என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயாரிடம் சிறுவனை கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும், சிறுவனிடம் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு எதிரே சந்தைப்பேட்டை தெரு அமைந்துள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது ஒரு சாக்கு மூடை ஒன்று ரத்தம் கசிந்த நிலையில் கிடந்துள்ளது.

    அந்த பகுதியில் ஏராளமான இறைச்சி கடைகள் இருப்பதால் யாராவது கழிவுகளை கொட்டிச் சென்று இருக்கலாம் என்று நினைத்தனர். ஒருசிலர் கொலையாக இருக்கலாம் என்றும் கூறினர்.

    இதையடுத்து அச்சத்தில் உறைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக எதிரே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்க்கு சென்று தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சாக்கு மூடை கிடந்த இடத்திற்கு சென்று அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதற்குள் அதே பகுதியில் மைக் செட் கடை வைத்திருக்கும் பிரகாஷ் (வயது 48) என்பவர் முகம், தலை, உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பிரகாசுக்கு திருமணமாகவில்லை என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்ததும், பின்னர் அந்த வேலைக்கு செல்லாமல் தனது தந்தையுடன் மைக் செட் போடும் தொழில் செய்து வந்ததும் தெரிந்தது.

    மேலும் தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அத்துடன் கொலையாளிகள் அவரை கொன்று சாக்கு மூடைக்குள் வைத்து வீசிச் சென்றிருப்பதன் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக் கப்பட்டும், தடயவியல் நிபுணர்ர்கள் வந்தும் கொலையில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

    பின்னர் பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது.
    • பக்தர்கள் இன்று முதல் 4 நாட்கள் அனுமதி.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.

    மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கார்த்திகை மாத பிரதோஷம், அமா வாசையை முன்னிட்டு இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 1-ந் தேதி வரை மலையேற வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது.

    தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பக்தர்களிடம் குழப்பம் நிலவியது.

    தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை இல்லை. மேலும் இந்த பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட வில்லை.

    இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரி மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை இல்லை எனவும், மேற்கண்ட 4 நாட்களில் வானிலையை கருத்தில் கொண்டும் தினசரி மழைப்பொழிவை பொறுத்தும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இன்று காலை பக்தர்கள் மலை யேறிச்சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார் கள். காலை 7 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப் பட்டு பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர்.

    கனமழை எச்சரிக்கை மற்றும் அனுமதி வழங்கு வதில் ஏற்பட்ட கால தாமதம் போன்ற காரணங்களால் சதுரகிரிக்கு இன்று மிக மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை தந்திருந்த னர்.

    பிரதோஷ தினமான இன்று மாலை சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பாக அபிஷேக, ஆரா தனைகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலு வலர் ராமகிருஷ்ணன் ஆகி யோர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
    • பிரதோஷம் மற்றும் அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வருகிற 28-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை 4 நாட்கள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

    பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். மேலும் இரவில் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பிரதோஷம் மற்றும் அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இசக்கி, ராம்குமார் வைத்திருந்த லத்தி, கம்புகளை பிடுங்கி அவர்களையே சரமாரியாக தாக்கினர்.
    • படுகாயமடைந்த 2 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு தொடர்பாக வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றனர்.

    அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்களை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் எச்சரித்தனர். இருப்பினும் அந்த கும்பல் அத்துமீறி நடந்து கொண்டதோடு இசக்கி, ராம்குமார் வைத்திருந்த லத்தி கம்புகளை பிடிங்கி அவர்களையே சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயமடைந்த 2 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்கள் லத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் அசோக்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ்காரர்களை தாக்கியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கீழ பால்பாண்டி (வயது 31), கிளிராஜன் (24), பாஞ்சாலி ராஜா (40) பாண்டியராஜ்(22) ஆகிய 4 பேரை தட்டிதூக்கி கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக இருந்த ராமநாதன் மகன் சரவணகார்த்திக்(33), சேவகன் மகன் முத்துராஜ்(34) ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    • பராமரிக்க என்ன முறைகளை விவசாயிகள் கையாள்கிறார்கள்.
    • அவர்களது ஆய்வு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் என்ன பயிர் பயிரிடப்படுகிறது, அதனை பராமரிக்க என்ன முறைகளை விவசாயிகள் கையாள்கிறார்கள் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்காக 192 மாணவிகள் மற்றும் 8 பேராசிரியர்கள் உள்ளடங்கிய குழு காரியாபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கி அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று வந்தனர். ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளனர். இதனால் அவர்களது ஆய்வு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.

    இந்நிலையில், மாணவியர்களின் சிரமம் குறித்து நிதி மற்றும் சுற்றுச்சுழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தன்னுடைய மல்லாங்கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தை மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வழங்கினார்.

    மேலும், வருகின்ற 20ஆம் தேதி வரை மாணவியர் தங்குவதற்கு ஏதுவான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். இதனிடையே, மாணவியரை நேரில் சந்தித்த அமைச்சர் அவர்களுடன் உரையாடி அனைத்து வசதிகளும் போதுமானதாக உள்ளதா என கேட்டறிந்தார். 

    • ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.
    • உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது," வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர், "வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

    உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.

    முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்" என்றார்.

    இத்திட்டத்தின் மூலம் 1.16 கோடி பெண்கள் மாதந்தோறும் உரிமைத் தொகை பெறுகின்றனர். இதில் தகுதி இருந்தும் பலருக்கு ரூ.1,000 கிடைக்கவில்லை என புகார் எழுந்த நிலையில், அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

    • இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
    • அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள் பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் காலை 6 மணிக்கு பிறகு குறைவான எண்ணிக்கையில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நின்றனர்.

    பின்னர் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட் டது.

    மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும் பக்தர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவான எண்ணிக்கையில் இருந்தது.

    இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தை யொட்டி மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் ஐப்பசி மாத பவுர்ணமியில், சுந்தர மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் அதிகளவில் பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள்.
    • உங்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக எனது பணிகள் தொடரும்.

    விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, விருதுநகர் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    ஏழை எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை இந்த மேடையில் மணிக்கணக்கில் என்னால் சொல்ல முடியும். தமிழர்களின் வீர விளையாட்டான அரங்கம் அமைத்தது பயனற்ற திட்டமா? மதுரையில் மாணவ-மாணவிகள் கல்வியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கலைஞர் நூலகம் அமைத்தது பயனற்ற திட்டமா? கிண்டியில் சிறப்பு மருத்துவமனை அமைத்து பயனற்ற திட்டமா? தமிழகம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவது பயனற்ற திட்டமா? இதில் எதை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இப்படி வாய்தொடுக்காகவும் ஆணவத்துடன் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள்.

    தமிழக மக்கள் மனதில் கலைஞர் தவிர்க்க முடியாதவர். அவரது கொள்கைகளையும், சிந்தனைகளையும் செயல்படுத்தி வருகிறேன். கலைஞர் பிள்ளை என்பது மட்டுமல்லாமல் அவரது தொண்டனாகவும் வாழ்ந்து வருவதில் பெருமிதமடைகிறேன். அவரது புகழ் வெளிச்சம் இந்தியா முழுவதும் வீசுகிறது. அந்த வௌிச்சம் எடப்பாடியின் கண்களை கூச செய்கிறது.

    எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக உங்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக எனது பணிகள் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விருதுநகர் மாவட்டத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • தமிழ்நாட்டை உயர்த்த என்னுடைய சக்தியை மீறி உழைப்பேன்.

    விருதுநகர்:

    விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். 2-வது நாளான இன்று ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் பட்டம்புதூரில் நடைபெற்ற விழாவில் 58 ஆயிரம் பேருக்கு ரூ.417 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்தேன்.

    இதில் 1786 கிராமங்களுக்கு ரூ.1387.73 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

    அதேபோல் சமூக நலத்திட்டங்கள் மக்களை எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறது என்றும் ஆய்வு செய்தேன். விருதுநகர் மாவட்டத்தில் 95 சதவீதத்திற்கும் மேல் பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.

    நேற்றைய கள ஆய்வில் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றிருந்தேன். அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை சந்தித்தபோது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    அதன்படி பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் அனைத்து உயர்கல்வி வரையிலான அனைத்து செலவையும் அரசே ஏற்கும். இதனை மாவட்ட அளவில் முடிவு செய்து வழங்ககூடிய வகையில் கலெக்டரின் கீழ் தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும். அதற்கு முதல் கட்ட நிதியாக ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்கும்.

    காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் உள்ள கண்மாய்கள் ரூ.17 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். காரியாபட்டி வட்டத்தில் உள்ள தெற்கு ஆற்றில் ரூ.21 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்படும்.

    காளிங்கபேரி, வெம்பக்கோட்டை, அனைக்குட்டம், கோல்வார்பட்டி அணைகள் ரூ.23 கோடியே 30 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும். அணைகளின் அருகே ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பில் சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும்.

    அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பில் ரூ.350 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் மையம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    சிவகாசி மாநகராட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் மாநாட்டு கூட்டரங்கம் அமைக்கப்படும். விருதுநகர் நகராட்சியில் ரூ.24.50 கோடி மதிப்பில் சாலை வசதி, மேம்படுத்தப்படும். சாத்தூரில் ரூ.2 கோடி மதிப்பில் சாலைகள், பூங்காக்கள் அமைக்கப்படும்.

    ராஜபாளையம் நகராட்சியில் ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் வசதி அமைக்கப்படும். அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.3 கோடியில் மழைநீர் வடிகால் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்படும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கழிவறை, வாகன நிறுத்துமிடம் ஆகியவை ரூ.2.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இந்த விழாவில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் பரப்புரை செய்தேன். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றேன். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தனித்துறையை உருவாக்கினேன். அதன் மூலம் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது வந்த மனுக்களில் பெரும்பாலும் வீடு கட்ட வேண்டும். வீடு கட்டுவதற்கு பணம் இல்லை. புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம் என அதிகளவில் மனுக்கள் வந்தன.

    இதையடுத்து வருவாய் துறைக்கு உத்தரவு பிறப்பித்தேன். அதில் மக்களுக்கு எந்தளவுக்கு இலவச வீட்டு மனை வழங்க முடியுமோ? அந்த அளவிற்கு வழங்க நடவடிக்கை எடுங்கள். தீவிர நடவடிக்கை எடுத்ததின்பேரில் 2021-ம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து 10 லட்சத்து 3ஆயிரத்து 824 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது இது மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு உங்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சி தான் எனக்கு கிடைக்க கூடிய பாராட்டு.

    மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன். நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படக் கூடிய முதல்வனாக இருப்பேன். அப்படி தான் செயல்பட்டு வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு இந்தியளவில் அதிக சக்தி வாய்ந்த தலைவர்களில் எனது பெயரை குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பெருமையும் புகழும் தமிழக மக்களையே சாரும்.

    உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் ஸ்டாலினின் பலம். தமிழ்நாட்டை உயர்த்த என்னுடைய சக்தியை மீறி உழைப்பேன். இந்த உழைப்பினுடைய பயன்தான் எல்லா புள்ளி விவரங்களிலும் எதிரொலித்து வருகிறது.

    முதலில் வந்து விட்டோம் என்று ஒருபோதும் நான் திருப்தியடைவில்லை. என்னை விட என்னை முந்தி செல்வதற்கு இன்னும் வேகமாக பலர் ஓடி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்தள்ளதா? என்பதை அறிய மாவட்டந்தோறும் கள ஆய்வு நடத்தி வருகிறோம்.

    ஆனால் இதைபற்றி எதுவும் அறியாத மக்களை பற்றி கிஞ்சிற்றும் கவலைபடாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் நல திட்டங்களுக்கு மூலதன செலவுகளை அதிகமாக செய்து கலைஞர் பெயரில் தேவையில்லாத திட்டங்களுக்கு நிதியை வீணடித்து வருகிறோம் என உளறியிருக்கிறார். இதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. ஒருவர் பொய் சொல்லலாம். ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் சொல்ல கூடாது என்ற பேச்சு உள்ளது. பொய் சொல்லலாம். ஆனால் பழனிசாமி அளவிற்கு பொய் சொல்லக்கூடாது என கூறலாம். அந்த அளவிற்கு எடப்பாடி பழனிசாமி புளுகு மூட்டைகளை அவிழ்த்து வருகிறார்.

    தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாட்டிற்காக 80 ஆண்டுகாலம் ஓயாமல் உழைத்தனர் கலைஞர். மக்கள் திட்டங்களுக்கு அவரது பெயரை வைக்காமல் பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்களது பெயரையா வைக்க முடியும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    ×