என் மலர்
நீங்கள் தேடியது "வாகனங்கள் சேதம்"
- சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 15-க்கும் அதிகமான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தினர்.
- ராஜகோபால் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார் கண்ணாடிகளை சேதப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் ராஜகோபால் நகர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட லக்கரே - ராஜீவ்காந்தி நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் அந்த பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 15-க்கும் அதிகமான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தினர்.
அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தபோது அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ராஜகோபால் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார் கண்ணாடிகளை சேதப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கார்கள், மோட்டர் சைக்கிளை சேதபடுத்திய மர்மநபர்கள் யார்? என்பதை போலீசார் தேடி வருகிறார்கள்.
- 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
- எல்லைமீறி செயல்படும் ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை:
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் 3 வாலிபர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தாங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் அடித்து நொறுக்கினர்.
இதில் ஒரு கார், 16 ஆட்டோ, 10 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 27 வாகனங்கள் சேதம் அடைந்தன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றி உதவி கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது குடிபோதையில் எல்லை மீறி ரகளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான விஜய் என்ற ஜாக்கி, லாரன்ஸ் மற்றும் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் என்பது தெரியவந்தது. விஜய்க்கு 22 வயதும், லாரன்சுக்கு 23 வயதும் ஆகிறது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விஜய் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 12 வழக்குகளும், லாரன்ஸ் மீது கொலை மிரட்டல் உள்பட 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ஒருவனை அழைத்துக்கொண்டு அவனுக்கும் மது வாங்கி கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். லாரன்ஸ், விக்கி இருவரும் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியபோது தவறி விழுந்தனர். இதில் இருவருக்கும் வலது கை மற்றும் இடது கால் முறிவு ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
லாரன்ஸ், விஜய் இருவருக்கும் கை மற்றும் கால் பெரிய கட்டு போடப்பட்டு உள்ளது. இதனால் நடக்க முடியாத நிலையில் இருவரும் வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். போதையில் மோட்டார்சைக்கிள்களை அடித்து நொறுக்கிய 3 பேரும், அப்பகுதியில் குடியிருப்பு பகுதியில் மது அருந்தியதை சுரேஷ் என்பவர் தட்டிக் கேட்டதால் ரகளையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.
இதுபற்றி போலீசார் விஜயிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதலியை தன்னுடன் பேச விடாமல் பெண் வீட்டார் வீட்டில் அடைத்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மதுபோதையில் வாகனங்களை சேதப்படுத்தினேன் என்றும் விஜய் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, "ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தனர். எனவே எல்லைமீறி செயல்படும் ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
- மழை வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மூழ்கின.
- சேதமடைந்த கார்களை மறுபடியும் இயக்க முடியாத நிலையில் உள்ளனர்.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மழை வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மூழ்கின. இதனால், சேதமடைந்த கார்களை மறுபடியும் இயக்க முடியாத நிலையில் அதன் உரிமையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

- தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக். தொழிலதிபரான இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு விற்பனைக்காக ஏராளமான புதிய ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பழுதுநீக்கும் சர்வீஸ் நிலையமும் அமைந்துள்ளதால் அங்கு பலர் தங்களது வாகனங்களை விட்டு சென்றிருந்தனர்.
நேற்று இரவு வழக்கமான நேரத்தில் ஷோரூம் பூட்டப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்களும் புறப்பட்டு சென்றனர். நள்ளிரவில் அந்த ஷோரூமில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்துள்ளது. அடுத்து ஒருசில நிமிடங்களில் அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஷோரூம் உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாக வந்த கார்த்திக் ஷோரூம் அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தீ விபத்து ஏற்பட்டு வெப்பம் வெளியேறியது. இதையடுத்து அவர் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 19 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 9 சர்வீஸ் பணிக்காக வந்த ஸ்கூட்டர்கள் மற்றும் ஏராளமான கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அருகில் உள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக் கடை உள்ளிட்ட ஒருசில கடைகளிலும் தீ பற்றியது. இதில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.






