என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • நெடிமோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் நெடி மோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் இங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நீலதொட்டி அரசு பள்ளிக்குச் சென்று பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதுடன், கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுமொழியனூர் கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இந்த கல்வியாண்டில் நெடிமோழியனூரில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. இக்கிராம மாணவர்கள் மீண்டும் நீலதொட்டி அரசு பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், நெடிமோழியனூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் வந்து நெடி மோழியனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அதுவரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில், தங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க வேண்டுமென கிராம மக்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடந்த மாதங்களில் பெய்த மழையினால் இந்த குளம் நிரம்பியது.
    • குறிப்பாக நன்கு வளர்ந்த நிலையில் இருந்த விரால், ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் இறந்து போயின.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சி முதலியார்பேட்டை கிராமத்தில் ஊருக்கு நடுவில் குளம் உள்ளது. கடந்த மாதங்களில் பெய்த மழையினால் இந்த குளம் நிரம்பியது. இந்த நீரில் பல்வேறு வகையான மீன்கள் தானாகவே வளர்ந்தன. இந்நிலையில் சித்திரை மாதம் கடுமையான வெயில் அடித்தது. சில தினங்களுக்கு முன்பாக சூறாவளி காற்றுடன் வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது. இதில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக குளத்தில் வளர்ந்திருந்த மீன்கள் இறந்து மிதந்தன.

    குறிப்பாக நன்கு வளர்ந்த நிலையில் இருந்த விரால், ஜிலேபி, கெண்டை போன்ற மீன்கள் இறந்து போயின. இவைகள் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் முதலியார்பேட்டை கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அங்குள்ள வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இருந்தபோதும் இதுநாள் வரையில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள் அப்புறப்படு த்தப்படவில்லை. இதனால் இக்கிராமத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி, புதிய நீரை குளத்தில் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலியார்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விழுப்புரம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
    • கல்வித் தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவா ய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஜூன் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவு ள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ. பி.டெக், நர்சிங், பார்மசி போன்ற கல்வித் தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம்.

    இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடு நர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தனியார்துறையில் பணி வாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்தி றனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இம்முகாமில் பங்கேற்று பய ன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என சிறுவயது கனவெல்லாம் கிடையாது.
    • புதுச்சேரி ஜிப்மர் கல்லூரி அல்லது டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.

    செஞ்சி:

    நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விழுப்புரம் மாவட்டம்மேல் மலையனூரை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தற்போது பிரபஞ்சன் குடும்பத்தினர் செஞ்சியில் வசித்து வருகிறார்கள்.

    நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் பிரபஞ்சன் சென்னை அசோக் நகரில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கி படித்து வந்தார். அவர் கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு தான் பிளஸ்-2 முடித்துள்ளேன். தேர்வின் முதல் முயற்சியிலே இந்த வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தாய் மாலா, தந்தை ஜெகதீஷ் ஆகியோர் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

    எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என சிறுவயது கனவெல்லாம் கிடையாது. உயிரியல் பாடம் பிடிக்கும். அதை நன்றாக படித்தேன். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன். புதுச்சேரி ஜிப்மர் கல்லூரி அல்லது டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.

    முதுநிலை அறுவை கிச்சை நிபுணராக பணியாற்ற விரும்புகிறேன்.

    நான் 10-ம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் செஞ்சியில் உள்ள சாரதா மெட்ரிக் பள்ளியில் படித்தேன். பின்னர் சென்னை மேல் அயனபாக்கத்தில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் படித்தேன். சி.பி.எஸ்.இ-யின் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்தேன். அதிலிருந்துதான் அதிக வினாக்கள் வருகின்றன. அதனை சரியாக படித்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

    நீட் மிகவும் சிறப்பான தேர்வு. இந்த தேர்வு நிச்சயம் தேவையான ஒன்றாகும். நீட் தேர்வு மிகவும் கடிமானது என்ற எண்ணத்தில் இருந்து வெளி வரவேண்டும். கடின உழைப்பு அதிக அளவு பயிற்சி என்பது தான் வெற்றியை தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவன் செஞ்சியை சேர்ந்தவர் என்பதால் செஞ்சியை சேர்ந்த பிரமுகர்கள் மாணவன் பிரபஞ்சனுக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபஞ்சனின் தந்தை ஜெகதீஷ் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகவும், தாய் மாலா நெகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகவும் பணிபுரிகின்றனர்.

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு மின்சார கட்ட ணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழக பொதுமக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் தசரதன், ராஜே ந்திரன் தலைமையிலான காங்கிரசார் அளித்த மனுவில் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மின்சார கட்ட ணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தாக்கத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு வரும் நிலையில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணம் உயர்த்த ப்பட்டதால் மீண்டும் பாதிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படை வார்கள். எனவே தமிழக பொதுமக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விழுப்புரம் நகரத் தலைவர் ஹரிபாபு, நிர்வாகிகள் ஜெயமூர்த்தி, வி. ஆர். பி. பள்ளி தாளாளர் சோழன், தண்டபாணி, சங்கர் பிரகாஷ்,கேபிள் பார்த்திபன், இசைமாறன், திருமலை ,செல்வ முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தப்பியோடி தலைமறைவாக உள்ள வழுதாவூர் முகிலனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வானூர்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32) ஆகியோர் மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்தது. இக்கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இது தொடர்பான வழக்கு வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதில் வழுதாவூரைச் சேர்ந்த முகிலனின் கூட்டாளிகளான பிரபு, சந்துரு சில மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டனர். இதில் அருண்குமார், அன்பரசன் ஆகியோருக்கு தொடர்பிருந்தது. இதனால் பழிக்குப்பழி வாங்க இவர்களை முகிலன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதில் தனிப்படை போலீசார் முகிலனை தேடி சென்ற போது அவர் தப்பியோடியது தெரியவந்தது. தொடர்ந்து புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி, விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர், வானூர் பகுதிகளில் உள்ள முகிலனின் கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வானூரில் நடந்த இரட்டை கொலையில், புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடி தலைமறைவாக உள்ள வழுதாவூர் முகிலனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்: 

    மரக்காணம் அருகே பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நல்லாளம் கிராமத்தில் அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடபட்டு வந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து பிரம்மதேசம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்

    • அருண்குமாரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது.
    • தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). சில மாதங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இவர்கள் தினமும் மயிலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். 

    இவர்கள் நேற்று முன்தினம் மைலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது. அப்போது வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் வந்த போது, இவர்களை மர்மகும்பல் மடக்கி சுற்றி வளைத்தது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த மர்மகும்பல், அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இது தொடர்பாக வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையி லான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமை யில் தனிப்படை அமைத்து கொலையாளி களை பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீசாரின் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட அருண்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இவர் கூலிப்படையை வைத்தோ, அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ அருண்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களை வைத்தே அருண்குமாரை முகிலன் கொலை செய்திருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயத்தில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு மாவட்டத்தில் உள்ள கோர்ட்டில் சரணடைய உள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • 6 மாத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.
    • மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளார் என கூறினார்.

    விழுப்புரம்.ஜூன்.12-

    தமிழகத்தில் முதல் முதலாக 6 மாத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், செஞ்சி மஸ்தான் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் தொடங்கி ைவத்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் ஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் இன்று காலை 10 மணியளவில் விழுப்புரத்தில் திரெளபதி அம்மன் கோவில் தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் தொடங்கி வைத்தனர். இதில் எம்எல்ஏக்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவகுமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி, பிரபு மாவட்ட துணை சேர்மன் ஷீலா தேவி, விழுப்புரம் சேர்மன் சித்திக் அலி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்முடி நிருபர்களுக்கு கூறியதாவது:-

    விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருமை அளிக்கிறது. இதனையடுத்து தற்போது தமிழகத்தில் 1,40,000 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 4,348 குழந்தைகளுக்கு ஊட்டசத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நான் அரசியல் பேச வில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் சண்முகம் என்பவரது வீட்டில் இருந்தார். இந்நிலையில் கருணாநிதி ஆட்சியில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் விழுப்புரம் நகராட்சி விரைவில் மாநகராட்சியாக மாறும் என்று கூறினார். கடைசியாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நன்றி கூறினார்.

    • 2 வாலிபர்கள் தாக்கினார்கள்.
    • அசோகனை போலீசார் தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    பிரம்மதேசம் அருகே முறுக்கேரியில் வைத்திய நாதன் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரை கடந்த மாதம் 26-ந்தேதி கந்தாடு பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தாக்கினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த ஜீவா (வயது 28), அசோகன் (26) ஆகியோர் சம்பவத்தில் ஈடு பட்டது தெரியவந்தது. இதில் சம்பவத்தன்றே ஜீவாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த அரக்கோணத்தை சேர்ந்த அசோகனை போலீ சார் தேடி வந்தனர்.

    இவர் நேற்று நண்பகலில் பிரம்மதேசம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றதை போலீசார் பார்த்தனர். அவரை பின்தொடர்ந்த போலீசார், மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து அசோகனை கைது செய்தனர். அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அசோகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது.
    • போலீசார் துப்பு துலக்க முடியாமல் தினறி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் சில வருடங்களுக்கு முன்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனை போலீசார் கண்காணிக்க, மரக்காணம் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு அறை அமைக்கப் பட்டது. இவ்வாறு பல லட்சம் செலவில் மரக்காணம் சன்னதி தெரு, பள்ளிக்கூட தெரு, புதுவை ரோடு, மேட்டுத் தெரு, சக்திநகர், சால் ரோடு, பஸ் நிலையம் போன்ற இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டது.

    இந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பெரும்பா லானவை, அதாவது 90 சத வீதத்திற்கு மேல் பணி செய்ய வில்லை. இதனை சீர்செய்ய போலீசாரும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால் முக்கிய இடங்களில் நடக்கும் சமூக விரோத செயல்களில் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கொலை, கொள்ளை போன்றவைகள் நடக்கும் போது, அங்குள்ள மக்களிடம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த போலீசார் வலியுறுத்துகின்றனர். ஆனால், அரசால் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களின் பழுதுகளை நீக்கி சரி செய்ய போலீசாருக்கு மனம் வரவில்லை.

    எனவே, மரக்காணம் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 20 பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் ரோட்டு தெருவை சேர்ந்த பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து மடப்பட்டு- திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் 20 பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரோஸ்மா சக்கரவர்த்தி சாலை மறிய லில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மோட்டார் சரி செய்யப்பட்டு குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறி யதன் பேரில் சாலை மறி யலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×