என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொழில்நெறி வழிகாட்டும்மையத்தில் 16-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பழனி தகவல்
- விழுப்புரம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
- கல்வித் தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவா ய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜூன் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவு ள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ. பி.டெக், நர்சிங், பார்மசி போன்ற கல்வித் தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம்.
இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடு நர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தனியார்துறையில் பணி வாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்தி றனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இம்முகாமில் பங்கேற்று பய ன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்