என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மெத்யூவ் கார்மென்ட்ஸ் நிறுவனம் அன்னைதெரசா பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.
    • இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான மெத்யூவ் கார்மென்ட்ஸ் முன்பக்கம் அண்ணாமலையார் படமும் பின்பக்கம் அன்னை தெரசா படம் மற்றும் அந்த நிறுவனத்தின் பெயரும் பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.

    இதுகுறித்து இந்து முன்னணியினர் கோயில் இணை ஆணையர் குமரேசனிடம் முறையிட்டனர். இது போன்று பக்தர்களை மதமாற்றம் செய்ய தூண்டும் வகையில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள் ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைதொடர்ந்து இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் குமரேசன் இந்த செயலில் ஈடுபட்ட சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகி இருவரையும் 6 மாதத்திற்கு பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் திருக்கோவிலில் இந்த 6 மாத காலத்தில் சாமிக்கு எந்த அபிஷேகம் ஆராதனைகள் செய்யக்கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    • சபரிநாதன் தனது வேலையில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து வந்தார்.
    • உழைப்பாளர் தினத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    சேலம்:

    சேலம் மாரமங்கலத்துப் பட்டியை சேர்ந்த கோவிந்த ராஜ் மகன் சபரிநாதன், (வயது 35) சிகையலங்கார கலைஞரான இவர், அதே பகுதியில் 10 ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு காயத்திரி என்ற மனைவியும், யோகேஸ்வரன், என்ற 2 வயது மகனும் உள்ளனர்.

    சபரிநாதன் தனது வேலையில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து வந்தார். மே தினத்தையொட்டி தொழிலாளர்களின் திறமையையும், பெருமையையும் உணர்த்தும் வகையில் அவர் உலக சாதனை படைக்க திட்டமிட்டார்.

    அதன்படி நேற்று முன்தினம் காலை 9.15 மணி முதல் நேற்று காலை 9.15 மணி வரை, 24 மணி நேரம் தொடர்ந்து 45 பேருக்கு கட்டிங் சேவிங், 47 பேருக்கு கட்டிங் மட்டும் என மொத்தம் 92 பேருக்கு இலவசமாக முடி திருத்தம் செய்தார்.

    இவரது சாதனையை அங்கீகரித்து, வேர்ல்டு சூப்பர் டேலண்ட் அமைப்பு சார்பில் சபரிநாதனை பாராட்டி சான்றிதழ் வழங்கியது. சபரிநாதனின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

    இது குறித்து சபரிநாதன் கூறுகையில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், என் முடி திருத்தும் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இலவசமாக 92 பேருக்கு 24 மணி நேரம் தொடர்ந்து முடிதிருத்தி சாதனை புரிந்துள்ளேன். உழைப்பாளர் தினத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சித்ரா பவுர்ணமி வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 11.59 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

    இதனால் 5-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் என்றும், அன்றைய நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • 800 லிட்டர் ஊறலும் 30 லிட்டர் சாராயமும் கைப்பற்றப்பட்டது
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கியது

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயனுக்கு கிடைத்த தகவ லின்படி மாவட்ட அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப் பிரண்டு ரமேஷ்ராஜ் அறிவுறுத்தலின்பேரில் போளூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா தலை மையில் போலீசார் ஜமுனாம ரத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிங்கிணறு ஓடை அருகில் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான 800 லிட்டர் ஊறலும் 30 லிட் டர் சாராயமும் கைப்பற்றி அழித்தனர்.

    மேலும் அரசு மதுபானங் களை கள்ளத்தனமாக விற் பனை செய்த அத்திமலைபட்டை சேர்ந்த சாந்தி மற்றும் மட்டப் பிறையூர் சேர்ந்த முருகேசன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமி ருந்து 143 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • மழையின் அளவு 64.20 மில்லி மீட்டர் ஆகும்
    • பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    போளூர்:

    போளூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    மாலை 6 மணிக்கு ஆரம்பித்த மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. நேற்று பெய்த மழையின் அளவு 64.20 மில்லி மீட்டர் ஆகும்.

    திடீரென பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஆஞ்சநேயர் சிலை அருகில் தொடங்கி அண்ணா சிலை வரை நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூரில் அனைத்து மோட்டார் வாகன பணிமனை பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் கொண்டாடப்பட்டது.

    தொழிலாளர் தின பேரணி போளூர் ஆஞ்சநேயர் சிலை அருகில் தொடங்கி அண்ணா சிலை வரை நடைபெற்றது. பின்னர் கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தலைவர் பக்தவச்சலம் சங்கத் தலைவர், சையத்தாஜுதீன் சங்க செயலாளராக பி. கே. முருகன் பொருளாளர் கே. சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கே.பி.அண்ணாதுரை, எஸ்.ஆர்.டி.வேலு செயற்குழ உறுப்பினர்கள் வி.கே.முருகன், எம். செல்வம், மகாதேவன், இ.பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாத்தூர் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாத்தூர் ஊராட்சியில் மே தினத்தையெட்டி கிராம சபைக் கூட்டம் தலைவர் லட்சுமி பாபு தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் கமலக்கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது:-

    நமது ஊராட்சிக்கு செய்யாற்று குடிநீர் கொண்டு வர கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இடையில் கூடுதல் செலவாக 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கபட்டது.

    ஆனால் இவ்வளவு நிதி ஒதுக்கியும் மாத்தூருக்கு குடிநீர் மட்டும் வரவில்லை. என, கேள்வி எழுப்பினர்.

    இங்கு கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கும் அதிகாரியே பதில் சொல்லலாமே.

    மேலும் காலம் தாழ்த்தாமல் செய்யாற்று குடிநீரை மாத்தூருக்கு கொண்டு வர போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    செய்யாற்று குடிநீர் கொண்டு வந்ததற்காக மாங்கால் கூட்ரோட்டில் கட்டப்பட்டுள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியும், மாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள தரைதள நீர்தேக்க தொட்டியும் வீணாகித் தான் கிடக்கிறது.

    கடந்த முறை நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் செய்யாற்று குடிநீர் திட்டத்தைப் பற்றியே முன் வைத்தோம் ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

    அதிகாரிகளான நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என, சரமரியான கேள்வியை எழுப்பினர். இதனால் கிராம சபையில் பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டது.

    கிணற்றேரி, மாத்தேரி, சித்தேரி ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர் இவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    இதற்கான தீர்மானமும் கிராம சபையில் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில், ஊராட்சி முன்னாள் பொறுப்பாளர்களான பன்னீர் செல்வம், தேவராஜ், செல்வம், வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, புனிதா, விஜயலட்சுமி, சுரேஷ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

    • கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர்.
    • இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    கண்ணமங்கலம்:

    தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இயற்கை விவசாயம் முக்கிய பங்கு வகித்தது.

    அனைத்து தொழில்களை விட மக்கள் விவசாயத்தை கவுரவ தொழிலக செய்து வந்தார்கள்.

    விவசாயம் செய்பவர்களை இந்த சமூகம் சுய மரியாதையுடன் வாழவைத்தது. தமிழர்கள் பல விதமான பயிர் வகைகள், மண்வகைகள், நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர். அதனால் விவசாயம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

    தற்போது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே இயற்கை விவசாயத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என விவசாய ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஆட்கள் பற்றாக்குறையால் பழைய விவசாய கருவிகள் எல்லாம் தற்போது காணாமல் போய்விட்டன.

    இயற்கை விவசாயம் பழங்கால விவசாய கருவிகளை தற்போது உள்ளவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் கண்காட்சி நடந்தது.

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயிகள் ஊர்தோறும் உணவுத் திருவிழா நடைபெற்றது.

    கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் தானியங்கள், உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    நாட்டு வகை மாடுகள், இளவட்டக்கல், விவசாய பயன்பாட்டுக்கு உண்டான பழைய கருவிகள், ஏர் கலப்பைகள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள், மூலிகைகள் கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    இந்த கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர். மேலும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர். 

    • 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.
    • திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.

    வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகைத்தருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

    இதற்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் , ரூ .50-க்கான சிறப்பு தரிசனம் என இரண்டு பிரிவுக்கும் பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

    வரிசையாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், பேகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் பகுதிகளில் தூய்மை பணிகள் நடக்கிறது.

    கிரிவலபாதை மற்றும் கோவில் பகுதிகளில் அனுமதி பெற்ற பிறகு அன்னதானம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் ஆகியவை நிறுத்த அனுமதியில்லை.

    சாலையோர சிறுவணிகர்கள் அனுமதி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமே சிறு வணிக கடைகள் அமைக்க வேண்டும்.

    இந்த ஆண்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு திட்டி வாசல் வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான சோதனை முறையும் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    குற்ற நிகழ்வகள் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் பொது மக்களின் பாதுகாப்பிற்காக 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 14 கி.மீ கிரிவலப்பாதையில் தூய்மைப் பணிகள், தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகிறது.

    அவசரகால உதவிக்காக மருத்துவக்குழு 108 அவசர கால ஊர்தி மேலும் பல்வேறு மருத்துவ சேவைகளை தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது. சித்ரா பவுர்ணமியொட்டி தமிழகம் முழுவதும் இருந்து 1,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதற்காக திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ் நிலையங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் எ.வ வேலு சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கிரிவலப் பாதையில் பாதுகாப்பு பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் அனைத்து வசதிகளுடன் மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்களிலிருந்து கோவிலுக்கும், மற்ற பஸ் நிலையங்களுக்கும் ஆட்டோக்களில் செல்வர்.

    இதனால் திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி ஆட்டோக்களில் தனி நபர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

    மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175 232266 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணமில்லா பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு வருவதற்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    முக்கியமான இடங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 20 கட்டணமில்லா பஸ்கள் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் மூலம் கட்டணமில்லா பள்ளி வாகனங்கள் இயக்கப்பட உள்ளது.

    பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதியவர் கைது
    • 7 பேர் கொண்ட குழுவினர் நிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வன சரக பகுதியில் சில இடங்களில் வன விலங்குகளை வேட்டையாட மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

    இதையடுத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனகாப்பாளர்கள் சிரஞ்சீவி, முகமது சுல்தான், பாலாஜி, மறுவரசன், மணிவேலன், சங்கீதா ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுத்தி மலை, காப்புக்காடு, திருவண்ணாமலை - காஞ்சி சாலை காப்பு காட்டு ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புனல்காடு கிராமம் காப்பு காட்டை ஒட்டி சண்முகம் (வயது 69) என்பவர் அவரது பட்டா நிலத்தில் வனவிலங்கு வேட்டைக்காக மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் சோதனையில் மின்வேலியில் சிக்கி 2 ஆண் புள்ளிமான் மற்றும் ஒரு நாய் இறந்தது கிடந்ததும் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் மின்வேலி அமைத்த சண்முகத்தை கைது செய்து விசாரணை செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை
    • ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவல ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இது குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் :-

    தமிழகத்தில் அதிக அளவில் ஆன்மீக மக்களே உள்ளனர். 38 வருவாய் மாவட்டங்களில் அதிகளவில் ஆன்மீக மக்கள் வருகை தரும் மாவட்டங்க ளில் திருவண்ணாமலையும் ஒன்றாகும்.

    சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல- அமைச்சர், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதற்கு உதாரணம் கார்த்திகை தீபத்தின் போது 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பாதுகாப்பாக திரும்ப சென்றனர் என்று பெருமையாக பேசினார்.

    கார்த்திகை தீபப் பணியை அடிப்படையாகக் கொண்டு சித்ரா பவுர்ணமிக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கூறியது போன்று கோவிலில் வரிசையை நீளம் செய்தால் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருட்டு போன்ற செயல்கள் நடைபெறுவது தவிர்க்கப்படும்.

    சித்ரா பவுர்ணமி கோடை வெயிலில் வருவதால் குடிநீர் வசதியை கூடுதல் செய்ய வேண்டும். தூய்மை அருணை போன்ற தன்னார்வலர்கள் அமைப்பினர்களை கொண்டு அதிகளவில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கலாம்.

    அன்னதானம் வழங்கும் இடத்தில் உணவை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வழங்குவதை உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்து அதனை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் சித்ரா பவுர்ணமியொட்டி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் பெற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    கோவில் வளாகத்திற்குள் இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனை கருவிகளுடன் கூடிய அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

    மேலும் சித்ரா பவுர்ணமி பணிகளை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்து அவர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் முதல்- அமைச்சர் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், இந்து சமய அறநிலைத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையாளர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,, திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் வார்டு கவுன்சிலர் கார்த்தி வேல்மாறன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அருணாச லேஸ்வரர் கோவில் இணை ஆணையர் குமரேசன் நன்றி கூறினார்.

    • அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
    • சமண மதத்தை சேர்ந்தவர்களுக்கு திராவிட அரசு என்றென்றும் பாதுகாப்பாகவும் உறுதுணை யாகவும் இருக்கும்

    போளூர்:

    போளூர் அருகே உள்ள திருமலை கிராமத்தில் அமைந்துள்ள ஜெயின் மடத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் சகோதரியும் சோழகுலத்தின் இளவரசியமான குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தனர்.

    இந்த விழாவில் டாக்டர் ஸ்ரீ தவள கீர்த்தி பட்டாரக சுவாமிஜி தலைமை வகித்தார். தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக பொதுப்ப ணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    சமண மதத்தை சேர்ந்தவர்கள் உயிர்களிடத்தில் அன்பு, கருணை, காட்டுவதில் சிறந்தவர்கள் எந்த உயிருக்கும் தீங்கு விளைவைக்காதவர்கள் ஜாதி மொழி இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள் கொள்கையை உற்று நோக்கினால் திருவள்ளுவரே சமண மதத்தில் தான் தோன்றியிருப்பாரோ என்ற ஒரு ஐயம் ஏற்படுகிறது.

    சமண மதத்தை சேர்ந்த வர்கள் சிறுபான்மை யனராக இருந்தாலும் அவர்களுக்கு திராவிட அரசு என்றென்றும் பாது காப்பாக உறுதுணை யாகவும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் ஆர்.ராஜசேகர் நன்றி கூறினார்.

    ×