search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opening of the statue"

    • புதுக்கோட்டையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் சிலை திறக்கப்பட்டது
    • காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் முழு உருவ சிலையை, காணொலிக்காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி தமிழ்செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பார்த்தசாரதி, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அ.பாரதி, கவிஞர் தங்கம் மூர்த்தி, தயானந்த சரஸ்வதி சுவாமிகள், எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
    • சமண மதத்தை சேர்ந்தவர்களுக்கு திராவிட அரசு என்றென்றும் பாதுகாப்பாகவும் உறுதுணை யாகவும் இருக்கும்

    போளூர்:

    போளூர் அருகே உள்ள திருமலை கிராமத்தில் அமைந்துள்ள ஜெயின் மடத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் சகோதரியும் சோழகுலத்தின் இளவரசியமான குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தனர்.

    இந்த விழாவில் டாக்டர் ஸ்ரீ தவள கீர்த்தி பட்டாரக சுவாமிஜி தலைமை வகித்தார். தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக பொதுப்ப ணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    சமண மதத்தை சேர்ந்தவர்கள் உயிர்களிடத்தில் அன்பு, கருணை, காட்டுவதில் சிறந்தவர்கள் எந்த உயிருக்கும் தீங்கு விளைவைக்காதவர்கள் ஜாதி மொழி இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள் கொள்கையை உற்று நோக்கினால் திருவள்ளுவரே சமண மதத்தில் தான் தோன்றியிருப்பாரோ என்ற ஒரு ஐயம் ஏற்படுகிறது.

    சமண மதத்தை சேர்ந்த வர்கள் சிறுபான்மை யனராக இருந்தாலும் அவர்களுக்கு திராவிட அரசு என்றென்றும் பாது காப்பாக உறுதுணை யாகவும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் ஆர்.ராஜசேகர் நன்றி கூறினார்.

    ×