search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother Teresa"

    • அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • கிறிஸ்தவ பள்ளிகளின் பாதிரியார்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி புதுவை சட்டசபை எதிரே பாரதி பூங்காவில் உள்ள அவரின் சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    புதுவை மாநில பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில்சிலைக்கு மாலை அணிவித்தனர். பா.ஜனதா நிர்வாகிகள் செல்வம், ஜெயலட்சுமி, தமிழ்மாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும் சார்பிலும் வ.உ.சி மாலை அணிவிக்கப்பட்டது.

    புதுவை அரசு சார்பில் அன்னை தெரசா நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள அன்னை தெரசா சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், மற்றும்

    எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளின் பாதிரியார்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    • மெத்யூவ் கார்மென்ட்ஸ் நிறுவனம் அன்னைதெரசா பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.
    • இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான மெத்யூவ் கார்மென்ட்ஸ் முன்பக்கம் அண்ணாமலையார் படமும் பின்பக்கம் அன்னை தெரசா படம் மற்றும் அந்த நிறுவனத்தின் பெயரும் பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.

    இதுகுறித்து இந்து முன்னணியினர் கோயில் இணை ஆணையர் குமரேசனிடம் முறையிட்டனர். இது போன்று பக்தர்களை மதமாற்றம் செய்ய தூண்டும் வகையில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள் ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைதொடர்ந்து இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் குமரேசன் இந்த செயலில் ஈடுபட்ட சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகி இருவரையும் 6 மாதத்திற்கு பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் திருக்கோவிலில் இந்த 6 மாத காலத்தில் சாமிக்கு எந்த அபிஷேகம் ஆராதனைகள் செய்யக்கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    அன்னை தெரசா பிறந்தநாளையொட்டி சிறந்த சமூக சேவைக்கான விருதை பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த விருதை அவரது தாய்க்கு காணிக்கையாக வழங்குவதாக தெரிவித்தார். #RaghavaLawrence #MotherTeresaAward
    அன்னை தெரசாவின் 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.

    மதர் தெரசா சாரிட்டபிள் டிரெஸ்ட் சார்பில் நடந்த இந்த விழாவுக்கு அதன் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் டி.வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    விழாவில், மிகச் சிறந்த சமூக சேவைக்கான விருது திரைப்பட நடிகர், இயக்குனர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.

    விருது பெற்றது குறித்து ராகவா லாரன்ஸ் பேசியதாவது:-

    இந்த உலகத்தில் உள்ள முதல் கடவுளாக தாயைத் தான் நான் நினைக்கிறேன். நாங்கள் ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது. அப்போது நான் ‘பிரெயின் டியூமர்’ நோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன். பஸ்சுக்கு காசு இல்லாத நிலையில் என்னை எனது அம்மா, தோளில் சுமந்து ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அன்று என்னை அம்மா நம்பிக்கையோடு காப்பாற்றவில்லை என்றால், இன்று நான் இல்லை.

    எனவே இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன். நான் இந்த அளவு உயர்வதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். முதலில் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர், எனக்கு கார்துடைக்கும் வேலை கொடுத்து ஆதரவு அளித்தார்.



    அங்கு என்னைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார், எனக்கு கடிதம் கொடுத்து நான் டான்ஸ் மாஸ்டர் ஆக உதவி செய்தார். அமர்க்களம் படத்தின் மூலம் நடிகராகி இன்று இயக்குனர், தயாரிப்பாளர் என்று உருவாக எத்தனையோ பேர் உதவி இருக்கிறார்கள்.

    குறிப்பாக சூப்பர் சுப்பராயன், ரஜினிசார், விஜய், அஜீத், சிரஞ்சீவி, இயக்குனர் சரண், என்னை இயக்குனராக அறிமுகம் செய்த நாகார்ஜூனா சார் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

    ராயபுரத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து நானும், 3 சகோதரிகளும் எப்படியெல்லாம் வறுமையை அனுபவித்தோம் என்று சொல்லிமாளாது. பொறுமையாக வளர்ந்து நான் சம்பாதிப்பதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன். மக்கள் திலகத்தின் ‘தர்மம் தலைகாக்கும்’, பாடலையும், மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்ற ரஜினி சார் பாடலையும் மதில் வைத்துக் கொண்டு உதவி செய்து வருகிறேன்.



    சாதாரணமாக இருந்த என்னை இந்த அளவுக்கு உயர்த்திய மக்கள் தந்த பணத்தை நான் திருப்பிக் கொடுக்கிறேன். மத்திய மந்திரியாக அன்புமணி ராமதாஸ் இருந்த போது 10 குழந்தைகள் இருதய ஆபரே‌ஷனுக்கு உதவினார். திருநாவுக்கரசர் பேச்சு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் போகும் போது எடுத்துக் கொண்டு போவது இல்லை. ஜெயலலிதா அம்மாவும், கலைஞர் அய்யாவும் அவர்கள் செய்த தானதருமங்களைத்தான் எடுத்துப் போனார்கள். அதை மனதில் வைத்து இனி அன்னை தெரசா வழியில் செயல்பட முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம், குமரி அனந்தன், ராகவா லாரன்ஸ் தாயார் கண்மணி, மவுலானா இலியாஸ் ரியாஸ், முன்னாள் நீதிபதி பால் வசந்தகுமார், ரூபி மனோகரன், எல்.ஐ.சி. ஆர்.தாமோதரன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #RaghavaLawrence #MotherTeresaAward

    ×