என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "May Day Parade"

    • மே தினத்தை முன்னிட்டு மின் பணியாளர்கள், மின் மோட்டார் மின் பணியாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் மே தின தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மே தினத்தை முன்னிட்டு மின் பணியாளர்கள், மின் மோட்டார் மின் பணியாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் மே தின தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வர்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்ற தொழிலாளர்கள் சங்க கூட்டத்திற்கு வேலூர் தி.மு.க. நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.

    நாமக்கல் மாவட்ட தொழிற்சங்க தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் தொழி லாளர்களின் நல வாரி யத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கட்டுமான தொழி லாளர் சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஐ.என்.டி.யு.சி இயக்கத்தின் இணைப்பு சங்கமான நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மே தின ஊர்வலம் நடை பெற்றது.
    • 1000-த்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், பச்சை, வெள்ளை சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் ஐ.என்.டி.யு.சி இயக்கத்தின் இணைப்பு சங்கமான நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மே தின ஊர்வலம் நடை பெற்றது. இதில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், பச்சை, வெள்ளை சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தை மாநில செயலாளர் நல்லமுத்து தொடங்கி வைத்தார். இதில், தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் நமது நாட்டில் நசுக்கப்படுகின்றன. முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்கள் திருத்தப்படு கின்றன. இந்த அநீதி முறியடிக்கப்பட வேண்டும். தொழிலாளர்க ளுக்கு பாதுகாப்பு வேண்டும். போராடி பெற்ற 8 மணி நேரம் வேலை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் தொடங்கிய ஊர்வலம், பஸ் நிலையம் வழியாக தனியார் தங்கும் விடுதி வரை நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநில மூத்த பொதுச் செயலாளர் நல்லமுத்து, மாநில செயலாளர் தேவராஜூ, மேக்னசைட் தலைவர்கள் சரவணன், மாதேஸ்வரன், மகாலிங்கம், தலேமா தேசிய தொழிலாளர் சங்கம் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    அனைத்து தொழிலாளர்க ளுக்கும் மே தின நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

    • ஆஞ்சநேயர் சிலை அருகில் தொடங்கி அண்ணா சிலை வரை நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூரில் அனைத்து மோட்டார் வாகன பணிமனை பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் கொண்டாடப்பட்டது.

    தொழிலாளர் தின பேரணி போளூர் ஆஞ்சநேயர் சிலை அருகில் தொடங்கி அண்ணா சிலை வரை நடைபெற்றது. பின்னர் கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தலைவர் பக்தவச்சலம் சங்கத் தலைவர், சையத்தாஜுதீன் சங்க செயலாளராக பி. கே. முருகன் பொருளாளர் கே. சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கே.பி.அண்ணாதுரை, எஸ்.ஆர்.டி.வேலு செயற்குழ உறுப்பினர்கள் வி.கே.முருகன், எம். செல்வம், மகாதேவன், இ.பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஏற்காட்டில், பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது.
    • ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றடைந்து.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பொன் ரவி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றடைந்து. காந்தி பூங்காவில் நடந்த கூட்டத்தில் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் வரவேற்று பேசினார்.

    சங்க செயலாளர் ரகுராஜ் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் பேசினார். நிறைவாக சங்க பொருளாளர் ராஜாத்தி நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் பார்த்திபன், அன்னை இந்திரா கட்டுமான சங்க நிர்வாகி சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    ×