என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைவினை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன.
    • திருமண மாலைகள், கார்த்திகை பூ சுற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பம்பரம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் கீரின்நீடா என்ற சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் பனை திருவிழா நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழா அரங்கில் பனையில் இருந்து தயாரிக்கப்பட்டபனை அல்வா உள்ளிட்ட பொருட்கள், மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன.

    பனை திருவிழாவினை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் நாராயணன் தொடங்கி வைத்து பேசுகையில் பனைமரம் தமிழகத்தின் பாரம்பரிய மரம்.

    பனைமரம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கிறது. நாம் அனைவரும் வீடுகளில் பனை மரம் வளர்க்க வேண்டும். பனைமரத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

    மேலும் பனைத் திருவிழாவில் நாம் மறந்துபோன பனை ஓலை காத்தாடி, பனங்காய் நுங்கு வண்டி, பனங் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் பனை அல்வா, பனை குல்பி, பனை ஓலையில் செய்யப்பட்ட கைப்பை , திருமண மாலைகள், கார்த்திகை பூ சுற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பம்பரம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.

    இதுதவிர கவியரங்கம், கருத்தரங்கம், நாட்டுப்புறப் பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

    • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு விவசாயி.
    • மின்னல் தாக்கி தந்தை-மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது 53) விவசாயி.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தளிக்கோட்டை மற்றும் சுற்றுப்புற இடங்களில் கனமழை பெய்தது. இதனால் வயலில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் மூழ்கி விடும் என்று அஞ்சிய அன்பரசு தனது மகன் அருள்முருகனுடன் (28) நள்ளிரவு 2 மணிக்கு அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றார்.

    அப்போது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வடிய வைக்கும் பணியில் மகனுடன் ஈடுபட்டு கொண்டிருந்தார். இடி, மின்னலுடன் பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் இந்த பணி நடந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென மின்னல் தாக்கி அன்பரசு, அவரது மகன் அருள்முருகன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே வீட்டில் உள்ளவர்கள் அன்பரசு, அருள்முருகன் வீடு திரும்பாதது அறிந்து வயலுக்கு சென்று பார்த்தனர். அங்கு இருவரும் மின்னல் தாக்கி உடல் கருகி இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அன்பரசு, அருள்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்னல் தாக்கி தந்தை-மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அருள்முருகனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கத

    • கடையில் புகுந்து பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.
    • மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுமத்ரா. பெண்ணை தாக்கிய வழக்கில் அவரையும் அவரது கணவர் மற்றும் கூட்டாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சி தலைவராக இருப்பவர் சுமத்ரா. அதே ஊராட்சியில் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த செம்மலர்(42) என்ற பெண் பணித்தள பொறுப்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    அப்பெண்ணை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரவி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டதாகவும், அதுக்குறித்து செம்மலர் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நியாயம் கேட்டு பேசிய ஆடியோ பதிவு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதுக்குறித்து சில தினங்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் இருதரப்பினரையும் கண்டித்து அனுப்பியுள்ள னர்.

    இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 19ந்தேதி காலை சுமார் 11 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவரும் அவரது தரப்பினரும்- மணலி கடைவீதியில் செம்மலர் நடத்திவரும் தையற்கடையில் புகுந்து அப்பெண்ணை தாக்கியதோடு, நடுரோட்டில் தர,தரவென இழுத்து போட்டுள்ளனர்.

    அதுக்குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் மயக்கமுற்று கிடந்த செம்மலரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளர் கழனியப்பன் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குணசீலன்(32) என்பவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள சுமத்ரா மற்றும் அவரது கணவர் ரவி உட்பட 13 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவாகி உள்ள நிலையில் குடிநீர், சுகாதாரம், தெரு மின்விளக்கு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு யாரை நாடுவது என்று பொதுமக்கள் குழம்பியுள்ளதோடு - மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஊராட்சி நிர்வாகம் செயல்பட ஆவன செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறி வடிகால்கள் தூய்மைப்படுத்–தப்படவில்லை.
    • நேரடி தெளிப்பு செய்துள்ள சம்பா 30 நாள் நெற்பயிராக உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 3.5 கி.மீ தூரம் சொந்த செலவில் வடிகால் வாய்க்காலில் முளைத்த ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கடைமடை பகுதியாகும். ஓவரூர் வடிகாலிலும் அதனை தொடர்ந்து வளவனாற்றிலும் ஆகாயத்தாமரை வலுவாக படர்ந்துள்ளது.

    இதனால், கீழப்பெருமலை, மேல பெருமலை, இடும்பாவனம், விளாங்காடு, குன்னலூர், எக்கல், பாண்டி, கோட்டகம், வெள்ளங்கால், கரையன் காடு, ஓவர்குடி ஓவரூர் ஆகிய கிராமங்களின் வடிகாலாக ஓவரூர் வடிகால் உள்ளது.

    சிறு மழை பெய்தால் கூட மேற்கண்ட கிராமங்களை சூழும் மழைநீர் ஆனது ஒவரூர் வடிகாலில் விழுந்து அதன் பின்னர் வளவனாற்றில் கலக்க வேண்டும். ஆனால் ஓவரூர் வடிகால் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் வடியாமல் வயல்களில் வெள்ள நீர் சூழ்ந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இதன் காரணமாக வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் விவ சாயிகள் ஒருங்கிணைந்து குன்னலூர் முதல் கீழப்பெருமலை வரை உள்ள படந்துள்ள ஆகாயத்–தாமரைகளை அகற்றி வருகின்றனர்.

    மேலும் ஜேசிபி வாகனம் ஒன்றையும் கிராம நிதியிலிருந்து வாடகைக்கு பணியமரத்தி உள்ளனர்.

    இதுகுறித்து கீழப்பெரு மழை கிராம விவசாயிகள் கூறும்போது கடந்த ஆண்டு இந்த வடிகால்வாய்க்காலை தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம் நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறி வடிகால் தூய்மைப்படுத்–தப்படவில்லை இந்த ஆண்டும் அதே பதிலை தான் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    தற்போது குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகிய உள்ளன.

    அதேபோல் நேரடி தெளிப்பு செய்துள்ள சம்பா 30 நாள் நெற்பயிராக உள்ளது அவ்வப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி குறு வை மற்றும் சம்பா நெற்பயர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் விவசாயிகள் ஒன்று கூடி பேசி வீட்டுக்கு ஒருவர் வேலைக்கு வர வேண்டும், கிராம நிதியில் ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு நியமித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

    வடிகால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி விட்டால் மழை வெள்ள பாதிப்பில் இருந்து நெற்பயிர்கள் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த பணியினால் 10 கிராமங்களில் 5000 ற்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள குறுவை சம்பா பயிர்கள் மழை வெள்ளத்தில் இருந்து காக்கப்படும்.

    • 1 முதல் 8-ம் வகுப்பு வரை வளரறி மற்றும் தொகுத்தறி தேர்வுகளை சரியான நேரத்தில் முடித்தல் வேண்டும்.
    • இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் இடித்து அகற்ற வேண்டும்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் தாமோதரன் மற்றும் ஜெயலெட்சுமி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

    கூட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் உடல்நல விவரங்கள் ஆகியவற்றை டி.என்.எஸ்.யி.டி செயலியில் பதிவேற்றம் செய்வது, 1 முதல் 8-ம் வகுப்பு வரை வளரறி மற்றும் தொகுத்தறி தேர்வுகளை சரியான நேரத்தில் முடித்தல், பள்ளிக்கு தொடர்ந்து வருகை புரியாத மாணவர்களை பள்ளிக்கு வருகை தர நடவடிக்கை எடுத்தல், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணி சார்ந்த பயிற்சிகளில் கலந்து கொள்வது, இல்லம் தேடி கல்வி மையங்களை சிறப்பாக நடத்துவது, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கான முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையை தகுதியுடைய மாணவர்களுக்கு பெற்று வழங்குவது, இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் இடித்து அகற்றுவது, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவின் தரத்தை தினசரி ஆய்வு செய்வது, நடுநிலைப்பள்ளிகள் தேசிய அளவிலான புத்தாக போட்டிகளில் கலந்து கொள்வது, அனைத்து பள்ளிகளுக்கும் தனித்தனியான மின்னஞ்சல் முகவரியினை உருவாக்குதல் ஆகியவை தொடர்பான கூட்டம் நடைப்பெற்றது.அரசு பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம்

    • சமையல் உணவு வங்கி சார்பில் பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்வு.
    • பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி:

    பாரத மாதா சேவை நிறுவனங்களின் சார்பில் "சமுதாய சமையல் உணவு வங்கி பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு ஏழை,எளிய, நலிவுற்ற புலம்பெயர்ந்த விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பசியாற இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    திருவாரூரில் பாரதமாதா சமுதாய சமையல் உணவு வங்கி சார்பில் பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்வை திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

    பாரதமாதா சேவை நிறுவன ஆற்றுப்படுத்துனர் சங்கீதா மணிமாறன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருவாரூர் நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகர் மன்ற உறுப்பினரும் திமுக நகர செயலாளருமான வாரை பிரகாஷ், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் புஷ்பராஜ், குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் தமிழரசன், தமிழக இயற்கை உழவர் இயக்க நிறுவனர் வரதராஜன், நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் அண்ணாதுரை, முத்தமிழ் பண்பாட்டு பேரவை தலைவர் கவிஞர் ஆரூர் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தர்மலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் நன்றி கூறினார்.

    உணவு வங்கி தொடர்பான பணிகளை பாரதமாதா சேவை நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி அருண் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • பீரோவில் இருந்த மணப்பெண்ணின் செயின், ஆரம், வளையல், மோதிரம் ஆகிய நகைகள் மாயமாகி இருந்தது.
    • போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் முகமது ஆரிப்.

    இவரது மகளுக்கு கடந்த 18ந்தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதில் மணப்பெண்ணின் தோழிகள் உட்பட உறவினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

    இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த மணப்பெண்ணின் கழுத்து மாலை, செயின், ஆரன், வளையல், மோதிரம் ஆகிய பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து முகமது ஆரிப் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், குற்றப்பிரிவு காவலர்கள் திருமுருகன், மோகன், சிவசங்கரி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டி மணலியை சேர்ந்த பாலு மகள் வினிதா என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.மேலும் விசாரணையில் அவர் எம்சிஏ பட்டதாரியான வினிதா, மணப்பெண்ணுடன் மன்னார்குடி தனியார் கல்லூரியில் படித்துள்ளார்.

    பின்னர் வினிதா படிப்பு முடிந்து சென்னையில் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    தோழிக்கு திருமண நிச்சயதார்த்தம் அழைப்பு வந்ததும் கடந்த 18ந்தேதி சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த வினிதா வீட்டில் உள்ள மாடியில் மணப்பெண்ணின் அறையில் தங்கியுள்ளார் அப்போது மணப்பெண் நகைகளை கழட்டி வைத்தபோது நோட்டமிட்டு வந்துள்ளார்.

    பின்னர் தோழி மற்றும் உறவினர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத போன்று ஊருக்கு செல்வதாக கூறி சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    பின்னர் அங்குள்ள நகை கடையில் பாதி நகையை விற்றுவிட்டு வேறு நகை வாங்கியுள்ளார்.

    பின்னர் மன்னார்–குடிக்கும் சொந்த ஊர் திருத்துறை ப்பூண்டிக்கும் வந்து மற்ற நகைகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நகைகளை கைப்பற்றி வினிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் முத்து ப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவ-மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கமளித்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை, திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஏ.ஆர் .ஜெ. பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாம் ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.

    இதில் ஏ.ஆர்.ஜெ. கல்வி குழுமத்தின் துணைத்த லைவரும் தாளாளருமான டாக்டர். ஜீவகன் அய்யநா தன் தலைமை தாங்கினார்.

    பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார் .

    இதில் திருவாரூர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விளக்கி கூறினார் .

    மாவட்ட சமூக நலத்துறை சீப் கன்சஸ்டன்ட் மெர்லின் குழந்தைகளுக்கு மற்றும் இளைஞர்களுக்கு சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கி கூறினார்.

    நாம் நம்மில் மாற்றம் நிறுவனர் ஏ. ஆரோக்கியஜான் அமர்தாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் முனைவர் கே. செல்வராஜ் மேலாண்மை இயக்குனர் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர் .

    முன்னதாக துணை முதல்வர் முனைவர் ஜீ. மீனாட்சிசுந்தரம் வரவேற்புரையாற்றினார்.

    என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சந்துரு நன்றி கூறினார்.

    • பிரகாஷ் என்ற மாணவன் நன்னிலம் அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பித்திருந்தார்.
    • கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மாணவன் ஒருவன் தவித்துக்கொண்டிருந்தான்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள திருக்கண்ணமங்கையை சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவன் பிளஸ் 2 முடிந்த நிலையில், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு, விண்ணப்பித்திருந்தார்.

    கல்லூரியில் சேர்வதற்கான அழைப்பானை வந்த நிலையில், கல்லூரி கட்டணம் செலுத்தாமல் தவித்திருந்த மாணவனுக்கு, நன்னிலம் ரோட்டரி சங்கம் சார்பில், கல்லூரியில் சேர்வதற்கான கட்டணத் தொகை செலுத்தப்பட்டது.

    மேலும் அம்மாணவனின் கல்லூரி படிப்புக்கான முழு செலவையும் நன்னிலம் ரோட்டரி சங்கம் ஏற்றுக்கொள்வதாக மாணவனின் பெற்றோரிடம், தெரிவிக்கப்பட்டது மாணவனுக்கான கல்லூரி செலவினை ரோட்டரி சங்க தலைவர் பாரி, முன்னாள் தலைவர் உத்தமன், ரோட்டரி சங்க உறுப்பினர் பரிமளா காந்தி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

    • மண் சாலையாக உள்ள கல்லூரி நுழைவுவாயிலை போர்க்கால அடிப்படையில் தார்சாலையாக அமைக்க வேண்டும்.
    • சுதந்திர போராட்ட வீரர் தியாகி சீனிவாசராவ் பெயரை அரசு கலைக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருத்துறைப்பூண்டி கல்லூரி மாணவர்கள் பேரவை கூட்டம் கல்லூரி கிளைத் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குணால் தலைமையில் நடைபெற்றது.

    மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஜேபி வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் புதிய புதிய தலைவராக பி.பரசுராமன் செயலாளர் எம்.மணிபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் நடந்து செல்லும் கல்லூரி நுழைவுவாயில் மண் சாலையாக உள்ளது.

    இதனை போர்க்கால அடிப்படையில் தார் சாலையாக அமைத்திட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி அரசு கலைக்கல்லூரியில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்லூரி இயங்கி வருகிறது இதில் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவுகளை உடனடியாக தொடங்க வேண்டும்,சுதந்திர போராட்ட வீரர் தியாகி பி. சீனிவாசராவ் பெயரினை அரசு கலைக்கல்லூரி சூட்ட வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

    • ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றிய குழு துணை தலைவர்வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 78.10 லட்சத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட 2021-22ம் ஆண்டு 15-வது மத்திய நிதிக்குழு சுகாதார தலைப்பு ஒதுக்கீட்டு மான்ய நிதி ரூபாய் 60 லட்சம் போக பற்றாக்குறை நிதியான ரூபாய் 18.10 லட்சத்தை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து வழங்கவும் வடகிழக்கு பருவமழையில் பழுதடைந்த அரித்துவாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 569 மதிப்பீட்டில் பழுது ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்நீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகையாக ரூபாய் 58 ஆயிரத்து 569-ம்.

    கேத்தனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 671 மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ரசூல் நஸ்ரின் பேசுகையில் மூன்று ஆண்டுகாலமாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கின்றனர் நாங்கள் என்ன பதில் சொல்வது என கேள்வி எழுப்பினார்

    இதற்கு பதில் அளித்து அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சங்கர் பேசுகையில் அரசாங்கம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும் பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் எனப் பேசினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி நன்றி கூறினார்.

    • தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க தலைவராக இருக்க முடியும்.
    • சத்துணவு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகியவற்றை கொண்டு மக்களின் பசியை போக்கியவர்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் காந்தி சாலையில் அறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது‌. கூட்டத்திற்கு நகரச் செயலாளர் மூர்த்தி தலைமை வைத்தார்.

    மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கலியபெருமாள், ரயில் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பெரியார் சிலைக்கு சென்னையில் மாலை அணிவித்து விட்டு ஓ.பி.எஸ் வரும்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடப்பது அரசு தன் கடமையை செய்கிறது என்று கூறுகிறார்.

    இதை அவர் கூறலாமா?.

    அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு இருக்கிறார்.

    அதேபோன்று நிர்வாகிகள் நாங்களும் எங்கள் கடமையை செய்திருக்கிறோம். சரியான தலைவரை அ.தி.மு.க.விற்கு தலைமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

    காலை உணவு திட்டத்தை எடப்பாடியார் தனது ஆட்சி முடியும் தருவாயில் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    ஆட்சிக்கு வந்திருந்தால் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும்.

    இப்போது ஸ்டாலின் ஐரோப்பாவை பார்த்து ஆஸ்திரேலியாவை பார்த்து நான் ஆரம்பித்தேன் என்று கூறுகிறார்.

    பசியை போக்குவது தான் எனது வாழ்வின் லட்சியம் என்கிறார்.

    உண்மையில் பசியை போக்கியது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான்.சத்துணவு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகியவற்றை கொண்டு மக்களின் பசியை போக்கியவர்கள் இவர்கள் தான்.

    அதில் அவர் பங்கு போட்டுக் கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கட்சி அமைப்பு செயலாளர் ஆசைமணி, தலைமைக் பேச்சாளர் நெத்தியடி நாகையன், மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.

    முடிவில் ஒன்றியச் செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.

    ×