search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
    X

    பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

    • மாணவ-மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கமளித்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை, திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஏ.ஆர் .ஜெ. பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாம் ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.

    இதில் ஏ.ஆர்.ஜெ. கல்வி குழுமத்தின் துணைத்த லைவரும் தாளாளருமான டாக்டர். ஜீவகன் அய்யநா தன் தலைமை தாங்கினார்.

    பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார் .

    இதில் திருவாரூர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விளக்கி கூறினார் .

    மாவட்ட சமூக நலத்துறை சீப் கன்சஸ்டன்ட் மெர்லின் குழந்தைகளுக்கு மற்றும் இளைஞர்களுக்கு சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கி கூறினார்.

    நாம் நம்மில் மாற்றம் நிறுவனர் ஏ. ஆரோக்கியஜான் அமர்தாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் முனைவர் கே. செல்வராஜ் மேலாண்மை இயக்குனர் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர் .

    முன்னதாக துணை முதல்வர் முனைவர் ஜீ. மீனாட்சிசுந்தரம் வரவேற்புரையாற்றினார்.

    என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சந்துரு நன்றி கூறினார்.

    Next Story
    ×