என் மலர்
தேனி
- நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர்.
- செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச தயாராக உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.
* முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன்.
* ஒருங்கிணைப்பு தொடர்பான 10 நாட்கள் கெடு முடிந்ததும் செங்கோட்டையன் தன்னிடம் பேசுவார் என நம்பிக்கை உள்ளது.
* அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
* செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- உடம்புக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல், விவசாயிக்கு நீர் முக்கியம்.
- அதிமுக ஆட்சி வந்தவுடன் முறையாக மீண்டும் குடிமராமத்து திட்டம் தொடங்கப்படும்.
தேனி கம்பம் வாரச்சந்தை அருகே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு அம்மாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
அதிமுக ஆட்சி அமைந்த உடன் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
உடம்புக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல், விவசாயிக்கு நீர் முக்கியம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றியும் தெரியாது, விவசாயிகளின் கஷ்டம் பற்றியும் தெரியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும்
அதிமுக ஆட்சி வந்தவுடன் முறையாக மீண்டும் குடிமராமத்து திட்டம் தொடங்கப்படும். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கிய அரசு, அதிமுக தலைமையிலான அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- இபிஎஸ் செல்லும் வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர்.
- செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைய வலியுறுத்தி இபிஎஸ் செல்லும் வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர்.
இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்கள் முழங்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
- முதல் நிகழ்ச்சியாக ஆண்டிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசினார்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவலை வெளியிடுவதாக செய்தி வந்தது.
தேனி:
'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தேனி மாவட்டத்தில் நேற்று முதல் 2 நாள் பிரசாரம் செய்ய திட்டமிட்டார்.
முதல் நிகழ்ச்சியாக ஆண்டிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசினார். இன்று காலை தேனியில் உள்ள தனியார் விடுதியில் விவசாயிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவலை வெளியிடுவதாக செய்தி வந்தது. இதனையடுத்து தேனியில் நடைபெற இருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தான் பிரசாரம் செய்யும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு நிலவும் பிரச்சனைகள் குறித்து வணிகர் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமி தேனியில் கூட்டத்தை ரத்து செய்தது கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 334 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1160 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது. 5796 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. கூடுதல் நீர் திறப்பால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.73 அடியாக உள்ளது. 839 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்கு 769 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5504 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு 21.2, தேக்கடி 9.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
- 70 அடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக 69 அடியிலேயே நீடித்தது.
- தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
கடந்த 5ம் தேதி அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. வழக்கமாக அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். ஆனால் இந்த ஆண்டு முழு கொள்ளளவான 71 அடிவரை நீர்மட்டத்தை நிலைநிறுத்த முடிவு செய்து நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 70 அடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக 69 அடியிலேயே நீடித்தது.
தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஆனால் நீாவரத்து 634 கனஅடியாகவே உள்ளதால் அணையின் நீர்மட்டம் 68.83 அடியாக குறைந்துள்ளது. 5529 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.65 அடியாக உள்ளது. 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 619 கனஅடி நீர் வருகிறது. 5784 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
பெரியாறு 14, தேக்கடி 7.6 மழையளவு பதிவாகி உள்ளது.
- வழக்கமாக 69 அடியில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும்.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து கடந்த 5ம் தேதி 69 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வைகை கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
வழக்கமாக 69 அடியில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முழு கொள்ளளவில் நீர்மட்டத்தை நிலைநிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்போது மழை குறைந்துள்ள நிலையில் 20 நாட்களாக 69 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.21 அடியாக உள்ளது. 591 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5626 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி கடல்போல் காட்சி அளிக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அணையின் நீர்பிடிப்பு பகுதி மலையடிவாரத்தில் அமைந்துள்ளதை கண்டு ரசித்தனர்.
மேலும் பூங்காவில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடினர். இங்கு பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது. 876 கனஅடி நீர் வருகிறது. 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 5929 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு அணை பகுதியில் மட்டம் 0.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து 135.30 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
நீர்மட்டம் கடந்த 5-ந்தேதி 69 அடியாக உயர்ந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கப்படலாம் என்ற நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இருந்தபோதும் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் சரியாக இருந்ததால் நீர்மட்டம் 70 அடியை எட்டவில்லை. இருந்தபோதும் அணையின் நீர்மட்டத்தை 70 அடிக்கு மேல் உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கடந்த 5-ந் தேதி முதல் தற்போது வரை அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. அணைக்கு 515 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து நேற்று 969 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 557 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது.
மதுரை, சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்கும், பாசனத்துக்கும் 557 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5681 மி.கன அடியாக உள்ளது.
இதே போல் முல்லைப்பெரியாறு அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து 135.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1023 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5940 மி.கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்த போதிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மின் உற்பத்தி 4 ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள சுருளி, கும்பக்கரை, மேகமலை அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளிலும், மேகமலை, போடி உள்ளிட்ட இடங்களிலும் 2 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சின்ன சுருளி அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் அருவியில் நீராடி வருகின்றனர்.
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது.
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. ரூல்கர்வ் நடைமுறைப்படி 136 அடிக்கு மேல் ஜூலை மாதத்தில் தேக்கமுடியாது என்பதால் கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் சரிந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழைபெய்ய தொடங்கி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு 1311 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5942 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 69 அடியிலேயே நீடித்து வருகிறது. முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க அதிகாரிகள் முடிவு செய்து அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு 638 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5690 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை எங்கும் இல்லை.
- தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
- அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயர்ந்ததால் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 25-ந்தேதி முதல் 7 நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த மாதம் 26-ந் தேதி 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 69.19 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1510 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசன தேவைக்காக 500 கன அடியும், குடிநீர் தேவைக்காக 69 கன அடி என மொத்தம் 569 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5622 மி.கன அடியாக உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டுக்கு பிறகு வைகை அணை மீண்டும் தற்போதுதான் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வைகை அணை வரலாற்றில் தற்போது 35-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
வழக்கமாக அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 69 அடியை கடந்த பிறகும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் திறக்கப்படவில்லை.
71 அடி வரை உயர்த்தப்பட்டு பின்னர் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இருந்தபோதும் அணை பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அணைக்கு வரும் நீர் வரத்து அளவை கணக்கிட்டு வருகின்றனர்.
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த நேரமும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் எந்த நேரமும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 136 அடிக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 133.65 அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- செப்டம்பர் 4-ந் தேதி நடத்த உள்ள மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
- மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதில் உறுதியாக இருக்க வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.
பெரியகுளம்:
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்த நிகழ்வு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து பா.ஜ.க.வில் இருந்து விலகியதாக விடுத்த அறிவிப்புக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது செப்டம்பர் 4-ந் தேதி நடத்த உள்ள மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் மாநாட்டின்போது எடுத்து வைக்க வேண்டிய மக்கள் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதில் உறுதியாக இருக்க வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.
இதற்கு அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், காலம் கடந்து எடுத்த முடிவு என்ற போதும் பா.ஜ.க.வில் இருந்து விலகியது ஓ.பி.எஸ். உடைய துணிச்சலான முடிவு. இத்தனை ஆண்டுகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றவுடன் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். அவர் விலகிய பிறகும் ஒரு சிலர் சமரசம் பேச முயன்று வருகின்றனர்.
ஆனால் தனது நிலைப்பாட்டில் ஓ.பி.எஸ். உறுதியாக உள்ளார். அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து வெளியிடுவார். நகர்மன்ற தலைவர் பதவி தொடங்கி எம்.எல்.ஏ., அமைச்சர், 3 முறை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அவை முன்னவர், கட்சியின் பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வழங்கியுள்ளார். இனிமேல் அவருக்கு புதிய பதவி கிடைக்கப்போவதில்லை. எனவே பதவிக்காக யாருடனும் சேர வேண்டிய அவசியமும் இல்லை.
வருகிற தேர்தலில் ஓ.பி.எஸ். எடுக்கும் முடிவு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்ததை வைத்து தி.மு.க.வில் இணையப்போவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். அவர் ஒரு போதும் தி.மு.க.வில் இணைய மாட்டார் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.
விஜய் கட்சியுடன் இணைந்து வருகிற தேர்தலை சந்திக்க பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அது குறித்தும் அவர் ஆலோசித்து முடிவு செய்வார் என்றனர்.
- தேனி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
- கடந்த வாரம் அணையின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்துக்காக கடந்த 14 நாட்களாக 800 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த வாரம் அணையின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது.
நீர்மின் நிலையம் வழியாக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் இன்று அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 1594 கன அடி தண்ணீர் வருகிறது.
69 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5421 மி.கன அடியாக உள்ளது. இந்த முறை வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு பின்னர் வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்து வருகின்றனர்.
தற்போது தேனி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு 1053 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1862 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 134.15 அடியாக உள்ளது. நீர் இருப்பு 5667 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மற்ற அணைகளுக்கும், நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.






