என் மலர்
சிவகங்கை
- பூங்குன்றனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று மகிபாலன்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கால்நடை மருத்துவ உதவியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர், எஸ்.புதூர் ஒன்றியங்களில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவிற்கிணங்க அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
கிருங்கா கோட்டை ஊராட்சியில் இருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீட்டு வரியின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாராப்பூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
காரையூர் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ''அனைவருக்கும் வீடு" என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கண்டவராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர், தெரு விளக்கு, தரமான சாலை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
கொன்னத்தான் பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் பருவமழை காலங்களில் வரத்து கால்வாய் மூலம் வரும் அதிகப்படியான உபரி நீர் வீணாக செல்வதை தடுக்கும் விதமாக கண்மாய்க்கு குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
துவார் கிராமத்தை சுற்றியுள்ள 11-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் புதிதாக மடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செல்லியம்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊரணி, குளங்கள் மராமத்து பணிகள் செய்து சுற்றுச்சுவர் எழுப்பப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகிபாலன்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கணியன் பூங்குன்றனா ருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்ட வரலாற்று நினைவுத்தூனை உடனடியாக திறந்திட வேண்டும். பூங்குன்ற னாருக்கு இப்பகுதியில் மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கிராம சபை கூட்டங்களில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்வழி நாகராஜன், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கொன்னத்தான் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டியன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், காரையூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன், கண்டவராயன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி சசிகுமார், செல்லியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், செயலாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் செவிலியர்கள்,கால்நடை மருத்துவ உதவியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நிலத்தடி நீரை பாதுகாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட காளையார்கோவில் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜோஸ்பின் மேரி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு ஊராட்சி யில் மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
உலக தண்ணீர் தினமான இன்று சிவகங்கை மாவட் டத்தில் 445 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதன்மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கு வதற்கான பயனாளி பட்டியல் தேர்வு செய்வ தற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
நீரின்றி அமையாத உலகு என்ற நோக்கில், தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ இயலாது. தண்ணீர் என்பது நம் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கமாகும் என்பதை அடிப்படையாக கொண்டு, முதல்-அமைச்சர் தமிழ கத்தின் அனைத்துப்பகுதி களிலும் நீர் ஆதாரங்களை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.
தண்ணீர் மேலாண் மைக்கு தமிழ கத்தின் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. நீர் ஆதாரங்களை காப்போம், நிலத்தடி நீரினைக் காப்போம் என்ற அடிப்படையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் சரஸ்வதி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை)தனபாலன், துணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை) அழகுமலை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
- தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த காவரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசா யிகள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் எம்.அர்ச்சுனன் கூறியதாவது:-
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு 14.2.21-ல் அ.தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் விராலிமலை அருகில் அடிக்கல் நாட்டப்பட்டது.
காவிரி ஆற்றின் கரூர் மாயனூர் கதவணையில் இருந்து புதுக்கோட்டை, தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் முதல் நிலையாகவும், தெற்கு வெள்ளாறில் இருந்து வைகை ஆறு வரை 108 கிலோமீட்டர் 2-ம் நிலை யாகவும், வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டி புதுப்பட்டி குண்டாறு வரை 34 கிலோமீட்டர் 3-ம் நிலையாகவும் என மொத்தம் 260 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கால்வாய் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்திற்கு 2021-22 அ.தி.மு.க. ஆட்சியில் பட்ஜெட்டில் ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டது.
2022-23-ல் தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
மாயனூர் ஜீரோ பாய்ண்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை 4 பேக்கேஜ்கள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நடப்பு 2023-24 பொது பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த 7 மாவட்ட விவசாயிகளுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பட்ஜெட் விவாதத்தின் போது காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதல்நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேவகோட்டை அருகே தண்ணீர் விற்பனை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
- போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாழையூர் முத்து பெரியநாயகி நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு அரசு சார்பில் குடிநீர் தேக்க தொட்டி அமைத்து வீடுகளுக்கு பைப் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
சமீப காலமாக இந்த பைப்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் பெரியநாயகி நகரில் வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதே பகுதியில் ஆரோக்கியம் என்பவர் தனது வீட்டில் அதிக திறன் கொண்ட போர்வெல் அமைத்து டேங்கர்கள் மூலம் தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்.
இதனால் இவரது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நீர் தேக்க தொட்டி ஆழ்துளை கிணறுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் மின்மோ ட்டார் அடிக்கடி பழுதாகி விடுகிறது.
இதுகுறித்து ஆரோக்கி யத்திடம் பலமுறை அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இனிமேல் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும், மீண்டும் தண்ணீர் விற்ப னை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியநாயகி நகர் பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்த டேங்கர் வாகனத்தை வழிமறித்து அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனை அறிந்த ஆறாவயல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மருது, மைக்கேல் ஆகியோர் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஆரோக்கியம் நீண்ட நாட்களாக வியாபார நோக்கத்தில் தண்ணீர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இனிமேல் தண்ணீர் விற்பனை செய்யக்கூடாது என்று அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் அதிக மகசூல் பெற்ற 3 பட்டுக்கூடு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.
- விவசாயி ராமையாவுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 2022-23-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்ற 3 பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத்தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விவசாயிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி ரொக்கப்பரிசுக்கான காசோ லைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதில், விவசாயத்திற்கு தனிகவனம் செலுத்தி விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி குமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்றதற்காக முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், சிவகங்கை வட்டம், கூத்தாண்டன் கிராமத்தில் விவசாயி அமுதாராணி 2 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு வளர்த்து அதிக மகசூல் பெற்றதற்காக 2-ம் பரிசு ரூ.20ஆயிரமும், காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி ராமையாவுக்கு 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது என்றார்.
அப்போது பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.
- தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 29-ந் தேதி தொடங்குகிறது
- அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே அம்மன் தரிசனம் செய்ய கோவிலில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி இரவு 10 மணிக்கு கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.
விழாவின் முக்கிய உற்சவங்களான பொங்கல் வைபவம் ஏப்ரல் 5-ந் தேதியும், மின்விளக்கு தேர் பவனி 6-ந் தேதியும் 7-ந் தேதி பால்குடம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு புஷ்பபல்லக்கு வீதி உலாவும் நடக்கிறது. 8-ந் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறு கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வசதிக்காக பந்தல் மற்றும் வரிசையில் செல்ல காலரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வறண்டிருந்த தீர்த்த குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டு தற்போது தண்ணீர் நிரப்பி குளம் நிறைந்து காணப்படுகிறது.
திருவிழா நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தாயமங்க லத்துக்கு வரும் பக்தர்கள் முத்து மாரியப்பனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும், தீச்சட்டி சுமந்தும் நேர்த்தி கடன் நிறைவேற்றி அம்மனை வழிபாடு செய்வார்கள்.
திருவிழா தொடங்கு வதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பஸ், கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தாயமங்கலத்துக்கு வந்து வேண்டுதல் நிறை வேற்றி முத்துமாரியம்மன் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும் திருவிழா ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.
- சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
- இதனை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள், இணைப்பு சங்கங்களான 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 56 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
சிவகங்கையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய பணியாளர்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது தற்காலிகமாக காந்தி வீதியில் செயல்பட்டு வரும் மத்திய வங்கியின் தலை மையக வங்கி கிளையில் 7 ஆயிரத்து 926 வங்கி வாடிக்கையாளர் கணக்குகளுடன் ரூ.110 கோடிக்கு இட்டுவைப்புகள் நிலுவை உள்ளதையும், அரசு திட்ட கடன்களான சிறுவணிக கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்களுடன் ரூ.84 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ஏ.டி.எம்., தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளுடன் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஐ.எம்.பி.எஸ். மற்றும் யு.பி.ஐ. சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் காந்தி வீதியில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழுதடைந்த தலைமையக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, மத்திய வங்கி தலைமையக கிளைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு, பொது மேலாளர் (பொறுப்பு) மாரிச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.
- மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷபூஜை நடந்தது.
வைகை ஆற்றுகரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் நந்திக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி பிரகாரம் வலம்வந்து தீபாராதனை நடந்தது.
சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திரமவுளீசுவரருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பரமக்குடி ரோட்டில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர் காசிநந்திக்கு மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.
மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், இடைக்காட்டூர் ஆழி மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில்களிலும் பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- பிடாரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
- இந்த விழாவில் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள வடக்கு வாசல் செல்வி என்ற பிடாரி அம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா நடந்தது.
பக்தர்கள் பால்குடம், பூத்தட்டுகளை ஏந்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு நடைபயணமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். முன்னதாக பிடாரி அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
மாலை 6 மணி முதல் பால் குடங்களும், பூத் தட்டுகளும் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு சுமார் 15 கிலோ மட்டர் தொலைவில் உள்ள கொன்னையூருக்கு பக்தர்கள் தலையில் பூத்தட்டுகளை சுமந்தவாறு நடை பயணமாக புறப்பட்டு சென்றனர்.
கோவில் மந்தை திடலில் கரகாட்டம், ஒயிலாட்டம்,நாதசுவர வாத்தியம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளானோர் பங்கேற்ற இந்த விழாவில் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- காளையார்கோவில் அருகே, 27-ந் தேதி கொங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இலவச வாகன வசதியும் செய்யபட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள ஆசிரமம் கிராமத்தில் கொங்கேசுவரர் கோவில் உள்ளது.
பிரசித்திபெற்ற 300 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 2 ஆயிரம் பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்பது வழக்கம்.
கொங்கேசுவரர், 7 முக காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற உள்ளது. தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு, அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இலவச வாகன வசதியும் செய்யபட்டு வருகிறது. 30ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், கொங்கேசுவரர் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
- வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.
மானாமதுரை செர்டு சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் நடந்த விழாவையொட்டி மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. திருப்புவனம் புதூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
காவல்துறை சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி பேரணியை தொடங்கி வைத்தார். நரிக்குடி சாலையில் பேரணி நிறைவடைந்தது. அதன் பின்னர் நடந்த விழாவில் செர்டு சமூக சேவை நிறுவன இயக்குநர் எல்.பாண்டி வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் போதும்பொண்ணு, சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி உள்ளிட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பேசினர். வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- கல்லல் யூனியனில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
- 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.31.98 லட்சம் மதிப்பீட்டில் 3 வளர்ச்சித் திட்ட பணிகள் முடிவுற்றன. இதன் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று திட்டப்பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணி களை மேற்கொள்வதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.3கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப டுகிறது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான சிராவயல் ஊராட்சி, கிளாமடம் கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிதாக சமுதாய கூடத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுவதற்கும் மற்றும் அதிகரம் பள்ளியை நிலை உயர்த்துவதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கம்பனூர் ஊராட்சி கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 90 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க புதிதாக ரூ.9.89 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பலவான்குடி ஊராட்சி, ஆலத்துப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கும் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து எடுத்துரைத்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பணிகள் உடன டியாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் லதா தேவி, கண்டரமாணிக்கம் உதவி பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரசுவதி, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் நாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லட்சு மணன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முத்தழகு, சையது அபுதாகிர், ஊராட்சி மன்றத்தலைவர் சரோ ஜாதேவி குமார் (சிராவயல்), அமுதா (கம்பனூர்), சத்திய கலா(பலவான்குடி), வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் செழியன், அழகு மீனாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






