என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க துரித பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் உலக காசநோய் தினவிழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    காசநோய் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரிந்தால் அச்சம் என்ற அடிப்படையில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளனர். தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் அனைத்துவிதமான நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தமிழக அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான போதிய மருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    சரிவர மருந்தை சாப்பிடாமல் இருப்பதால் தான் விளைவுகள் ஏற்படுகிறது. மேலும், மற்றவர்களுக்கு தொற்று நோயாக பரவாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ மனைகளை அணுகி முறை யாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதன் அடிப்படையில் தங்களைச் சார்ந்தோர்களுக்கும் பரவாமல் பாதுகாக்க முடியும். வருகிற 2025-க்குள் காசநோய் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருந்து தங்களை சார்ந்தவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    காசநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அதிக ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசால் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர, தன்னார்வலர்களும் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் 52 காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி மையங்கள் உள்ளன. மேலும், 14 புதிய இருகண் நுண்ணோக்கிகள், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்களின் உபயோகத்திற்கென தற்போது வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அனைத்துத்துறையைச் சார்ந்த அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, காசநோய் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்குவதற்கான பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தயாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் தீ மிதித்தனர்.
    • கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பூ கரகம், தீ சட்டி, பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை டி.எஸ்.பி. கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.கோவில் டிரஸ்டிகள் பூசாரி சுப்பிரமணியன் தலைமையில் நாகராஜன், முருகன் ஆகியோர் விழா ஏற்பாட்டை செய்தனர்.

    • ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமாரியம்மன், முத்துவேல், பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதில் நிர்வாகிகள் சிங்கராயர், ஸ்டீபன், ஜோசப் செல்வராஜ், வெங்கட்ராகவன், கருப்பையா, மீனாட்சி சுந்தரம், ஜெயகாந்தன், பெரியசாமி, ராஜா முகமது, நேரு, வேலாயுத ராஜா, மால் முருகன், சரவணன், மதுசூதனன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தில் நாகப்பன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி என்பவரும் கலந்து கொண்டார். இரவு வரை நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 தொழிலாளர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • முத்துக்குமாரின் மனைவி மீனாட்சி சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல்-சாக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இங்கு நெல்மணிகளை அரிசியாக மாற்றி அதை கோம்போ என்றழைக்கப்படும் தானியங்கி சேமிப்பு எந்திரத்தில் சேமித்து வைப்பார்கள். பின்னர் கன்வேயர் மூலம் அரிசி கீழே இறங்கும். அதனை சாக்குகளில் பிடித்து அடுத்த பிரிவுக்கு அனுப்புவார்கள். பின்னர் அரிசி பேக்கிங் செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்படும்.

    இந்தநிலையில் நேற்று அரிசி ஆலையில் அரிசியை சாக்குகளில் பிடிக்கும் பணியில் கண்டனூரை சேர்ந்த முத்துச்சாமி (வயது40), பீகார் மாநிலம் பூரணியா பகுதியை சேர்ந்த குந்தன் குமார்(25) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அரிசி சேமிப்பு ராட்சத எந்திரம் உடைந்து கீழே விழுந்தது. இதில் சிக்கி முத்துச்சாமி, குந்தன்குமார் ஆகியோர் காயமடைந்தனர். அப்போது எந்திரத்தில் இருந்து 14 டன் அரிசி மொத்தமாக 2 தொழிலாளர்கள் மீதும் கொட்டியது. அரிசி குவியலில் சிக்கிய 2 பேரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதனை கண்ட மற்ற ஊழியர்கள் பலியான 2 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 தொழிலாளர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து முத்துக்குமாரின் மனைவி மீனாட்சி சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தனியார் அரிசி ஆலை உரிமையாளர் சேகர்(65), அவரது மகன் கண்ணன்(39) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 19.4.2023 மாலை 5 மணி ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விளையாட்டுத் துறை யில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஒய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.

    சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம்,2-ம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளை யாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணை யத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போன்ற தகுதியான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

    2023-ம் வருடம் ஜனவரி மாதம் (31.1.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

    முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran/Masters Sports meet) வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 19.4.2023 மாலை 5 மணி ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழடி அருங்காட்சியகத்தை பார்த்து மெக்சிகோ தூதர் வியப்படைந்தார்.
    • கல்மண்டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார்.

    மதுரை-ராமேசுவரம் சாலையில் சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை இந்தியாவிற்கான மெக்சிகோ நாட்டு தூதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகம் மார்ச் 5 முதல் திறக்க பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அருங்காட்சியகத்தில் ஆய்வின் போதுகிடைத்த காட்சிபடுத்தப்பட்ட அரிய பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

    உலகதரத்தில் உள்ள கீழடி அகழ்வைப்பகத்தையும் அகழ்வாராய்ச்சி நடந்த அகரம், கொந்தகை, மணலூர் பகுதியை பார்வையிட்ட இந்தியாவுக்கான மெக்சிகோ நாட்டு துாதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை கண்டு ரசித்து வியந்தார்.

    அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்த தூதர் கல்மண் டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் 7-ம் கட்ட அகழாய்வு நடந்த தளம், திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    அவரை கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்று அகழ்வைப்பகத்தில் உள்ள காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பற்றி எடுத்துக்கூறினார்.

    • தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. முருகேசன் தலைமை தாங்கினார். பாக்கியம் கொடி ஏற்றி வைத்தார்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சாத்தையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சங்கையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலா ளராக கணேசன், தலைவராக முருகேசன், பொரு ளாளராக சோனையா, துணைச் செயலாளராக நாகேந்திரன், துணைத் தலைவராக அரியமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நாகராஜன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறுத்தும் நிலையை தடுக்க வேண்டும், மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான் கோட்டை கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தனேந்தல் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டதையும், இங்குள்ள மயானத்தை பிற கிராமத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    தேவகோ ட்டை அருகே ஏழுகோட்டை நாட்டைச் சேர்ந்த பெரியகோடகுடி கிராமத்தில் மிகப்பழமை யான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் கோட்டை விநாயகர் தர்ம முனீஸ்வரர், ஆகாச வீரன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. அதன்படி நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை 5:30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மண்டப சபா சுவாமிக்கு, ரக்ஷா பந்தனம், கோ பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, ஆசிர்வாதம் தீபாரணை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் தலைமை தாங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், திருப்பட்டு சாற்றுதல், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேக விழாவில் சுமார் 5 ஆயிர த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பூங்குன்றனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று மகிபாலன்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கால்நடை மருத்துவ உதவியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர், எஸ்.புதூர் ஒன்றியங்களில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவிற்கிணங்க அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

    கிருங்கா கோட்டை ஊராட்சியில் இருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீட்டு வரியின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வாராப்பூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    காரையூர் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ''அனைவருக்கும் வீடு" என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கண்டவராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர், தெரு விளக்கு, தரமான சாலை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

    கொன்னத்தான் பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் பருவமழை காலங்களில் வரத்து கால்வாய் மூலம் வரும் அதிகப்படியான உபரி நீர் வீணாக செல்வதை தடுக்கும் விதமாக கண்மாய்க்கு குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    துவார் கிராமத்தை சுற்றியுள்ள 11-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் புதிதாக மடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    செல்லியம்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊரணி, குளங்கள் மராமத்து பணிகள் செய்து சுற்றுச்சுவர் எழுப்பப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மகிபாலன்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கணியன் பூங்குன்றனா ருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்ட வரலாற்று நினைவுத்தூனை உடனடியாக திறந்திட வேண்டும். பூங்குன்ற னாருக்கு இப்பகுதியில் மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கிராம சபை கூட்டங்களில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்வழி நாகராஜன், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கொன்னத்தான் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டியன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், காரையூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன், கண்டவராயன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி சசிகுமார், செல்லியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், செயலாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் செவிலியர்கள்,கால்நடை மருத்துவ உதவியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நிலத்தடி நீரை பாதுகாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட காளையார்கோவில் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜோஸ்பின் மேரி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது.

    இதில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு ஊராட்சி யில் மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலக தண்ணீர் தினமான இன்று சிவகங்கை மாவட் டத்தில் 445 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதன்மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கு வதற்கான பயனாளி பட்டியல் தேர்வு செய்வ தற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

    நீரின்றி அமையாத உலகு என்ற நோக்கில், தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ இயலாது. தண்ணீர் என்பது நம் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கமாகும் என்பதை அடிப்படையாக கொண்டு, முதல்-அமைச்சர் தமிழ கத்தின் அனைத்துப்பகுதி களிலும் நீர் ஆதாரங்களை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.

    தண்ணீர் மேலாண் மைக்கு தமிழ கத்தின் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. நீர் ஆதாரங்களை காப்போம், நிலத்தடி நீரினைக் காப்போம் என்ற அடிப்படையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் சரஸ்வதி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை)தனபாலன், துணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை) அழகுமலை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
    • தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த காவரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசா யிகள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் எம்.அர்ச்சுனன் கூறியதாவது:-

    காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு 14.2.21-ல் அ.தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் விராலிமலை அருகில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    காவிரி ஆற்றின் கரூர் மாயனூர் கதவணையில் இருந்து புதுக்கோட்டை, தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் முதல் நிலையாகவும், தெற்கு வெள்ளாறில் இருந்து வைகை ஆறு வரை 108 கிலோமீட்டர் 2-ம் நிலை யாகவும், வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டி புதுப்பட்டி குண்டாறு வரை 34 கிலோமீட்டர் 3-ம் நிலையாகவும் என மொத்தம் 260 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த கால்வாய் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்திற்கு 2021-22 அ.தி.மு.க. ஆட்சியில் பட்ஜெட்டில் ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டது.

    2022-23-ல் தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    மாயனூர் ஜீரோ பாய்ண்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை 4 பேக்கேஜ்கள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நடப்பு 2023-24 பொது பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை.

    நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த 7 மாவட்ட விவசாயிகளுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பட்ஜெட் விவாதத்தின் போது காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதல்நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவகோட்டை அருகே தண்ணீர் விற்பனை மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாழையூர் முத்து பெரியநாயகி நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு அரசு சார்பில் குடிநீர் தேக்க தொட்டி அமைத்து வீடுகளுக்கு பைப் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    சமீப காலமாக இந்த பைப்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் பெரியநாயகி நகரில் வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதே பகுதியில் ஆரோக்கியம் என்பவர் தனது வீட்டில் அதிக திறன் கொண்ட போர்வெல் அமைத்து டேங்கர்கள் மூலம் தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்.

    இதனால் இவரது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நீர் தேக்க தொட்டி ஆழ்துளை கிணறுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் மின்மோ ட்டார் அடிக்கடி பழுதாகி விடுகிறது.

    இதுகுறித்து ஆரோக்கி யத்திடம் பலமுறை அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இனிமேல் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும், மீண்டும் தண்ணீர் விற்ப னை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியநாயகி நகர் பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஏற்றிக் கொண்டிருந்த டேங்கர் வாகனத்தை வழிமறித்து அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனை அறிந்த ஆறாவயல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மருது, மைக்கேல் ஆகியோர் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆரோக்கியம் நீண்ட நாட்களாக வியாபார நோக்கத்தில் தண்ணீர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இனிமேல் தண்ணீர் விற்பனை செய்யக்கூடாது என்று அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ×