search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பங்குனி பொங்கல் விழாவில் தீ மிதித்த பக்தர்கள்
    X

    பங்குனி பொங்கல் விழாவில் தீ மிதித்த பக்தர்கள்

    • தயாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் தீ மிதித்தனர்.
    • கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பூ கரகம், தீ சட்டி, பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை டி.எஸ்.பி. கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.கோவில் டிரஸ்டிகள் பூசாரி சுப்பிரமணியன் தலைமையில் நாகராஜன், முருகன் ஆகியோர் விழா ஏற்பாட்டை செய்தனர்.

    Next Story
    ×