என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் வசந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பூமாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 89-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு வசந்த பெருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இன்று வசந்த திருவிழாவில் பால்குட ஊர்வலம் மிகவும் விமரிசையாக நடை பெற்றது.

    இதில் திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய பகுதி களை சேர்ந்த இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு பால்குடம், பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக சென்றனர். சாம்பான் ஊரணி அருகே உள்ள கோட்டை கருப்பர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்து 4 ரோடு, கீழரத வீதி, தேரோடும் வீதிகள் வழியாக கோவில் திருக்குளத்தை சுற்றி பூமாயி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்பு பக்தர்கள் கொண்டுவந்த பாலால் பூமாயி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம் சந்த னம், குங்குமம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் வெள்ளி அங்கியில், சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதன்பிறகு பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் பூமாயி அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அந்த பூக்களை பெண்கள் மடி ஏந்தி வாங்கிச்சென்றனர். பால் குட விழாவில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு பால்குடம், பூ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்ஹிந்த் வர்த்தக சங்க அமைப்பாளர் பாலகிருஷ்ணன், தலைவர் சுரேஷ் ராமன், செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் ராஜா, உயர்மட்டகுழு உறுப்பினர் சரவணன் மற்றும் உறுப்பி னர்கள் செய்திருந்தனர்.

    • சிங்கம்புணரி அம்மன் கோவிலில் பணத்துடன் உண்டியலை திருடிச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
    • அங்கு கண்காணிப்பு காமிரா வசதி இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது தெரியவில்லை.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி- வேங்கை பட்டி ரோட்டில் தனியா ருக்கு சொந்தமான கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா சன்னதியும் உள்ளது.

    இங்கு ஒரு அடி உயரத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இதில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் கோவிலை வழக்கம் போல் மூடிவிட்டு கோவில் ஊழி யர்கள் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையன் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து சாய்பாபா சன்னதி யில் பணத்துடன் இருந்த உண்டியலை திருடிச்ெசன்று விட்டான்.

    இன்று காலை வழக்கம் வழக்கம் போல் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் கோவிலை திறந்தார். அப்போது சாய்பாபா சன்னதியில் இருந்த உண்டி யல் திருட்டு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இது பற்றி அவர் கோவில் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உண்டியல் திருடப்பட்டது பற்றி சிங்கம்புணரி போலீசில் கோவில் நிர்வாகி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது திருடப்பட்ட உண்டியல் அருகில் உள்ள வர்த்தக சங்க கட்டிடத்தின் மாடியில் கிடப்பது தெரியவந்தது. அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையன் உண்டியலை அங்கு போட்டு சென்று உள்ளான். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை.

    அங்கு கண்காணிப்பு காமிரா வசதி இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது தெரியவில்லை. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • எஸ்.புதூரில் காய்கறி, மிளகாய் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் காய்கறி மற்றும் மிளகாய் உழவர் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் காய்கறி மற்றும் பப்பாளி பழங்கள் வெகுவாக விளைகின்றன. அதனை முறையாக தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    விவசாயிகளுக்கு பய னுள்ள வகையில், பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து, திறன்மிக்க வல்லுநர்களை கொண்டு இந்த கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது. இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு மற்ற விவசாயிகளுக்கும் இது குறித்து எடுத்துரைத்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த கருத்தரங்கில் பல்வேறு வகையான விதைகளை விவசாயி களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் டாக்டர்கள் செந்தில்குமார், சங்கர், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, போஸ், மண்டல ஒருங்கி ணைப்பாளர் (விதைகள்) ஜீவானந்தம், வேளாண்மை அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி மரகதம், புவனேசுவரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாரியம்மன் கோவில் பால்குட உற்சவ விழா நடந்தது.
    • அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் பால்குட உற்சவ விழா நடந்தது. மூங்கில் ஊரணியில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து பால்குடங்கள் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் குண்டு முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

    உற்சவ விழா, அம்மன், Festival, Amman

    இதைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திருப்பத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • உதவியாளர் மாணிக்கராஜ் தீர்மானங்களை வாசித்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் யூனியன் கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் தலைவர் சண்முகவடிவேல் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள் பிரகாசம், இளங்கோ, துணைத்தலைவர் மீனாள் வெள்ளைசாமி முன்னிலை வகித்தனர். உதவியாளர் மாணிக்கராஜ் தீர்மானங்களை வாசித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பிரசாந்த் நன்றி கூறினார். கவுன்சிலர்கள் கருப்பையா, சரவணன், ராமசந்திரன், ராமசாமி, பழனியப்பன், சுமதி செல்வகுமார், கலைமகள் ராமசாமி, பாக்கியலட்சுமி, சகாதேவன், ராமேசுவரி கருணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய தலைவர், இன்னும் 2 ஆண்டு காலத்திற்குள் விடுபட்டுள்ள மற்றும் புதிதாக அமைக்க வேண்டிய கிராம இணைப்பு சாலைகள் குறித்து துரிதமாக பதிவு செய்து சாலைகள் போடுவதற்கு வழிவகை செய்யுமாறு கவுன்சிலர்களிடம் வலியுறுத்தினார். கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தினர். உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் அலுவலர்களிடம் கூறினார்.

    • ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி திறக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    இந்த விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்பின்னர் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி விடுதியை பார்வையிட்டார்.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி னார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். பின்னர் அைமச்சர் பேசியதாவது:-

    கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருத ப்படும் என்ற அடிப்படையில் அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, வருகிறார்.

    இதுபோன்று, மாணவர்க ளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்கள் தரமான கல்வியை பெற்று, வாழ்வில் வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, தரமான கல்வியை பெறுவதற்கு அடிப்படையாக விளங்கி வரும் பள்ளிகளின் உட்கட்ட மைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை பெற்று பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத் துரை, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பாஸ்கரன், மானா மதுரை வட்டாட்சியர் (பொறுப்பு) ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சங்கர பரமேசுவரி, தீத்தான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜலட்சுமி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளி பரிதாப சாவு; வாலிபர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
    • காயமடைந்த ஜான்சன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மழவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 33). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருப்பாச் சேத்திக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டி ருந்தார். அப்போது பரமக்குடியில் இருந்து எதிர்புறமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாய மடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பாச் சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பிரவீன்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    காளையார்கோவில் அருகே உள்ள உருவாட்டி கொங்கந்திடல் பகுதியை சேர்ந்தவர் ராக்கு (57). இவர் காளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நடந்த சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ராக்கு காயமடைந்தார். விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    உருவாட்டி பாப்பாக் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    மானாமதுரை அருகே உள்ள இடையமேலூரை சேர்ந்தவர் குருசாமி (48). இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். விபத்து தொடர்பாக மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சுந்தரம் (75). இவர் அந்தபகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காரைக்குடி அருகே உள்ள செக்காலை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (25). இவர் சம்பவத்தன்று காரை ஓட்டிச்சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஜான்சன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • தேசிய அளவில் பார்வையற்றவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது.
    • சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள விசாலயன் கோட்டை சேது பாஸ்கரா வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அளவில் பார்வையற்ற வர்களுக்கான முதலாவது ''சேது பாஸ்கரா பிடே தரவரிசை சதுரங்க போட்டி'' நடந்தது.

    போட்டியை சேது பாஸ்கரா கல்வி குழுமங்களின் தலைவர் சேது குமணன் தொடங்கி வைத்தார். இதில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களை சேர்ந்த சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் சேது பாஸ்கரா கல்வி குழுமம் சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூ தன்ரெட்டி வழங்கினார். அவர் பேசுகையில், உலக தரமான கல்வியுடன் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்க ளை திறம்பட செய்து வருகிறது, சேது பாஸ்கரா கல்வி குழுமம்.

    இங்கு படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய நிலையில் உயர்ந்து சிறப்பிடம் பெறுவார்கள். கண்பார்வையற்ற வர்களுக்கான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள். குறைபாடுள்ளவர்கள் முன்னேறுவதை அனை வரும் பாராட்ட வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் திருப்பதி, கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குநர் கோபால், ஆலோசகர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இரட்டை கொலையில் 5 மாதமாக துப்பு துலங்காத மர்மம் உள்ளது.
    • குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணாங்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்-மகளை கொலை செய்து பேரனை கடுமையாக தாக்கி 60 பவுன் தங்க நகைகள் மற்றும் யவெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசா ரணை நடத்த வந்தபோது, இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து மற்ற வழக்குகள் போல் குற்றவாளிகளிம் இருந்து திருட்டு போன தங்க நகைகளை உருக்காமல் அப்படியே கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே உண்மை தன்மையை நாங்கள் அறிய முடியும் என கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர்.

    அதற்கு அவர்கள் உறுதி அளித்ததால் இறந்தவர்க ளின் உடல்கள் மருத்துவ மனையில் இருந்து பெறப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க மோதிரம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கைப்பற்றிய தாக தெரிவித்தனர். ஆனால் அந்த நகைகள் திருட்டுபோன நகைகள் இல்லை என்று கொலை செய்யப்பட்ட 2 பேரின் உறவினர்கள் தெரி வித்தனர்.

    இந்த வழக்கில் துப்பு துலக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆனால் தற்போது அவை 3 தனிப்படையாக குறைக்கப் பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்து 5 மாதங்கள் ஆகியும், திருட்டு போன நகைகள் கிடைத்தாதது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    இந்தநிலையில் போலீசார் தற்போது விசாரணை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், குற்றவாளி களை இன்னும் சில நாட்க ளில் கைது செய்து விடு வோம் எயன்று தெரிவித்துள் ளனர்.

    இந்த இரட்டை கொலை விசாரணையை தேவகோட்டையை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கவனித்து வருகின்றனர். எனவே விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது.

    • அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு செய்தனர்.
    • தென்கரை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தென்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதுதொடர்பாக தென்கரை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக அதே ஊரை சேர்ந்த வாசுதேவன் (வயது 75), சுப்பிரமணியன் (62), சொக்கலிங்கம் (46), செல்வராஜ் (27), குமார் (36) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • விவசாயிகள் மானியம் பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 2023-24ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்து, உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கு ரூ.515.534 கோடி நிதி ஒதுக்கீடு முன்மொழிவு பெறப்பட்டு, திட்ட இனங்களில் பயனாளி கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    மா பரப்பு விரிவாக்கம், வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பரப்பு விரிவாக்கம், கொய்யா பரப்பு விரி வாக்கம், பப்பாளி பரப்பு விரிவாக்கம், பலா பரப்பு விரிவாக்கம், நெல்லி பரப்பு விரிவாக்கம், முந்திரி பரப்பு விரிவாக்கம், மல்லிகை மற்றும் கிழங்கு வகை பூக்கள் (சம்பங்கி) பரப்பு விரிவாக்கம், பழைய தோட்டங்கள் புதுப்பித்தல் (மா மற்றும் முந்திரி), பசுமை குடில் மற்றும் நிழல்வலை கூடம் அமைத்தல், தேனீ வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வந்து tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து சொட்டு நீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து பயன்பெற லாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் ஆகாச கருப்பர் அந்த நாச்சி அம்மன் கோவிலில் பூச்செரிதல் மற்றும் பால்குட சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது. முன்னதாக தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டது. திரளோனோர் இதில் கலந்துகொண்டு அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்றனர். விழாவிற்கான பணிகளை வாசுதேவன் அம்பலம், தலைவர் சுப்பிரமணியன், சொக்கலிங்கம், ராமராஜன், கவுதமன் மற்றும் ஊர் மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    ×