என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • அதிக ரத்த தானம்் வழங்கியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    தேவகோட்டை

    உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தேவகோட்டை வட்டாரத்தில் அதிகளவில் ரத்தம் வழங்கிய ரத்த கொடையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரத்த ெகாடையாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சமூக ஆர்வலர் சாவித்திரி, பாலமுருகன், கல்லூரி மாணவர்கள் சூர்யா, கமலேசுவரன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வட்டார மருத்துவ அலுவலர் ஷாம் சேசுரான், திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் முருகன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆலோசகர் அழகு ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டிளித்தார்.
    • சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கி வரலாம்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. இதனை பா.ஜ.க முன்னாள் தேசிய செயலா ளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் குடிமகனாக உள்ள எவரும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது என்ற திருமா வளவனின் கருத்தை ஏற்று கொள்கிறேன்.

    2016-ல் மோடி ஆட்சி அமையவில்லை என்றால் பிச்சைக்கார நாடாக இந்தியா மாறியிருக்கும். மெட்ரோ ெரயில் பணிக்கு தகுதி இருந்தும் ஒப்பந்தம் கிடைக்காதவர்களே சி.பி.ஐக்கு புகார் செய்தனர். 6-வது நபராகவே அண்ணா மலை புகார் அளித்துள்ளார்.அதில் மு.க.ஸ்டாலினை விசாரிக்க வாய்ப்புள்ளது.

    நெல்லை எம்.பி ஞான திரவியத்திடம் திமுக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்பது தி.மு.க.வின் கண்துடைப்பு நாடகம். மணிப்பூர் கலவரம் என்பது நீண்ட நாட்களாக நடந்து வரும் பிரச்சினை.விரைவில் முடிவுக்கு வரும்.

    சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு என்பது பொய் வழக்கு. அறநி லையத்துறை அங்கு செல்லவே அதிகாரமில்லை. பீகாரில் நடந்த எதிர்கட்சி கூட்டம் என்பது அமலாக் கத்துறையால் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்ற கூட்டம். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற வாய்ப்பில்லை.

    பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி, ஆனால் அந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார்?. சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கிவரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள், வக்கீல் சொக்கலிங்கம் தேசிய பொது குழு உறுப்பினர், நாகேசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு ஆதார் திருத்த முகாம் நடந்தது.
    • 5 வயதை கடந்த மாணவ-மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் ஆதார் அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. எமனேசுவரம், தெ.புதுக்கோட்டை ஆகிய அஞ்சலகங்கள் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ளவும், பெயர், முகவரி, புகைப்படம், கைரேகை, கைப்பேசி எண் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யவும் 5 வயதை கடந்த மாணவ-மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதன், ஆசிரியர்கள் செய்தனர். அஞ்சல் துறை சார்பில் வர்த்தக மேலாளர் பாலு, தபால் அதிகாரி தீனதயாளன், தொழில் நுட்ப உத வியாளர்கள் மஞ்சுளா, நந்தினி, செண்பகா தேவி ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர். 

    • முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
    • சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    காரைக்குடி

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பையை, சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையமானது, குற்ற நடவடிக்கைகள் குறைப்பு, பொதுமக்களின் புகார் மீது தீர்வு காண்பது, ேபாலீஸ் நிலைய பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    இதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான சிவகங்கை மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காரைக்குடி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    • தேவகோட்டை அருகே புரவி எடுப்பு விழாவையொட்டி மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
    • சின்னஉஞ்சனை கிராமத்தில் அனுசரிக்கப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சின்னஉஞ்சனை கிராமத்தில் 1979-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி அன்று நடை பெற்ற புரவி எடுப்பு விழா வில் உயிர்நீத்த 5 பேரின் நினைவாக சின்னஉஞ்சனை கிராமத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து 44-வது ஐவர் தினம் நாளை (28-ந்தேதி) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் சின்னஉஞ்சனை கிராமத்தில் அனுசரிக்கப்பட உள்ளது.

    இதைெயாட்டி பால்குடம் மற்றும் பூத்தட்டு நிகழ்ச்சி சின்னஉஞ்சனை கிராமத்தில் நடைபெற உள்ளதால் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கும் பொருட்டு நாளை (28-ந்தேதி) ஒருநாள் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடை கள் 7501 (ஆராவயல்), 7521 (உஞ்சனை) மற்றும் 7603 (நரசிம்மபுரம்) ஆகிய 3 மட்டும் மூடப்படும்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மானாமதுரை பகுதியில் கோவில் திருவிழாவிற்கு குதிரைகள் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
    • மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அதிக அளவில் மண்பாண்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு முழுவதும் மண்பாண்ட தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது அரசு சார்பில் புவிசார் குறியீடு கிடைத்து உள்ளதால் மானாமதுரை மண்பாண்ட பொருட்க ளுக்கு பொதுமக்களிடம் மவுசு கூடி உள்ளது. மண்பாண்ட பொருட்களில் சமைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என நம்பபடுவதால் தினமும் மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான மக்கள் உற்பத்தி விலைக்கு மண்பாண்ட பொருள்களை வாங்கி செல்கின்றனர். இங்கு சீசனுக்கு ஏற்ற மண்பாண்ட பொருட்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மானாமதுரை சுற்றி உள்ள கிராமங்களில் மழை வேண்டி விவசாயம் செழிக்க குதிரை எடுப்பு விழாக்கள் ஆடி, ஆவணி மாதத்தில் நடைபெறும். இந்த திருவிழாவிற்காக ஏராளமான குதிரை சிலை, அய்யனார், கருப்பு, அம்மன் மற்றும் குழந்தை பொம்மை சிலைகள் செய்யும் பணியில் மண்பாண்ட தொழி லாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு தயார் செய்யப்படும் குதிரை மற்றும் சுவாமி சிலைகளை திருவிழா நடைபெறும் முதல் நாள் மானாமதுரையில் இருந்து திருவிழா நடைபெறும் கிராமம் வரை வான வேடிக்கையுடன் ஊர் வலமாக செல்வார்கள். கிராமங்களில் நடைபெறும் கோவில் விழாவிற்காக தற்போது மானாமதுரை பகுதியில் குதிரைகள் சுவாமி சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடை பெற்றுவருகிறது.

    • மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
    • சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சிவகங்கை சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்களும், அண்ணா சிலை அருகே வாடகை கட்டிடத்தில் சார்பு நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன.

    தற்போது குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்படும் கட்டிடத்துக்கு அருகிலேயே நீதித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அப் துல்குத்தூஸ், மஞ்சுளா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இவர்கள் நீதிமன்ற அலுவல் பணிகளை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சிவகங்கை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், சார்பு நீதிபதி கீதா, மானாமதுரை நீதிமன்ற நீதிபதி அருண் பாண்டியன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

    முன்னதாக, நீதிபதிகளை மானாமதுரை வக்கீல்கள் சங்க தலைவர் கணேசன், செயலர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையிலான வக்கீல்கள் வரவேற்றனர்.

    • காரைக்குடி, தேவகோட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.



    புதுவயல் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடந்த பேரணி. 

    காரைக்குடி

    காரைக்குடியில் உட்கோட்ட போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கினார். வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு பேரணி கண்ணதாசன் மணி மண்டபத்தில் தொடங்கி கல்லூரி சாலை வழியாக சென்று மீண்டும் கண்ணதாசன் மணி மண்ட பம் வந்தடைந்தது.

    காரைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விடுதலை எனும் பெயரில் குழு ஒன்றை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    புதுவயல் கல்லூரி

    புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் பேரணி நடந்தது. கல்லூரி பொருளாளர் முகமது மீரா, சாக்கோட்டை சப் -இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் தாளாளர் மற்றும் மற்றும் முதல்வர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

    இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். புதுவயல், சாக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து மேட்டுக்கடை பஸ் நிலையம் வரை பேரணி நடந்தது.



    தேவகோட்டையில் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு பிரசாரம்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆலோசனை யின் பேரில் ேதவ கோட்டையில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அழகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, அன்சாரி உசேன், போலீசார், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். யூனியன் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்நிலையம் வழியாக தியாகிகள் பூங்கா வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    • சிவகங்கையில் வாக்குப்பதிவு எந்திர அறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    இந்திய தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் பொது அறிவுரையின்படி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையினை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து, ஆய்வு மேற்கொண்டு, காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    அதனடிப்படையில், இம்மாத காலாண்டு ஆய்வு அறிக்கையை சமர்பிப்ப தற்கு ஏதுவாக, சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பறை யினை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுடன் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    இதில் தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் திருமாறன், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் சங்கர், சுமதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட ஊசு போட்டிகள் நடந்தது.
    • பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், மாவட்ட ஊசு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. இதில்

    100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தவுல் பாடம், சான்சு பாடம் போன்ற போட்டிகளில் சப்-ஜூனியர், ஜூனியர், யூத் சீனியர் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

    இதற்கு சென்னை காளிங்கன், திருவண்ணாமலை பெரியசாமி, சிவகங்கை லதா நடுவராக பணியாற்றினர். இந்த போட்டியில் முதலிடத்தை பெற்ற வீரர்கள் ஜூலை மாதம் வந்தவாசியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • பூமாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மணமேல் பட்டி கிராமத்தில் உள்ளது பூமாயி அம்மன் கோவில் வீடு. இந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தை ஒட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கல இசை வாத்தியங்களுடன் கடம் புறம்பாடாகி கோயில் வீட்டை சுற்றி வலம் வந்து பின்பு புனிதநீரை கோபுரத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பூமாயி அம்மன், ஆண்டி தெய்வம் மற்றும் பரிவார தெய்வங்களான பெரியகருப்பு, ஸ்ரீ சின்னகருப்பு கோவில் வீடு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மணமேல்பட்டி, திருப்பத்தூர், ஜெயமங்கலம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மனமேல்பட்டி கிராமத்தார்கள், பூமாயிஅம்மன் கோவில் பங்காளிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சுமார் 45 பணியாளர்கள் கடுமையாக உழைத்து 1½ டன் எடை கொண்ட பிரமாண்ட வடக்கயிறை உருவாக்கினார்கள்.
    • கோவில் தேர்களுக்கு வடக்கயிறு தயாரிக்கும் திருப்பணியில் எங்கள் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தென்னை அதிகளவு பயிரிடப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கயிறு தயாரிப்பு தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. சாரம் கட்டுவதற்காக கொச்சை கயிறு, விவசாயத்துக்கு தேவைப்படும் நாற்று கட்டும் கயிறு உள்ளிட்ட கயிறுகள் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன.

    மேலும் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தேர்வடங்களையும் தயாரித்து அனுப்புகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ராமர் கோவில் தேருக்காக 100 அடி நீளமும், 13 இன்ச் சுற்றளவும் கொண்ட பிரமாண்ட வடக்கயிறு தயாரிக்கும் பணி சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வளாக பகுதியில் தொடங்கி நடைபெற்றது.

    சுமார் 45 பணியாளர்கள் கடுமையாக உழைத்து 1½ டன் எடை கொண்ட பிரமாண்ட வடக்கயிறை உருவாக்கினார்கள். சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் தேர் வடம் தேங்காய் மட்டைகளில் இருந்து நார் உரித்து பக்குவம் செய்து வடக்கயிறாக தயாரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கயிறு தயாரிப்பாளர் நல்லதம்பி கூறியதாவது:-

    கோவில் தேர்களுக்கு வடக்கயிறு தயாரிக்கும் திருப்பணியில் எங்கள் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒரு தொண்டாகவே நினைத்து செய்து வருகிறோம். மேலும் கடுமையான விரதம் இருந்து தேர் வடக்கயிறு தயார் செய்யும் பணியில் ஈடுபடுகிறோம். தற்போது சேலம் அயோத்தியாபட்டினம் ராமர் கோவிலுக்கு 1½ டன் எடையுள்ள தேர்வடத்தை 7 நாட்களில் தயாரித்து அனுப்பியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×