என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெச்.ராஜா"

    • நாங்கள் எப்போதும் ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்கமாட்டோம்.
    • சம்பவம் நடந்தன்று நிகழ்விடத்தில் இருந்தவர் விஜய்.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள, அவரது கடைசிப்படம் எனக்கூறப்படும் ஜனநாயகன் பொங்கலை முன்னிட்டு நாளை(ஜன.9) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்று விவகாரத்தால் நாளை வெளியாக முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

    டிச.19 அன்றே படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் கருத்து தெவித்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் ஹெச்.ராஜாவிடம், கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ சம்மன், தற்போது தணிக்கை சான்றிதழ் இழுபறி இவையெல்லாம் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக கொடுக்கப்படும் நெருக்கடிகளா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,

    "தணிக்கைத் துறை ஒரு சுயதீன அமைப்பு. அவர்கள் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவார்கள். பாஜக நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் செப்.27-லேயே கொடுத்திருக்கும். மனிதாபிமானத்தோடு மத்திய அரசு செயல்பட்டது. பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் இன்று விஜய் வெளியே வந்திருக்கமாட்டார். நாங்கள் எப்போதும் ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்கமாட்டோம். கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சம்பவம் நடந்தன்று நிகழ்விடத்தில் இருந்தவர் விஜய். அதனால் விசாரணைக்கு அவரை அழைத்திருப்பர். வேறு எந்த உள்நோக்கமும் இதில் இல்லை.

    • விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டிளித்தார்.
    • சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கி வரலாம்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. இதனை பா.ஜ.க முன்னாள் தேசிய செயலா ளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் குடிமகனாக உள்ள எவரும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது என்ற திருமா வளவனின் கருத்தை ஏற்று கொள்கிறேன்.

    2016-ல் மோடி ஆட்சி அமையவில்லை என்றால் பிச்சைக்கார நாடாக இந்தியா மாறியிருக்கும். மெட்ரோ ெரயில் பணிக்கு தகுதி இருந்தும் ஒப்பந்தம் கிடைக்காதவர்களே சி.பி.ஐக்கு புகார் செய்தனர். 6-வது நபராகவே அண்ணா மலை புகார் அளித்துள்ளார்.அதில் மு.க.ஸ்டாலினை விசாரிக்க வாய்ப்புள்ளது.

    நெல்லை எம்.பி ஞான திரவியத்திடம் திமுக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்பது தி.மு.க.வின் கண்துடைப்பு நாடகம். மணிப்பூர் கலவரம் என்பது நீண்ட நாட்களாக நடந்து வரும் பிரச்சினை.விரைவில் முடிவுக்கு வரும்.

    சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு என்பது பொய் வழக்கு. அறநி லையத்துறை அங்கு செல்லவே அதிகாரமில்லை. பீகாரில் நடந்த எதிர்கட்சி கூட்டம் என்பது அமலாக் கத்துறையால் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்ற கூட்டம். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற வாய்ப்பில்லை.

    பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி, ஆனால் அந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார்?. சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கிவரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள், வக்கீல் சொக்கலிங்கம் தேசிய பொது குழு உறுப்பினர், நாகேசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×