பூமாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பூமாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
பூமாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மணமேல் பட்டி கிராமத்தில் உள்ளது பூமாயி அம்மன் கோவில் வீடு. இந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தை ஒட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கல இசை வாத்தியங்களுடன் கடம் புறம்பாடாகி கோயில் வீட்டை சுற்றி வலம் வந்து பின்பு புனிதநீரை கோபுரத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பூமாயி அம்மன், ஆண்டி தெய்வம் மற்றும் பரிவார தெய்வங்களான பெரியகருப்பு, ஸ்ரீ சின்னகருப்பு கோவில் வீடு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மணமேல்பட்டி, திருப்பத்தூர், ஜெயமங்கலம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மனமேல்பட்டி கிராமத்தார்கள், பூமாயிஅம்மன் கோவில் பங்காளிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com