என் மலர்
நீங்கள் தேடியது "ஆதார் திருத்தம்"
- பள்ளி மாணவர்களுக்கு ஆதார் திருத்த முகாம் நடந்தது.
- 5 வயதை கடந்த மாணவ-மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
மானாமதுரை
மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் ஆதார் அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. எமனேசுவரம், தெ.புதுக்கோட்டை ஆகிய அஞ்சலகங்கள் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ளவும், பெயர், முகவரி, புகைப்படம், கைரேகை, கைப்பேசி எண் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யவும் 5 வயதை கடந்த மாணவ-மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதன், ஆசிரியர்கள் செய்தனர். அஞ்சல் துறை சார்பில் வர்த்தக மேலாளர் பாலு, தபால் அதிகாரி தீனதயாளன், தொழில் நுட்ப உத வியாளர்கள் மஞ்சுளா, நந்தினி, செண்பகா தேவி ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
- காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கும் பணியை தொடங்கி வெறும் 30 பேருக்கு மட்டுமே ஆதார் பணிகள் மேற்கொள்கின்றனர்.
- மற்றவர்களை மறு நாள் வரச் சொல்லி விட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேறு ஒரு நாளுக்கு வருமாறு கூறுகின்றனர்.
நிலக்கோட்டை:
இந்தியா முழுவதும் ஒரே அடையாளமாக ஆதார் அட்டை விளங்குகிறது. இந்த ஆதார் அட்டை தற்போது ஒரு மனிதனின் முக்கிய அங்கமாக பள்ளி யில் படிப்பதற்கும், வங்கி கணக்கு தொடங்குவதற்கும், ரேஷன் கார்டில் இடம்பெ யர்வதற்கு என அனைத்து பணிகளுக்கும் முக்கியமாக கருதப்படுகிறது. தற்போது மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான குடும்ப தலைவிகள் ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, ரேசன் கார்டு ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு சமர்ப்பித்து வருகின்றனர். ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காகவும், இ-சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நிலக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் ஆதார் திருத்தங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் முதியோர்கள் என அனைவரும் ஆதார் அட்டை புதிதாக எடுப்பதற்கும், திருத்தங்கள் செய்வதற்கும் காலை 7 மணி முதல் குவியத் தொடங்கி வருகின்றனர்.
இதனால் நிலக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு கூட்டம் அலை மோதி வருகிறது. காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கும் பணியை தொடங்கி வெறும் 30 பேருக்கு மட்டுமே ஆதார் பணிகள் மேற்கொள்கின்றனர். மற்றவர்களை மறு நாள் வரச் சொல்லி அலைக்கழிக்கின்றனர். மறு நாள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேறு ஒரு நாளுக்கு வருமாறு கூறுகின்றனர்.
ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த சுவனேசன் என்ற பள்ளி மாணவன் கூறியதாவது:-
நான் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு விடுப்பு எடுத்து ஆதார் அட்டையை புதுப்பிப் பதற்காக அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அலைக்கழிக்கின்றனர். எனவே ஆதார் சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஆதார் திருத்தத்துக்காக வந்து செல்வதால் பாடங்களை தொடர்ந்து கவனிக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காண பள்ளியிலேயே இ-சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்திய குடிமகன்கள் அனைவரும் ஆதார் அட்டை எடுக்க வேண்டும் என்றும் அதை வங்கி கணக்கு உள்பட பல்வேறு துறைகளுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்பு ஆதார் அட்டைகள் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆதாரில் உள்ள ரகசிய தகவல்கள் கசிவதாக வெளியான புகாரை தொடர்ந்து தனியார் மையங்களில் ஆதார் அட்டைகள் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவை தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் அமைக்கப்பட்டு உள்ள ஆதார் மையங்களில் மட்டும் புதிதாக ஆதார் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த மையங்களுக்கு சென்று ஆதார் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.
இந்த நிலையில் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யும் பணி மட்டும் தற்போது தனியாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆதாரில் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றால் அதற்கு முன்பு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அது நேற்று முன்தினம் முதல் ரூ.50 ஆக உயர்ந்து உள்ளது. இதுகுறித்து தனியார் மையத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
ஆதாரில் பெயர் மாற்றம், பெயரில் பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்வதற்கு இதுவரை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 1-ந் தேதி முதல் இது ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதற்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் கட்டணம் ரூ.42.37 ஆகும். மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. ரூ.3.80. மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. ரூ.3.80 ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






