search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திர அறையை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    வாக்குப்பதிவு எந்திர அறையை ஆய்வு செய்த கலெக்டர்

    • சிவகங்கையில் வாக்குப்பதிவு எந்திர அறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    இந்திய தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் பொது அறிவுரையின்படி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையினை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து, ஆய்வு மேற்கொண்டு, காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    அதனடிப்படையில், இம்மாத காலாண்டு ஆய்வு அறிக்கையை சமர்பிப்ப தற்கு ஏதுவாக, சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பறை யினை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுடன் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    இதில் தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் திருமாறன், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் சங்கர், சுமதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×