என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காரைக்குடி அருகே அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் உள்ள அரியநாயகி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி அருகே கீழாநிலைக்கோட்டையில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த

    25-ந்தேதி அனுக்ஜை, விக்னேசுவஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.வேத மந்திரங்களும் வேத பாராயணங்களும் முழங்க பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமை யில் சிவாச்சாரியார்கள் 6 கால யாக பூஜைகளை நடத்தினர். பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, திருநாவுக்கரசர் எம்.பி., தொழிலதிபர் செல்லப் பன் அம்பலம், பி.எல்.படிக்காசு அம்பலம், செல்லப்பன் வித்யா மந்திர் தாளாளர் சத்தியன், தொழிலதிபர்கள் பி.எல்.பி. பாலசுப்பிரமணியன், பி.எல்.பி. பெரியசாமி, மாங்குடி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த், பள்ளத்தூர் பேரூராட்சி சேர்மன் சாந்தி சங்கர், சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன், ராஜேஷ்கண்ணன், சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை 84 நாட்டு நாட்டார்கள், அம்பலக்காரர்கள், மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    • சிவகங்கை அருகே கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    காளையார் கோவில்

    சிவகங்கை மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கே.சொக்க நாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி புரவலருமான தென்னவன தலைமை தாங்கினார்.

    தலைமைக்கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, காளை யார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து ஆகியோர் பேசினர். பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் யோககிருஷ்ணகுமார், ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சுப. தமிழரசன் வரவேற்றுப் பேசினார்.

    இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேதுபதி ராஜா, துஷாந்த் பிரதீப் குமார், நாட்டரசன் கோட்டை பேருர் செயலா ளர் ஜெயராமன் ஒன்றிய நிர்வாகிகள் அழகப்பன், கண்ணப்பன், செல்லப்பாண்டி, கண்ணாத்தாள் தென்னரசு, பொருளாளர் கண்ணன், அல்லூர் ரவி, இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன், சுசீந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், செல்வராஜ், மையப்ப செட்டியார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

    இளையான்குடி

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதை பொருள் ஒழிப்பு கழகம், நாட்டு நல பணி திட்டம் மற்றும் இளையான்குடி சரக காவல்துறையினர் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    பேரணியை கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், காவல் துறை அதிகாரிகள் சரவணக்குமார், முக்கண்ணன், மதுவிலக்கு பிரிவு காவல் துறை அதிகாரிகள் போஸ் மற்றும் அய்யனார் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இளையான்குடி கண்மாய் கரையில் தொடங்கிய பேரணி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    பேரணியில் 300 மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகை கள் ஏந்தி கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் போதை பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா,நாசர் மற்றும் நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது அப்ரோஸ்,சேக் அப்துல்லா,பாத்திமா கனி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

    • அரசு கல்லூரியில் குடிநீர் சுத்திகரிக்கப்பு நிலையத்தை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
    • இந்த சுத்தியடைப்பு நிலையம் 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் 50 ஆண்டுகால பழமையான மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கோரிக்கையை ஏற்று சிவகாங்கை நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்தியடைப்பு நிலையத்தை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை.ஆனந்த் திறந்து வைத்தார்.

    அப்போது கல்லூரிக்கு தேவையான மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று அரசு மற்றும் தன்னார்வலர்களை கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நகர்மன்ற தலைவர் உறுதியளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் திலகவதி கண்ணன், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் ஏராளமான பங்கேற்றனர்.

    • இளையான்குடி அருகே வீட்டின் முன்பு பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இளையான்குடி

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மனைவி நாகவள்ளி (வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்றிருந்தனர். இதை பார்த்த நாகவள்ளி அவர்களிடம் விசாரித்தார்.

    அப்போது அவர்கள் அந்த பகுதியில் திருட வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகவள்ளி இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். உடனே மர்மநபர்கள் நாகவள்ளியை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து நாகவள்ளி கொடுத்த புகாரின்பேரில் சாலை கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு ேபான்றவை அடிக்கடி நடந்து வருகிறது. பூட்டி இருக்கும் வீட்டை ேநாட்டமிடும் கொள்ளை யர்கள் கைவரிசை காட்டுவதும், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதற்கென நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ.21.07 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 2 வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார். அது மட்டுமின்றி, பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கென துறை ரீதியான உத்தரவுகளை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கை களை சிறப்பாக மேற் கொண்டு வருகிறார்கள்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி, அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்களின் அடிப்படைத்தே வைகளை நிவர்த்தி செய்வது ஒவ்வொரு மக்கள் பிரதி நிதிகளின் கடமையாகும். ஆகவே, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து, எடுத்துரைத்து, அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொது மக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன் மேலவண்ணாயிரிப்பு ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னம்மாள், உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை அரசு பள்ளியில் தூய்மை விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
    • குப்பைகளை தரம் பிரித்தல், பிளாஸ்டிக்கின் தீமைகள், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பற்றிய நாடகம் நடத்தப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, கமிஷனர் கண்ணன் தலைமையில் சென்னை வெங்கடாசலபதி நாடக சபா குழுவினர்களால் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குப்பைகளை தரம் பிரித்தல், பிளாஸ்டிக்கின் தீமைகள், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், தலைமை யாசிரியர் பேப்லிட், துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழாசிரியை தேவி நன்றி கூறினார்.

    • போதை பொருள் கள்ள சாராய எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் போலி மதுபானம் மற்றும் போதை பொருட்கள், கள்ளச் சாரா யத்திற்கு எதிரான விழிப் புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் சிங்கம்புணரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவி கள் பங்கேற்றனர். இந்த போதை பொருள் விழிப் புணர்வு ஊர்வலத்தை சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி போதை பொருட் களை தமிழ் நாட்டில் வேரறுக்க மாணவ- மாணவிகளிடம் உறுதி மொழி எடுத்து விழிப்புணர்வு ஊர் வலம் நடைபெற்றது.

    • எம்.எல்.ஏ. நிதியில் அமைக்கப்பட்ட சாலை திறப்புவிழா நடந்தது.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சீகூரணி கிராமத்தில் சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த பகுதியில் சாலை வசதி செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தனது தொகுதி நிதியில் சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி அந்தப் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இதனை செந்தில் நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டிபன்அருள்சாமி, காளையார்கோவில் ஒன்றிய தலைவர் கோவிந்தன், மறவமங்கலம் ஊராட்சி தலைவர் அன்பழகன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட பாசறை துணை செயலாளர் சதிஷ், வழக்கறிஞர்கள் நக்கீரன், நவநீதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    • மானாமதுரையில் நடந்த கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜையில் அமைச்சர் பங்கேற்றார்.
    • கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன் தலைமை தாங்கினார்.

    தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தற்போது மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 8.50 கி.மீட்டர் தூரத்திற்கு பிரதானக்குழாய்கள் பதித்து, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான அக்ரஹாரம் சாலை, தாயமங்கலம் சாலை, அழகர்கோவில் சாலை, மதுரா நகர் சாலை, கன்னார் சாலை, சோனையா கோவில் என 6 இடங்களில் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.

    மேற்கண்ட 6 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரானது 2.20 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மாங்குளம் குப்பைக் கிடங்கில் அமைக்கப்பட உள்ள (20 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் கசடு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிப்பட உள்ளது. இத்திட்டத்தினை ஓராண்டு காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜாமணி, தி.மு.க. நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் எந்திரங்கள்-கருவிகள் வழங்கப்படும் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய வாடகையில் சிறு, குறு விவ சாயிகள் பெற்று பயன் பெறலாம். உழவுப்பணி கள் மற்றும் அறுவடைப் பணிக ளுக்கு டிராக்டருடன் இயக்கக்கூடிய கருவிகளான சுழற்கலப்பை, நிலக்கடலை தோண்டும் கருவி, சோளம் அறுவடை எந்திரம், வைக்கோல் ரவுண்டு பேலர் போன்ற கருவிகளுடன் 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.

    புன்செய் நிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் உழவுப்பணிக்கு தேவைப் படும் டிராக்டர் மற்றும் உபகரணங்களுடன் 1 ஏக்கர் நிலத்துக்கு ரூ.250-ம், அதிக பட்சமாக 5 ஏக்கர் நிலத்திற்கு 5 மணி நேரத்துக்கு மொத்த வாடகையில் ரூ.1,250-ம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

    நன்செய் நிலம் வைத்து உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நிலத்திற்கு மொத்த வாடகையில் ரூ.625 பின்னேற்பு மானியமாக பெற்று பயன்பெறலாம்.

    மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவி கள் வாடகைக்கு தேவைப் படும் விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம். தாங்கள் செலுத்திய தொகையை பின்னேற்பு மானியமாக தங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு இளை யான்குடி, காளையார் கோவில், சிவகங்கை, மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார சிறு, குறு விவசாயிகள் உதவி செயற் பொறியாளரையும், தேவகோட்டை, கல்லல், கண்ணங்குடி, எஸ்.புதூர், சாக்கோட்டை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டார சிறு, குறு விவசாயிகள் காரைக்குடி உதவி செயற் பொறி யாளரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 30-ந்தேதி முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடக்கிறது.
    • தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகிற 30-ந்தேதி மாலை 4.30 மணிக்கும் மற்றும் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாலை 5.30 மணிக்கும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின், ஒருங்கி ணைந்த கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இதில் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து பல்வேறு துறை அலுவ லர்கள் விளக்கி பேசுவர். எனவே ஆர்வமுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர், சார்ந்தோர், தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தி னர் தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×