என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
- அரசு கல்லூரியில் குடிநீர் சுத்திகரிக்கப்பு நிலையத்தை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
- இந்த சுத்தியடைப்பு நிலையம் 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
சிவகங்கை
சிவகங்கையில் 50 ஆண்டுகால பழமையான மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கோரிக்கையை ஏற்று சிவகாங்கை நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்தியடைப்பு நிலையத்தை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை.ஆனந்த் திறந்து வைத்தார்.
அப்போது கல்லூரிக்கு தேவையான மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று அரசு மற்றும் தன்னார்வலர்களை கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நகர்மன்ற தலைவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் திலகவதி கண்ணன், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் ஏராளமான பங்கேற்றனர்.






