என் மலர்
சிவகங்கை
- மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் நடந்தது.
- திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த சென்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூரில் மீனாட்சி சொக்கநாதர் கோவில் பழமையான கோவிலாகும். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த மீனாட்சி சொக்கநாதர் கோவில் இந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்.
மதுரை அன்னை மீனாட்சி கோவிலுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் இந்த கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோவிலில் கடந்த ஜூன் 23-ந் தேதி ஆனி மாத திருமஞ்சன திருவிழா விற்கான காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். 8-ம் நாளில் மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
அதை தொடர்ந்து திரு விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் விமரிசையாக இன்று நடந்தது. இதையொட்டி முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகனும், 3-வது தேரில் சண்டி கேசுவரரும், பெரிய தேரில் பிரியாவிடை உடனான சொக்கநாதரும், 2-வது பெரிய தேரில் அன்னை மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஊர் அம்பலகாரர் விஸ்வ நாதன், தேவஸ்தான கண்கா ணிப்பாளர் தன்னாயிரம், கௌரவ கண்காணிப்பாளர் மாணிக்கம், பெரிய சாமியாடி சொக்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த சென்றனர்.
- கலைஞர் கோட்டத்தை பார்க்க பள்ளி மாணவ-மாணவிகளை எம்.எல்.ஏ. அழைத்து சென்றார்.
- அரசு குளிர்சாதன பஸ்கள் வர வழைக்கப்பட்டிருந்தது.
மானாமதுரை
திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பார்ப்பதற்காக தமிழரசி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மானாமதுரை தொகுதியை சேர்ந்த திருப்புவனம், இளை யான்குடி, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள், 100 மாணவிகளை அழைத்து செல்ல முடிவு செய்யப் பட்டது.
அதன்படி மாணவ-மாணவிகளை திருவாரூர் அழைத்துச் சொல்ல 4 அரசு குளிர்சாதன பஸ்கள் வர வழைக்கப்பட்டிருந்தது. மானாமதுரை சிவகங்கை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர் புறம் உள்ள தனியார் மகாலில் மாணவ- மாணவி களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அதன்பின் மாணவ- மாணவிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பஸ்களில் ஏறி அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ., திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், ஆகியோர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தமிழரசன், காங்கிரஸ் மாவட்ட மூத்த தலைவர் முருகேசன் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் ராஜாமணி, கடம்பசாமி, வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, ரவிச் சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்கள் முத்துசாமி, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன.
- காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன. அவ்வாறு வந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் சென்றன.
இந்த மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் காளைகள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்தநேரம் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அதில் படுகாயம் அடைந்த காடனேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்ற வாலிபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
- நெற்குப்பை பேரூராட்சி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
- முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மன்ற செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார்.பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் புசலான் உடல் நலகுறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரண மடைந்தார்.
இதனால் துணைத்தலைவ ராக இருந்த பழனியப்பன் பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் அனைவரையும் வரவேற் றார். தொடர்ந்து முன்னாள் சேர்மன் புசலான் மறைந் ததையொட்டி இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.
அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் செயல் அலுவலர் கனே சனுக்கு வார்டு கவுன்சிலர்களும் அலுவலர் பணியாளர்களும் பொன்னாடை போர்த்தி பணிநிறைவு வாழ்த்துக்கள் தெரிவித்த னர். கூட்டம் முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.
- நெகிழிப்பைகளை தவிர்க்க வேண்டும்.
- விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கூட்டு துப்புரவுப் பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்,சிவகங்கை பழைய நீதிமன்ற வாசல் அருகி லுள்ள, ராமச்சந்திரா பூங்கா பகுதியில் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அனைத்து இடங்களிலும் ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப்பைகளை அப்புறப்படுத்தும் திட்டம் ஒன்றிய, மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், மண்ணை பாதுகாப்போம் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற குறிக்கோளுடன் பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நகர்ப்பகுதி மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பையை தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வருங்காலங்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை தவிர்த்து மண் வளத்தை பாதுகாப்பதுடன் சுகாதாரத்தையும் பாதுகாத்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மீண்டும் மஞ்சள்பை திட்டத்தினை கருத்தில் கொண்டு அனைவரும் நெகிழிப் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும்.
இதேபோன்று, சுகாதாரத்தினை பேணிக்காத்திடும் வகையில், குப்பைகளை தங்களது பகுதிகளிலுள்ள தெருவோரங்களில் போடாமல், தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை, முறையாக தங்களது வீட்டிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, தங்களது பகுதிகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் கீழ், குப்பைகளை தரம் பிரித்திடுவோம், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடு வோம்-என் குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில், சிவகங்கை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர் (பொ) பாண்டீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறு வனத்தைச் சார்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புல்வநாயகி அம்மன் கோவில் ஆனி உற்சவ திருவிழா தேரோட்டம் நடந்தது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள பாகனேரி நகரில் பிரசித்தி பெற்ற புல்வநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத உற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட வைபவம் வெகு விமரிசை யாக நடந்தது. இவ்விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சி யான 9-ம் திருநாளில் திரு தேரோட்ட வைபவம் நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப் பட்ட பெரிய தேரில் உற்சவர் புல்வநாயகி அம்மன் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப் பட்டது. பின்னர் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. இவ்விழாவில் சுற்றுவட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
- கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை தேவரம்பூர் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தேவரம்பூர் கிராமத்தில் ஆதினமிளகி அய்யனார் மற்றும் பொன்னரசு கூத்த அய்ய னார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா விமரிசையாக நடை பெற்றது.
முன்னதாக கோவில் முன்பு வைக்கப்பட்ட 5 பதுமைகளுக்கு (குதிரை களுக்கு) வண்ண பலூன், கண்ணாடி, பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பூஜைகள் மற்றும் தீப ஆராதனை நடந்தது.
அதனை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பதுமைகள் கொண்டுவரப்பட்டு மந்தை கோவில் வீடு முன்பாக அமைக்கப்பட திடலில் வைக்கப்பட்டது. சாரல் மழையில் நனைந்த படி திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்க ளின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேவரம்பூர் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.
- 7-ந் தேதி தேர்பவனி நடக்கிறது.
- 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் உலக புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவிழா தொடக்கமாக பங்கு இறைமக்கள் திரு இருதய ஆண்டவர் உருவம் தாங்கிய கொடியை ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டு வந்து ஆலயத்தின் அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்ட அருட்பணியாளர்களிடம் வழங்கினர். அதைத்தொடர்ந்து மதுரை ஞானஒளிபுரம் பங்குத்தந்தை ஜேம்ஸ் தலைமையில் மாலை 6.30 மணிக்கு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
சிவகங்கை வியானி நிலைய இயக்குனர் அருள்தந்தை அமலன், எட்வர்ட், கேரளாவை சேர்ந்த அருட்பணியாளர் ஜெரோம், சவேரியார்பட்டினம் பங்குந்தந்தை புஷ்பராஜ் கொடியேற்ற, திரு இருதய ஆண்டவர் ஆலய அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்டோர் கொடியேற்ற திருப்பலி நிறைவேற்றினர்.
இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் பல்வேறு பங்கு இறை மக்கள் சார்பில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி நிறைவேற்றப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 7-ந் தேதி இரவு திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை சிவகங்கை மறை மாவட்ட (பொறுப்பு) ஆயர் ஸ்டீபன் அந்தோணி திருவிழா திருப்பலியும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியும் நிறைவேற்றுகின்றனர்.
8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அருட்பணியாளர் அ.இமானுவேல்தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறை மக்கள், மரியின் ஊழியர் சபை சகோதரிகள் செய்துள்ளனர்.
- கிராமத்து அம்பலகாரர்கள் கழுவனுக்கு மரியாதை செய்தனர்.
- தன்னை விரட்டி வரும் இளைஞர்களை தீப்பந்தத்தால் கழுவன் விரட்டி சுடுவது அனைவரையும் கவர்ந்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி விசாக பிரமோத்ஸவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி வரலாற்று சிறப்புமிக்க கழுனை விரட்டியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நின்றசீர் நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தபோது சமண சமயத்தை ஆதரித்தார். அப்போது பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைப்பிடித்தனர்.
பாண்டிய மகாராணி அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தால் நெருப்பு வைத்தனர். இந்த கொடுஞ்செயலுக்கு துணை நின்றமைக்காக பாண்டிய மன்னன் மீது கடும் கோபமுற்றனர். பாண்டிய மன்னனை வெப்பு நோய் தாக்கியது. சமணர்கள் முயன்றும் நோயை குணப்படுத்த முடியவில்லை.
மகாராணி நோயை குணப்படுத்த திருஞான சம்பந்தரை அழைத்தார். திருஞான சம்பந்தர் திருநீற்று பதிகம் பாடி திருநீற்றை தந்து நோயை குணப்படுத்தினார். தீராத நோய் குணமாகியதால் மன்னன் சைவ சமயத்தை தழுவினான். இதனால் கோபமுற்ற சமணர்கள் புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சைவர்களை அழைத்தனர்.
இதில் தோற்றால் மன்னன் தங்களை கழுவேற்றலாம் என்றார்கள். இந்த போட்டியில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்பந்தரின் ஏடுகள் எதிர்திசையில் மிதந்து வந்தன. திருஞான சம்பந்தர் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த சமணர்களை கழுவேற்ற பாண்டிய மன்னன் ஆணையிட்டதாகவும் பெரியபுராணம் கூறுகிறது. இதனை நினைவுகூறும் வகையில் இந்த கழுவன் திருவிழா நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 6-ம் நாளானன்று கொடூர கழுவன் விரட்டும் விநோத திருவிழா நள்ளிரவில் நடைபெற்றது.
உடல் முழுவதும் கருப்பு சாயம் பூசி முகத்தை மறைக்கும் ஜடா முடி அலங்காரம், அரைஞான் கயிற்றில் ஜடா முடியால் ஆடை, கோரமான உருவத்தில் திகிலூட்டும் தீவட்டியுடன் உலாவந்த கழுவனை விரட்டி பிடித்த மக்கள் மற்றும் இளைஞர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
திகிலூட்டும் அலங்காரத்துடன் உடல் முழுவதும் கரிபூசிய சாயம், ஆட்டு ரத்தம், ஆட்டுக்குடல்களுடன் கோவிலுக்குள் அழைத்து வந்து பலி கருப்பன சுவாமியிடம் அருள்பெற்று ஸ்ரீசேவுகப்பெருமாள் சுவாமி எழுந்தருளியுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நாட்டார்கள் முன்னிலையில் பணிவுடன் தவழ்ந்து வந்த கழுவனுக்கு அங்கு குவிந்திருந்த பக்கதர்கள் கூட்டம் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அங்கு கோவில் சார்பில் கழுவனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டு சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து, கிராமத்து அம்பலகாரர்கள் கழுவனுக்கு மரியாதை செய்தனர். கழுவன் விரட்டும் நிகழ்ச்சியில் உற்சாகமடைந்த இளைஞர்கள் பட்டாளம் கழுவனை விரட்டுவதும், தன்னை விரட்டி வரும் இளைஞர்களை தீப்பந்தத்தால் கழுவன் விரட்டி சுடுவதும் அனைவரையும் கவர்ந்தது.
ஆண்டுதோறும் நள்ளிரவில் நடைபெறும் இந்த விழாவை காண ஜாதி, மதம் வேறுபாடின்றி அனைத்து சமுதாய மக்களும் கோவிலில் திரண்டனர்.
- மானாமதுரையில் சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.
மானாமதுரை
மானாமதுரை கொடிக்கால் தெருவில் உள்ள சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. 2-ம் கால பூஜை நிறைவடைந்த நிலையில் சித்ராயி அம்மன் மூலவர் விமானக்கலசத்தின் மீதும், பரிவார தெய்வங்களுக்கும் ராஜேஷ் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.
- விவசாயிகளின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்.
- கலெக்டர் ஆஷா அஜித் உறுதியளித்தார்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொ ருட்டும், வேளாண் தொழி லை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற் கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார். அதன்படி, விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொ ள்ளும் பொருட்டும், மாதந்தோறும் விவசாயி களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயி களின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மை துறை இணை இயக்குநர் தனபாலன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் முதல்நிலை அரசு அலுவ லர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட மைய நூலகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்தனர்.
- அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கையில் நூலக நண்பர்கள் திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு பொது நூலக துறையின் நூலக நண்பர்கள் திட்டத்தில் நூலக தன்னார்வலரான எழுத்தாளர் ஈஸ்வரனின் சார்பாக மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக இணைத்து புத்தகங்களை அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன.
மாவட்ட நூலக அலுவலர் சான் சாமுவேல் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் உறுப்பினர் அடையாள அட்டைகளையும் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள். புத்தகங்கள் நமது வரலாற்று நூல்களும் தேசிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களும்சுய முன்னேற்றம் தன்னம்பிக்கை நூல்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் நூல் சரி பார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் நூலகர்கள் முத்துக்குமார் கனகராஜன், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் நூலக தன்னார்வலர் ரமேஷ் கண்ணன் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.






