என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் புரவி எடுப்பு விழா
    X

    கோவில் புரவி எடுப்பு விழா

    • கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை தேவரம்பூர் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தேவரம்பூர் கிராமத்தில் ஆதினமிளகி அய்யனார் மற்றும் பொன்னரசு கூத்த அய்ய னார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா விமரிசையாக நடை பெற்றது.

    முன்னதாக கோவில் முன்பு வைக்கப்பட்ட 5 பதுமைகளுக்கு (குதிரை களுக்கு) வண்ண பலூன், கண்ணாடி, பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பூஜைகள் மற்றும் தீப ஆராதனை நடந்தது.

    அதனை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பதுமைகள் கொண்டுவரப்பட்டு மந்தை கோவில் வீடு முன்பாக அமைக்கப்பட திடலில் வைக்கப்பட்டது. சாரல் மழையில் நனைந்த படி திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்க ளின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேவரம்பூர் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×