search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற எம்.எல்.ஏ.
    X

    பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற எம்.எல்.ஏ.

    • கலைஞர் கோட்டத்தை பார்க்க பள்ளி மாணவ-மாணவிகளை எம்.எல்.ஏ. அழைத்து சென்றார்.
    • அரசு குளிர்சாதன பஸ்கள் வர வழைக்கப்பட்டிருந்தது.

    மானாமதுரை

    திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பார்ப்பதற்காக தமிழரசி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மானாமதுரை தொகுதியை சேர்ந்த திருப்புவனம், இளை யான்குடி, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள், 100 மாணவிகளை அழைத்து செல்ல முடிவு செய்யப் பட்டது.

    அதன்படி மாணவ-மாணவிகளை திருவாரூர் அழைத்துச் சொல்ல 4 அரசு குளிர்சாதன பஸ்கள் வர வழைக்கப்பட்டிருந்தது. மானாமதுரை சிவகங்கை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர் புறம் உள்ள தனியார் மகாலில் மாணவ- மாணவி களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    அதன்பின் மாணவ- மாணவிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பஸ்களில் ஏறி அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ., திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், ஆகியோர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தமிழரசன், காங்கிரஸ் மாவட்ட மூத்த தலைவர் முருகேசன் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் ராஜாமணி, கடம்பசாமி, வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, ரவிச் சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்கள் முத்துசாமி, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×