என் மலர்
சிவகங்கை
கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வீட்டின் கான்கிரீட் சிலாப் இடிந்து விழுந்தததில் அரசு ஊழியர் பலியானார். #GajaCyclone
சிவகங்கை:
சிவகங்கை நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 56). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை முத்து முருகன் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது பக்கத்து வீட்டின் சிலாப்பு இடிந்து அவர் மீது விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த முத்துமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #GajaCyclone
சிவகங்கை நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 56). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை முத்து முருகன் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது பக்கத்து வீட்டின் சிலாப்பு இடிந்து அவர் மீது விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த முத்துமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #GajaCyclone
கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
சிவகங்கை:
கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
புலியடித்தம்பம் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மைப்பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.
காளையார்கோவில்:
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், புலியடித்தம்பம் ஊராட்சியில் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சியில் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் தூய்மை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா, தண்ணீர் தேக்கி வைத்து உள்ள பாத்திரங்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டதுடன் சுத்தமில்லாத தண்ணீர் பாத்திரங்களை அப்புறப்படுத்தியதுடன் வீட்டில் உள்ள நபர்களிடம் சுற்றுப்புற தூய்மை குறித்து விளக்கமளித்தார்.
மேலும் தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:- ஒவ்வொருவரும் தூய்மையை கடைப்பிடித்தால்தான் சுற்றுப்புறச் சுழல் தூய்மையாக இருக்கும். அதன்மூலம் நோய்கள் பரவாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் தங்களது கடமையாக எண்ணி வீட்டின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்பாடற்ற பொருட்களை தேக்கி வைக்க கூடாது. காரணம் தற்போது மழைக்காலம் என்பதால் தேவையற்ற பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்களை உருவாக்கும் லார்வா புழுக்கள் எளிதாக உருவாகின்றன. அதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வழிவகை செய்கின்றது. அது 500 மீட்டர் தூரம் வரை பறந்து சென்று நோய்களை பரப்பும் சக்தி கொண்டதாகும். அதிலும் பகல் நேரத்தில்தான் டெங்கு கொசு அதிக அளவில் தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கின்றன.
தினமும் கைகளை சோப் மூலம் நன்கு கழுவிட வேண்டும். இதன்மூலம் கைகளில் கிருமிகள் தொற்றுவதை எளிதாக தடுத்திடலாம். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நீர்த்தேக்க தொட்டி சுத்தமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. வீடுகளில் கொசு புழு உற்பத்தியுடன் தண்ணீர் தேக்கி வைத்துள்ள 6 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வருங்காலங்களில் தவறுகள் செய்யும் வீட்டின் உரிமையாளர்கள் மீது கூடுதல் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டது. ஆய்வின் போது காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ தாயுமானவன், சந்திரா, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு உள்பட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், புலியடித்தம்பம் ஊராட்சியில் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சியில் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் தூய்மை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா, தண்ணீர் தேக்கி வைத்து உள்ள பாத்திரங்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டதுடன் சுத்தமில்லாத தண்ணீர் பாத்திரங்களை அப்புறப்படுத்தியதுடன் வீட்டில் உள்ள நபர்களிடம் சுற்றுப்புற தூய்மை குறித்து விளக்கமளித்தார்.
மேலும் தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:- ஒவ்வொருவரும் தூய்மையை கடைப்பிடித்தால்தான் சுற்றுப்புறச் சுழல் தூய்மையாக இருக்கும். அதன்மூலம் நோய்கள் பரவாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் தங்களது கடமையாக எண்ணி வீட்டின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்பாடற்ற பொருட்களை தேக்கி வைக்க கூடாது. காரணம் தற்போது மழைக்காலம் என்பதால் தேவையற்ற பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்களை உருவாக்கும் லார்வா புழுக்கள் எளிதாக உருவாகின்றன. அதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வழிவகை செய்கின்றது. அது 500 மீட்டர் தூரம் வரை பறந்து சென்று நோய்களை பரப்பும் சக்தி கொண்டதாகும். அதிலும் பகல் நேரத்தில்தான் டெங்கு கொசு அதிக அளவில் தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கின்றன.
தினமும் கைகளை சோப் மூலம் நன்கு கழுவிட வேண்டும். இதன்மூலம் கைகளில் கிருமிகள் தொற்றுவதை எளிதாக தடுத்திடலாம். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நீர்த்தேக்க தொட்டி சுத்தமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. வீடுகளில் கொசு புழு உற்பத்தியுடன் தண்ணீர் தேக்கி வைத்துள்ள 6 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வருங்காலங்களில் தவறுகள் செய்யும் வீட்டின் உரிமையாளர்கள் மீது கூடுதல் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டது. ஆய்வின் போது காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ தாயுமானவன், சந்திரா, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு உள்பட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
மானாமதுரை அருகே கிளங்காட்டூர் மற்றும் 16 கிராம விவசாயிகள் கண்மாய் வரத்து கால்வாயை தாங்களே இணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ளது கிளங்காட்டூர் கிராமம், 800 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாயை நம்பி 3 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. வைகை ஆற்றில் இருந்து கிருங்காக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரியும் நாட்டார் கால்வாய் மூலம் கிளங்காட்டூர் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட நாட்டார் கால்வாயில் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் இந்த கால்வாயை நம்பி உள்ள 18 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
கால்நடைகள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டு மதுரை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர். தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் நாட்டார் கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கிளங்காட்டூரில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு விவசாயிகளே கால்வாயை தூர்வாரி வருகின்றனர். சமீப காலமாக மழை தண்ணீர் கூட வராததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது.
கால்வாய் முழுவதும் கருவேல மரங்களும், நாணல் புதர்களும் அடர்ந்து இருப்பதால் தண்ணீர் வர வாய்ப்பின்றி உள்ளது. இதனை தவிர்க்க விவசாயிகளே தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, கிளங்காட்டூர் உள்பட சுமார் 16 கண்மாய்களில் கால்நடைகள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லை.
இதனால் பலரும் கால்நடைகளை விற்று விட்டனர். வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது நாட்டார் கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு சின்னகண்ணூர் கிராமத்திற்கு வந்த அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். அவரும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றனர். #tamilnews
மானாமதுரை அருகே உள்ளது கிளங்காட்டூர் கிராமம், 800 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாயை நம்பி 3 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. வைகை ஆற்றில் இருந்து கிருங்காக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரியும் நாட்டார் கால்வாய் மூலம் கிளங்காட்டூர் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட நாட்டார் கால்வாயில் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் இந்த கால்வாயை நம்பி உள்ள 18 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
கால்நடைகள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டு மதுரை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர். தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் நாட்டார் கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கிளங்காட்டூரில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு விவசாயிகளே கால்வாயை தூர்வாரி வருகின்றனர். சமீப காலமாக மழை தண்ணீர் கூட வராததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது.
கால்வாய் முழுவதும் கருவேல மரங்களும், நாணல் புதர்களும் அடர்ந்து இருப்பதால் தண்ணீர் வர வாய்ப்பின்றி உள்ளது. இதனை தவிர்க்க விவசாயிகளே தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, கிளங்காட்டூர் உள்பட சுமார் 16 கண்மாய்களில் கால்நடைகள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லை.
இதனால் பலரும் கால்நடைகளை விற்று விட்டனர். வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது நாட்டார் கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு சின்னகண்ணூர் கிராமத்திற்கு வந்த அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். அவரும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றனர். #tamilnews
மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-2 தேர்வை 6 ஆயிரத்து 530 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2 ஆயிரத்து 566 பேர் எழுதவில்லை.
சிவகங்கை:
தமிழகம் முழுவதும் அரசு தேர்வாணையத்தின் மூலம் குரூப்-2 முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத சிவகங்கை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 96 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக சிவகங்கை தாலுகாவில் 17 மையங்களும், தேவகோட்டை தாலுகாவில் 4 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 6 ஆயிரத்து 530 பேர் தேர்வை எழுதினர். 2 ஆயிரத்து 566 பேர்தேர்வு எழுத வரவில்லை.
தேர்வுகளை கண்காணிக்க கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் மேற்பார்வையில் துணை கலெக்டர்கள் தலைமையில் 8 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வுகள் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன.
காரைக்குடியில் குரூப்-2 தேர்வு அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக், அழகப்பா கலைக்கல்லூரி, உமையாள் ராமநாதன் கலைக்கல்லூரி, மு.வி.மேல்நிலைப்பள்ளி, ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரி, சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி மேல்நிலைப்பள்ளி, சாரதா நிகேதன் கல்லூரி, முத்தையா அழகப்பா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
காரைக்குடி மையங்களில் மட்டும் தேர்வு எழுத 3 ஆயிரத்து 547 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 975 பேர் வரவில்லை. தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட வருவாய் அதிகாரி, தாசில்தார் மகேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு தேர்வாணையத்தின் மூலம் குரூப்-2 முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத சிவகங்கை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 96 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக சிவகங்கை தாலுகாவில் 17 மையங்களும், தேவகோட்டை தாலுகாவில் 4 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 6 ஆயிரத்து 530 பேர் தேர்வை எழுதினர். 2 ஆயிரத்து 566 பேர்தேர்வு எழுத வரவில்லை.
தேர்வுகளை கண்காணிக்க கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் மேற்பார்வையில் துணை கலெக்டர்கள் தலைமையில் 8 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வுகள் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன.
காரைக்குடியில் குரூப்-2 தேர்வு அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக், அழகப்பா கலைக்கல்லூரி, உமையாள் ராமநாதன் கலைக்கல்லூரி, மு.வி.மேல்நிலைப்பள்ளி, ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரி, சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி மேல்நிலைப்பள்ளி, சாரதா நிகேதன் கல்லூரி, முத்தையா அழகப்பா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
காரைக்குடி மையங்களில் மட்டும் தேர்வு எழுத 3 ஆயிரத்து 547 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 975 பேர் வரவில்லை. தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட வருவாய் அதிகாரி, தாசில்தார் மகேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கை:
பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முதன்மைக்கல்வி அதிகாரி பாலுமுத்து வரவேற்று பேசினார். விழாவில் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்வதில் பெருமையாக உள்ளது. ஏனென்றால் நான் படித்த பள்ளி இது. நாங்கள் படிக்கும் போது எனது ஊரான தமராக்கியில் இருந்து 16 கி.மீ. சைக்கிளில் வந்து தான் படித்தேன். இன்று அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிளை வழங்குவது மேலும் பெருமையாக உள்ளது. கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது ரூ.9 கோடி மதிப்பீட்டில் 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். இதனால் பல அரசு பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும். மேலும் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளையும் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். விழாவில் ஆவின் சேர்மன் அசோகன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆனந்தன், கோபி, வருவாய் அலுவலர் லதா, தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்தின் நன்றி கூறினார்.
பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முதன்மைக்கல்வி அதிகாரி பாலுமுத்து வரவேற்று பேசினார். விழாவில் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்வதில் பெருமையாக உள்ளது. ஏனென்றால் நான் படித்த பள்ளி இது. நாங்கள் படிக்கும் போது எனது ஊரான தமராக்கியில் இருந்து 16 கி.மீ. சைக்கிளில் வந்து தான் படித்தேன். இன்று அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிளை வழங்குவது மேலும் பெருமையாக உள்ளது. கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது ரூ.9 கோடி மதிப்பீட்டில் 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். இதனால் பல அரசு பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும். மேலும் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளையும் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். விழாவில் ஆவின் சேர்மன் அசோகன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆனந்தன், கோபி, வருவாய் அலுவலர் லதா, தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்தின் நன்றி கூறினார்.
இளையான்குடி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியில் மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரன் வீடு, வீடாக சென்று நேரில் ஆய்வு செய்தார்.
சிவகங்கை:
இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். பின்னர் அவர் இளையான்குடி அருகே உள்ள பூச்சியேந்தல் பகுதியில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வீடுகளில் உள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.
பின்னர் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி அளிக்கப்படுகிறதா என்ற விவரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பொதுமக்களிடம் கூறியதாவது:- தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் வீடுகள் மற்றும் தெருக்களை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெண்கள் தினந்தோறும் பயன்படுத்தும் தண்ணீர் குடம் மற்றும் நீர் தேக்கும் தொட்டிகளை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் நீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இது தவிர வீட்டில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைக்க கூடாது. அவ்வாறு தேக்கி வைத்தால் அதில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் உருவாகும் நிலை ஏற்படும். எனவே அவ்வப்போது வீட்டின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறி ஏதும் தெரிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கும் வழங்கும் தண்ணீரில் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து அத்துடன் அங்குள்ள விளம்பர பலகையில் சுத்தம் செய்யப்பட்ட தேதி மற்றும் சுத்தம் செய்யப்பட வேண்டிய தேதி ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்கும் வகையில் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புத்துரை, அழகுமீனாள், பூச்சியில் வல்லுனர் ரமேஷ், டாக்டர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், சரவணக்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். பின்னர் அவர் இளையான்குடி அருகே உள்ள பூச்சியேந்தல் பகுதியில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வீடுகளில் உள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.
பின்னர் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி அளிக்கப்படுகிறதா என்ற விவரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பொதுமக்களிடம் கூறியதாவது:- தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் வீடுகள் மற்றும் தெருக்களை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெண்கள் தினந்தோறும் பயன்படுத்தும் தண்ணீர் குடம் மற்றும் நீர் தேக்கும் தொட்டிகளை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் நீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இது தவிர வீட்டில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைக்க கூடாது. அவ்வாறு தேக்கி வைத்தால் அதில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் உருவாகும் நிலை ஏற்படும். எனவே அவ்வப்போது வீட்டின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறி ஏதும் தெரிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கும் வழங்கும் தண்ணீரில் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து அத்துடன் அங்குள்ள விளம்பர பலகையில் சுத்தம் செய்யப்பட்ட தேதி மற்றும் சுத்தம் செய்யப்பட வேண்டிய தேதி ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்கும் வகையில் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புத்துரை, அழகுமீனாள், பூச்சியில் வல்லுனர் ரமேஷ், டாக்டர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், சரவணக்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
தேவகோட்டையில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அலைமோதுகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டையில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அலைமோதுகின்றனர். அங்கு போதிய டாக்டர்கள் இல்லாததால், கூடுதல் டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேவகோட்டையில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், காய்ச்சல் வந்த பின்பும் தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின் றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தற்போது பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையால் தான் காய்ச்சல் குணமடைவதாக பொதுமக்கள் பெரிதும் நம்பி உள்ளனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். தேவகோட்டை தாலுகாவில் 700-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின் றனர்.
இந்தநிலையில் இங்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் டாக்டர் ராமு தலைமையில் டாக்டர்கள் குழுவினர் தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், தற்போது உள்ள டாக்டர்கள் குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து உடனுக்குடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எனவே தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேவகோட்டையில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அலைமோதுகின்றனர். அங்கு போதிய டாக்டர்கள் இல்லாததால், கூடுதல் டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேவகோட்டையில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், காய்ச்சல் வந்த பின்பும் தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின் றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தற்போது பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையால் தான் காய்ச்சல் குணமடைவதாக பொதுமக்கள் பெரிதும் நம்பி உள்ளனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். தேவகோட்டை தாலுகாவில் 700-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின் றனர்.
இந்தநிலையில் இங்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் டாக்டர் ராமு தலைமையில் டாக்டர்கள் குழுவினர் தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், தற்போது உள்ள டாக்டர்கள் குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து உடனுக்குடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எனவே தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரித்துள்ளார்.
சிவகங்கை:
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்களின் தரத்தை இணையதளம் மூலமாக அறிய உணவு பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் குடிநீர் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ள உணவுபாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இந்தத் துறையின் இணையதள சேவையை பயன்படுத்தி குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகளில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவு பாதுகாப்புதுறை உரிம எண்ணை பயன்படுத்தி, அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் ஆறுமாதம், ஒருஆண்டு பரிசோதனை அறிக்கை, அவர்களின் ஐ.எஸ்.ஐ. மற்றும் அவர்களுக்கு தரப்பட்டுள்ள உணவு பாதுகாப்புதுறையின் எண் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும் தரத்தையும் அறிந்துகொள்ளலாம்.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேமித்து வைத்தல், வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அதை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வினியோகிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், சின்ன பெட்டிக்கடைகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், பீடா ஸ்டால், குளிர்பான கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஓட்டல், இறைச்சிக்கடை உள்ளிட்ட அனைத்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும். மேலும் இது குறித்து புகார்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் 94440 42322 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்களின் தரத்தை இணையதளம் மூலமாக அறிய உணவு பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் குடிநீர் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ள உணவுபாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இந்தத் துறையின் இணையதள சேவையை பயன்படுத்தி குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகளில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவு பாதுகாப்புதுறை உரிம எண்ணை பயன்படுத்தி, அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் ஆறுமாதம், ஒருஆண்டு பரிசோதனை அறிக்கை, அவர்களின் ஐ.எஸ்.ஐ. மற்றும் அவர்களுக்கு தரப்பட்டுள்ள உணவு பாதுகாப்புதுறையின் எண் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும் தரத்தையும் அறிந்துகொள்ளலாம்.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேமித்து வைத்தல், வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அதை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வினியோகிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், சின்ன பெட்டிக்கடைகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், பீடா ஸ்டால், குளிர்பான கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஓட்டல், இறைச்சிக்கடை உள்ளிட்ட அனைத்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும். மேலும் இது குறித்து புகார்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் 94440 42322 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மானாமதுரை தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #Sengottaiyan
திருப்புவனம்:
திருப்புவனத்தில் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய நகர செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:- மானாமதுரை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது. 2019 ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை மாற்றப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேசினர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ராஜேந்திரன், திருப்புவனம் யூனியன் முன்னாள் துணை தலைவர் புவனேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் அழகுமலை, மடப்புரம் காலனி கிளை செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல இளையான்குடியில் நடந்த கூட்டத்திற்கு இளையான்குடி நகரகுடி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மானாமதுரை இடைத்தேர்தலுக்காக பல வியூகங்கள் அமைத்து உள்ளோம். தொகுதி பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்துள்ளனர். முதல் கட்டமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளோம், தமிழகத்திலேயே மானாமதுரை சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜன், நகர செயலாளர் அன்வர், மாவட்ட பொருளாளர் ரத்தினம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்புவனத்தில் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய நகர செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:- மானாமதுரை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது. 2019 ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை மாற்றப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேசினர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ராஜேந்திரன், திருப்புவனம் யூனியன் முன்னாள் துணை தலைவர் புவனேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் அழகுமலை, மடப்புரம் காலனி கிளை செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல இளையான்குடியில் நடந்த கூட்டத்திற்கு இளையான்குடி நகரகுடி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மானாமதுரை இடைத்தேர்தலுக்காக பல வியூகங்கள் அமைத்து உள்ளோம். தொகுதி பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்துள்ளனர். முதல் கட்டமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளோம், தமிழகத்திலேயே மானாமதுரை சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜன், நகர செயலாளர் அன்வர், மாவட்ட பொருளாளர் ரத்தினம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி பாசன கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. #DMK
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன் தலைமையில் நடந்தது.
பேரூர் செயலர் நஜிமுதீன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்ற ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகை தண்ணீர் இளையான்குடி பகுதியில் உள்ள பாசன கண்மாய்களுக்கு கிடைக்க தண்ணீர் திறக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவைத்தலைவர் பெரியசாமி, துணைச் செயலர் மலைமேடு, நிர்வாகிகள் மூக்கையா, மலைச்சாமி, சேதுபதி துரை, சுந்தரம், அய்யனார், சிவனேசன், பழனிவேல், அஜய்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன் தலைமையில் நடந்தது.
பேரூர் செயலர் நஜிமுதீன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்ற ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகை தண்ணீர் இளையான்குடி பகுதியில் உள்ள பாசன கண்மாய்களுக்கு கிடைக்க தண்ணீர் திறக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவைத்தலைவர் பெரியசாமி, துணைச் செயலர் மலைமேடு, நிர்வாகிகள் மூக்கையா, மலைச்சாமி, சேதுபதி துரை, சுந்தரம், அய்யனார், சிவனேசன், பழனிவேல், அஜய்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK
மானாமதுரை ரெயில்நிலையத்தில், பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுபடையினர் பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மானாமதுரை:
மானாமதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாட்டுப்பாடி, தாளம் தட்டி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்வது குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவுப்படி மானாமதுரை ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் ரெயில்வே போலீசார், பயணிகளிடம் பாரம்பரிய முறைப்படி வேட்டி, தலைப்பாகை அணிந்து தண்டோரா போட்டு ஆடலுடன் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அவர்கள் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது, ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படி பொருட்கள் இருந்தால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும், விதிகளை மீறி பட்டாசு கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை பாட்டுப்பாடி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நேற்று மதியம் மானாமதுரை வழியாக சென்ற ரெயில் பயணிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் வித்தியாசமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
மானாமதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாட்டுப்பாடி, தாளம் தட்டி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்வது குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவுப்படி மானாமதுரை ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் ரெயில்வே போலீசார், பயணிகளிடம் பாரம்பரிய முறைப்படி வேட்டி, தலைப்பாகை அணிந்து தண்டோரா போட்டு ஆடலுடன் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அவர்கள் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது, ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படி பொருட்கள் இருந்தால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும், விதிகளை மீறி பட்டாசு கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை பாட்டுப்பாடி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நேற்று மதியம் மானாமதுரை வழியாக சென்ற ரெயில் பயணிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் வித்தியாசமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.






