search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "take action"

    • பட்டாசு விற்பனையில் உள்ள தடையை நீக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமா? என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
    • வைரகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம், உள்பட பலர் இருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் ஆய்வு செய்தார். பின்னர் மீனம் பட்டியில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாண வர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு வராமல் இருக்க வேண்டும். நாங்கு நேரியில் நடந்த சம்பவம் இனி வரும் காலத்தில் தமிழகத்தில் வேறு எங்கும் நடக்க கூடாது. இதற்கு பள்ளி ஆசிரியர்கள், மாண வர்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    ஆளுநர் ரவி தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் தான். பட்டாசு தொழில் வளர்ச்சி இல்லா மல் போனது.

    இந்தியா கூட்டணி அரசு அமையும் போது பட்டாசுக்கு தற்போது உள்ள பிரச்சி னைகள் அனைத்தும் சரி செய்யப்படும். இந்த வருடம் தீபாவளிக்கு டெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய தற்போது உள்ள தடையை உச்சநீதிமன்றம் சென்று பா.ஜ.க. நீக்குமா? இதற்கு அண்ணாமலையிடம் பதில் உள்ளதா?.

    அண்ணாமலை நடை பயணத்தின் போது விளம்பரத்துக்காக பேசி வருகிறார். அவருடன் தொண்டர்கள், பொது மக்களை விட போலீசார் தான் அதிகளவில் வருகி றார்கள். ஒரு சட்டமன்ற தொகுதியில் வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் மட்டும் நடப்பது யாத்திரை என்பது நடிப்பின் உச்சகட்டமாக தெரிகிறது. இதற்கு அதானி யின் பணம் செலவு செய்யப் படுகிறது. நடைபயணத்துக்கு ஆகும் செலவு விபரங்களை அண்ணாமலை வெளியிட தயாரா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டியின் போது அசோகன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்ன தம்பி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முருகன், பைபாஸ் வைரகுமார், மாவட்ட செய்தி தொடர் பாளர் மீனாட்சிசுந்தரம், உள்பட பலர் இருந்தனர்.

    • கடந்த 2 மாத காலமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரும்பாறைகள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    நாம் இந்தியர் கட்சியின் மாநிலத்தலைவர் என்.பி.ராஜா தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு மனு அனுப்பி–யுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள–தாவது:-

    மனிதனின் பயன்பாட்டிற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட கரும்பாறைகள் மற்றும் சுக்காம்பாறைகளை அரசு அனுமதியோடு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட மக்களின் கட்டுமான பொருட்களின் தேவைக்கு அங்கங்குள்ள குவாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற குவாரி விபத்திற்கு பிறகு கடந்த 2 மாத காலமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரும்பாறைகள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் அனுமதிக்கபட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சில குவாரிகளில் மட்டும் ஜல்லி, எம்.சாண்டு எடுக்கப்படுகிறது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்துள்ளது. எனவே கட்டிடத்தொழிலை நம்பி இருக்கும் கட்டிடத்தொழிலாளர்கள் கட்டிடத்திற்கு சரக்கு சப்ளை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

    குறிப்பிட்ட சில இடத்தில் மட்டுமே கல் எடுக்க அனுமதி வழங்குவதால் குவாரிகளில் அதிக ஆழம் வெட்டி எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால் அதிக பாறைகள் இருக்கும் இடங்களில் குவாரிகள் அமைப்பதற்கு உரிமம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி உரிமம் வழங்க வேண்டும். இதனால் கட்டுமான பொருட்கள் விலையும் குறையும், விபத்துக்களும் தடுக்கப்படும். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களில் குவாரிகளை முறைப்படுத்தி, கட்டுமான பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகளை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இதேபோல் டாஸ்மாக் மதுபான கடை மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கேயே அமர்ந்து மது அருந்த பார்வசதிகள் உள்ளன. ஆனால் கடந்த 4,5 மாதகாலமாக டாஸ்மாக் கடையில் பார் நடத்த அனுமதி புதுப்பிக்கப்படாததால் தெரு ஓரங்களிலும், மறைவான இடங்களிலும், நிறுத்தப்பட்டுயிருக்கும் வாகனங்கள் மறைவிலும் மதுபிரியர்கள் மது அருந்துகின்றார்கள்.

    இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். சிறுவர்கள், பெண்கள் அச்சத்தோடு நடமாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுப்பதற்கு பார் நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    காரைக்குடி பகுதியில் பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 8 மாதமாக மர்ம காய்ச்சல் பரவி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனாலும் நோயின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. எதனால் காய்ச்சல் வந்தது நோய்க்கான பெயர் என்ன அதற்கான சிகிச்சை முறை என்ன என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிப்பது இல்லை. இதுகுறித்து கேட்டபோது மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு இதற்கு காரணம் இது பற்றி வேறு எதுவும் கருத்து கூற இயலாது என டாக்டர்கள் கூறுகிறார்களாம்.

    இதனால் இதற்கு பெயர் மர்ம காய்ச்சல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இக்காய்ச்சல் ஓரளவு குறைந்து வரும் நிலையில் தற்போது பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவும் சங்கராபுரம் ஊராட்சி பகுதியிலேயே பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சலினால் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டது.

    தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் இதற்கான சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் நோயாளியிடமோ அவர்களின் குடும்பத்தாரிடமோ டாக்டர்கள் காய்ச்சல் குறித்து எதுவும் கூற மறுத்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து கேட்டால் இதற்கு மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு என்று டாக்டர்கள் கூறுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். நோயாளிகளின் நிலைமை மோசமாக இருக்கிற போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் வாய்மொழி உத்தரவு உள்ளது என தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வந்த நோய் என்ன சிகிச்சை முறை என்ன என்பது குறித்து மருத்துவர்கள் யாரும் கூறுவதில்லை. இது மருத்துவ உலக தர்மத்திற்கு எதிரானது என மருத்துவர்களே கூறுகின்றனர்.

    இது குறித்து தி.மு.க. கட்சி சார்பில் தொழிற்சங்க நிர்வாகி மலையரசன் கூறியதாவது:- நோயாளியிடமோ அவர்களது குடும்பத்தினரிடமோ நோயின் தன்மையை அதற்கான சிகிக்சை முறையை கூற மறுப்பது மனித உரிமை மீறல். இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும். சுகாதாரத்துறையின் வாய்மொழி உத்தரவு உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. ஏழை எளிய மக்களிடம் நற்பெயர் பெற்று உள்ள மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மாவட்ட சுகாதாரத்துறை ஈடுபடுவது சரியான செயலாகும். இதனை விடுத்து சுகாதாரத் துறை மனித உரிமை மீறலை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரித்துள்ளார்.
    சிவகங்கை:

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்களின் தரத்தை இணையதளம் மூலமாக அறிய உணவு பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் குடிநீர் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ள உணவுபாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி இந்தத் துறையின் இணையதள சேவையை பயன்படுத்தி குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகளில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவு பாதுகாப்புதுறை உரிம எண்ணை பயன்படுத்தி, அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் ஆறுமாதம், ஒருஆண்டு பரிசோதனை அறிக்கை, அவர்களின் ஐ.எஸ்.ஐ. மற்றும் அவர்களுக்கு தரப்பட்டுள்ள உணவு பாதுகாப்புதுறையின் எண் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும் தரத்தையும் அறிந்துகொள்ளலாம்.

    மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேமித்து வைத்தல், வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அதை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வினியோகிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், சின்ன பெட்டிக்கடைகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், பீடா ஸ்டால், குளிர்பான கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஓட்டல், இறைச்சிக்கடை உள்ளிட்ட அனைத்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும். மேலும் இது குறித்து புகார்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் 94440 42322 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்-லைன் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்துதல் குறித்து போலீசாருக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்-லைன் மூலம் இ-சேவை பாஸ்போர்ட் கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தால் 3 நாட்களில் அவர்களுடைய சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை முடிக்க வேண்டும். டிஜிட்டல் கையெழுத்து பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து அவர்களுடைய சான்றிதழ்களை போலீசார் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த கையெழுத்தை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிவோர் வந்து போட்டு செல்ல காலதாமதம் ஏற்படுவதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதற்கும் தாமதம் ஏற்படுகிறது.

    மற்ற மாவட்டங்களில் 5 நாட்களுக்குள் இ-சேவை பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30 நாட்களுக்கு மேல் ஆவதாக தெரியவந்துள்ளது. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு பணியை உடனுக்குடன் முடித்து விரைவாக பொது மக்களுக்கு பாஸ்போர்ட்டு கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்காக மாவட்டத்தில் உள்ள 56 போலீஸ் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை பணியை மேற்கொள்ளும் போலீசாருக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விரைவாக பாஸ்போர்ட் சேவை பணியை முடிக்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 2,500 பேருக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தரப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    வெளிநாட்டில் கூலித்தொழிலாளி மர்மசாவு: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
    பெரம்பலூர்:

    வெளிநாட்டில் வேலை பார்த்த கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளியின் மனைவி, குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் வள்ளலார் தெருவை சேர்ந்த தம்புசாமியின் மனைவி இளவரசி, தனது 3 குழந்தைகளுடன் கூட்டத்திற்கு வந்து கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு வழங்கினார். அதில், எனது கணவர் தம்புசாமி (வயது 37) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக துபாய் நாட்டில் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி மதியம் துபாயில் இருந்து ஒருவர் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு தம்புசாமி துபாயில் கடந்த மாதம் இறந்து விட்டதாக கூறினார். கணவர் இறந்து ஒரு மாதம் ஆகபோகிற நிலையில் அவரது உடலை இன்னும் துபாயில் இருந்து அனுப்பவில்லை. அவரின் மர்மசாவு குறித்தும்? அவரது உடலை துபாயில் இருந்து உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாந்தா விசாரணை நடத்தி உடனடியாக தம்புசாமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். தம்புசாமி-இளவரசி தம்பதியினருக்கு தேவிகா(13) என்கிற மகளும், கிஷோர்(10), சிவசக்தி(2) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மின் நகர் மற்றும் விஸ்தரிப்பு குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினர். அதில், பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ஊராட்சியில் உள்ள மின்நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மின்நகர் பகுதியில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 184 மனுக்களை கலெக்டர் சாந்தாவிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் 8 நபர்களுக்கு குடும்ப அட்டை நகல்களையும், நொச்சியம் மற்றும் கல்பாடி கிராமங்களை சேர்ந்த 4 நபர்களுக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    ராம்ஜிநகர் ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அந்தப்பகுதி பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். இந்த நிலையில், வேப்பந்தட்டை தாலுகா திருவாளந்துறையில் உள்ள ராம்ஜி நகரை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரேஷன் கடை ஒன்று திறக்கப்பட்டு வாரத்தில் 3 நாட்கள் செயல்பட்டு வந்தது. இதனால் எங்கள் பகுதியில் இருந்து 205 குடும்ப அட்டைதாரர்கள் அங்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில், இந்த மாதம் அந்த ரேஷன் கடைக்கு வரவேண்டிய எந்த ரேஷன் பொருட்களும் வரவில்லை. இதனால் கடை திறக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவாளந்துறைக்கு சென்று ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றோம்.

    எனவே ராம்ஜி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு தேவையான ரேஷன் பொருட்களை இறக்கி, வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிழக்கு ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊத்தங்கால் கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடை திறந்தால் அந்த கடை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 182 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்த கலெக்டர் குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 
    சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    சிவகங்கை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கோபால், நிர்வாகிகள் ஆறுமுகம், திருச்செல்வம், முருகன், குணாளன், நாச்சியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டுக்கு பயிர்காப்பீட்டு செய்த 13 ஆயிரம் விவசாயிகளுக்கு இன்றுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கு பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளதா என்பது குறித்த எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும்.

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அனுப்புவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நோயாளிகளுக்கு சிவகங்கை மருத்துவமனையிலேயே சிகிச்சைஅளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் வைகை மற்றும் சிற்றாறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதால் நீர் ஆதாரங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    18 வயதுக்குட்பட்டோருக்கு புகையிலை பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    விருதுநகர்:

    கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்கீழ் பதிவு பெற்று அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் 31 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. சுமார் 1,300 குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாவட்ட பதிவு பெறாமல் செயல்படும் இல்லங்கள் மற்றும் இதர விடுதிகள் அனைத்தும் இளைஞர் நீதி சட்டம் மற்றும் விடுதிகள் சட்டத்தின்கீழ் பதிவு பெற்று செயல்படவேண்டும். குழந்தைகள் இல்லங்களில் சேர்க்கை மற்றும் நீக்கம் செய்யும்போது குழந்தைகள் நலக்குழுவின் ஆணை உரிய படிவத்தில் பெறவேண்டும்.

    குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளிடம் சட்ட விதிகளுக்கு முரணாக எவ்வித கட்டணங்களும் வசூலிக்கக்கூடாது. வெளி மாநில, மாவட்ட குழந்தைகளை சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாநில, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஆணை பெற வேண்டும். குழந்தைகள் இல்லங்களை ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட மாவட்ட ஆய்வுக்குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, இல்லங்கள் சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையினை எய்திட தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மீட்கும் குழந்தைகளை குழந்தைகள் நலக்குழு முன் முன்னிலைப்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க அனைத்து குழந்தைகள் இல்லங்கள், மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை தொட்டில் வைக்க வேண்டும்.

    பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான ஆலோசனைப்பெட்டி வைக்க வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மதுபானம், புகையிலை பொருட்கள், போதை தரும் பொருட்கள் வழங்குவதோ, விற்பனை செய்யவோ கூடாது. அந்த செயலில் ஈடுபடுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், நன்னடத்தை அலுவலர் முருகன், சமூக நல அலுவலர் ராஜம், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆரோக்கியசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    ×