என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 178757"

    வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்தார்.
    பரமத்திவேலூர்,:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே எறையம்பட்டி ஆதிதிராவிடர் தெரு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர் .இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆகாத 2 மகள்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். 

    இந்நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இவர் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். 

    இந்நிலையில் பழனிசாமி நேற்று  வீட்டிலிருந்த  மருந்தை எடுத்து குடித்து விட்டார். தனது மகளுக்கு போன் மூலம் அவரே தகவல் சொன்னதால் மகள்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூத்தம்பூண்டி அருகே ஏரியில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியானார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அருகே கூத்தம்பூண்டி அண்ணமார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 50). கூலித ்தொழிலாளி. இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். பழனி சற்று மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்து கூத்தம் பூண்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணிக்கம்பாளையம் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்ற பழனி திரும்ப வீட்டுக்கு வரவில்லை.
     
    பல இடங்களில் தேடி பார்த்தும் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று  மாணிக்கம்பாளையம் ஏரி பகுதிக்கு சென்றவர்கள் ஒரு ஆண் பிரேதம் இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். 

    இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர் பழனி என்று தெரியவந்தது. அவர் ஏரியில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 

    இதையடுத்து பழனியின் உடலை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருமாம்பாக்கம் அருகே கூலித்தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவிலை அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது55), கூலித்தொழிலாளி. இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

    வெங்கடேசன் தினமும் வேலைமுடிந்து இரவில் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். அதுபோல நேற்று மாலை வேலை முடிந்து மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். போதையில் தள்ளாடியபடியே வந்த அவர் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டின் கூரை கம்பு தலை மற்றும் முதுகில் குத்தியது. இதனால் தடுமாறி வெங்கடேசன் கீழே மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குபதிவு செய்து தடுமாறி விழுந்ததில் வெங்கடேசன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாவூர்சத்திரம் அருகே மரணமடைந்த கூலித்தொழிலாளி கழுத்தில் இரத்த காயம் இருந்ததை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் என்ற குட்டி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி(37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 20-ந் தேதி ஆறுமுகநயினார் என்ற குட்டி குடும்பத்துடன் பெத்தநாடார்பட்டியில் உள்ள மாயாண்டி கோவில் திருவிழாவுக்கு சென்றார்.இரவில் ஜெயந்தி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் பட்டிமன்றம் பார்த்துவிட்டு வருவதாக கூறினார்.

    இந்த நிலையில் ஆறுமுகநயினார் என்ற குட்டி 21-ந் தேதி காலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மகிழ்வண்ணநாதபுரம் குளத்தில் ஆறுமுகநயினார் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது ஆறுமுகநயினார் முட்டளவு உள்ள தண்ணீரில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் ஊசி போன்ற பொருளை வைத்து குத்திய ரத்தக்காயம் இருந்தது. உடனடியாக போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இந்நிலையில் பாவூர்சத்திரம் கரிசலூர் பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    விஸ்வரூபம் படத்தின் பாடலால் சமூக வலைளத்தில் வைரலான கூலித்தொழிலாளியை திரைப்பட இசையமைப்பாளர்கள் தேடி வருகின்றனர்.
    விஸ்வரூபம் படத்தில் ஜிப்ரான் இசையில் பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமல் பாடியிருந்த ‘உனைக் காணாது’ என்ற பாடலை தோட்டத்தில் அமர்ந்து கொண்டு சாதாரண நபர் ஒருவர் அதே குரலில் பாடியுள்ளார்.

    இவர் பாடிய வீடியோவை மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலான இந்த வீடியோ ‌ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனைத் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ‌ஷங்கர் மகாதேவன் “இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டுள்ளார்.

    இப்பதிவுக்கு பதிலளித்த ஒருவர் பாடலை பாடிய நபரின் தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார். விரைவில் அந்த நபருக்கு சங்கர் மகாதேவனுடன் பாடும் வாய்ப்பு கிடைக்கலாம். #Vishwaroopam #ShankarMahadevan 

    வெளிநாட்டில் கூலித்தொழிலாளி மர்மசாவு: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
    பெரம்பலூர்:

    வெளிநாட்டில் வேலை பார்த்த கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளியின் மனைவி, குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் வள்ளலார் தெருவை சேர்ந்த தம்புசாமியின் மனைவி இளவரசி, தனது 3 குழந்தைகளுடன் கூட்டத்திற்கு வந்து கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு வழங்கினார். அதில், எனது கணவர் தம்புசாமி (வயது 37) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக துபாய் நாட்டில் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி மதியம் துபாயில் இருந்து ஒருவர் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு தம்புசாமி துபாயில் கடந்த மாதம் இறந்து விட்டதாக கூறினார். கணவர் இறந்து ஒரு மாதம் ஆகபோகிற நிலையில் அவரது உடலை இன்னும் துபாயில் இருந்து அனுப்பவில்லை. அவரின் மர்மசாவு குறித்தும்? அவரது உடலை துபாயில் இருந்து உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாந்தா விசாரணை நடத்தி உடனடியாக தம்புசாமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். தம்புசாமி-இளவரசி தம்பதியினருக்கு தேவிகா(13) என்கிற மகளும், கிஷோர்(10), சிவசக்தி(2) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மின் நகர் மற்றும் விஸ்தரிப்பு குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினர். அதில், பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ஊராட்சியில் உள்ள மின்நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மின்நகர் பகுதியில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 184 மனுக்களை கலெக்டர் சாந்தாவிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் 8 நபர்களுக்கு குடும்ப அட்டை நகல்களையும், நொச்சியம் மற்றும் கல்பாடி கிராமங்களை சேர்ந்த 4 நபர்களுக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    ×