search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam Indiar Party"

    • கடந்த 2 மாத காலமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரும்பாறைகள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    நாம் இந்தியர் கட்சியின் மாநிலத்தலைவர் என்.பி.ராஜா தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு மனு அனுப்பி–யுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள–தாவது:-

    மனிதனின் பயன்பாட்டிற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட கரும்பாறைகள் மற்றும் சுக்காம்பாறைகளை அரசு அனுமதியோடு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட மக்களின் கட்டுமான பொருட்களின் தேவைக்கு அங்கங்குள்ள குவாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற குவாரி விபத்திற்கு பிறகு கடந்த 2 மாத காலமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரும்பாறைகள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் அனுமதிக்கபட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சில குவாரிகளில் மட்டும் ஜல்லி, எம்.சாண்டு எடுக்கப்படுகிறது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்துள்ளது. எனவே கட்டிடத்தொழிலை நம்பி இருக்கும் கட்டிடத்தொழிலாளர்கள் கட்டிடத்திற்கு சரக்கு சப்ளை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

    குறிப்பிட்ட சில இடத்தில் மட்டுமே கல் எடுக்க அனுமதி வழங்குவதால் குவாரிகளில் அதிக ஆழம் வெட்டி எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால் அதிக பாறைகள் இருக்கும் இடங்களில் குவாரிகள் அமைப்பதற்கு உரிமம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி உரிமம் வழங்க வேண்டும். இதனால் கட்டுமான பொருட்கள் விலையும் குறையும், விபத்துக்களும் தடுக்கப்படும். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களில் குவாரிகளை முறைப்படுத்தி, கட்டுமான பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகளை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இதேபோல் டாஸ்மாக் மதுபான கடை மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கேயே அமர்ந்து மது அருந்த பார்வசதிகள் உள்ளன. ஆனால் கடந்த 4,5 மாதகாலமாக டாஸ்மாக் கடையில் பார் நடத்த அனுமதி புதுப்பிக்கப்படாததால் தெரு ஓரங்களிலும், மறைவான இடங்களிலும், நிறுத்தப்பட்டுயிருக்கும் வாகனங்கள் மறைவிலும் மதுபிரியர்கள் மது அருந்துகின்றார்கள்.

    இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். சிறுவர்கள், பெண்கள் அச்சத்தோடு நடமாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுப்பதற்கு பார் நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×