என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வட்டார வள மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் உள்ள கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழா நடந்தது. 5 தினங்களாக நடந்த இந்த விழாவில் கரகாட்டம், காய்கறி சிற்பங்கள், ஒவியம் வரைதல், களிமண் சிற்பங்கள் உள்ளிட்ட 92 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்த மாணவ-மாணவிகள் குழுக்கள் முதல் 2 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு பெறுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் கலை குழுக்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெறும் முதல் 2 குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். கலை திருவிழா போட்டிக்கு சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் இந்தியன் செந்தில், கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி, கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் ரமேஷ், துணைத் தலைமை ஆசிரியர் ஞான அற்புதராஜ் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியராஜ், ஐ.டி.கே. ஒருங்கிணைப்பாளர் பாக்கியகுமார் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • திருப்புவனத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சோனைரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மனோன்மணி மதிவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலசந்தர், கிளைச் செயலாளர்கள் மணலூர் பிரபு, ராஜ், பீசர் பட்டினம் ராமசந்திரன், கீழடி சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இளையான்குடி ஒன்றியத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலா ளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, நகர் செயலாளர் நாகுர்மீரா ஒன்றிய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஜெயல லிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மானாமதுரை ஒன்றி யத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் காளையார்கோவில் ஒன்றியத்தில் பஸ்நிலையம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை இணைச்செ யலாளர் மோசஸ், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை ஓ.பி.எஸ். அணி

    சிவகங்கை அ.தி. மு.க., (ஓ.பன்னீர் செல்வம் அணி) சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு ஊர்வலமாக வந்து மலர்

    தூவி மரியாதை செலுத்தி னர். நகர் செயலாளர் கே.வி., சேகர், மாவட்ட துணை செயலாளர் என்.எம்., ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் சுந்தரபாண்டியன், தொகுதி செயலாளர் நாக ராஜன், நகர் துணை செய லாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    சிவகங்கை

    மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வின் 6-ம் ஆண்டு நினைவு நாள் சிவகங்கை மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.

    சிவகங்கை நகர அ.தி.மு.க. சார்பில் செயலாளர் என்.எம்.ராஜா.தலைமையில் நிர்வாகிகள் அரண்மனை வாயில் வழியாக மவுன ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் ஸ்டிபன்அருள்சாமி, செல்வமணி, நகர் அவைத்தலைவர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, சக்தி, மாரிமுத்து, கவுன்சிலர்கள் தாமு, ராபர்ட், கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெயலலி தாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.வி. நாகராஜன் மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

    காந்தி சிலையில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக நடந்து சென்று ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், பேரவை மாவட்ட இணை செயலாளர் சி.எம். முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜா முகமது, நகர துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள் சின்னையா, ஆறுமுகம், கவுன்சிலர்கள் பழனியப்பன், சையது ராபின் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் நகரில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளரும், ஆவின் சேர்மனுமான கே.ஆர். அசோகன் தலைமையில் நகரச் செயலாளர் முருகேசன்,ஒன்றிய கழக செயலாளர்கள் நாகராஜன், தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாதன் முன்னிலையில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    அவரது படத்திற்கு மலர் தூவி மவுனஅஞ்சலி செலுத்தியதோடு, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார், விஜயராஜ்,மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம், திருப்பத்தூர் நகர் நிர்வாகிகள், ராம ராஜன், ஆனந்த்ராஜ், ராமகிருஷ்ணன், மலைச்சாமி, சரவணன், கணேசன், வெள்ளைக்கண்ணு,விஜயா, மோகன் காதர், ஜோதிபாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ.-முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாவட்ட பேரவை ஊரவயல் எஸ்.பி.ராமு, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட பேரவை துணை செயலாளர் இயல் தாகூர், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, நகர மகளிரணி செயலாளர் சுலோசனா, வட்ட செயலாளர்கள் சீனிவாசன், சரவணன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் என்.ஜி.ஓ. காலனி மற்றும் பர்மா காலனி பகுதிகளில் ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பி ரமணியன், தேவிமீனாள், ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் நகர செயலாளர் பாலா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, நிர்வாகி திருஞானம், மாவட்ட பாசறை செயலாளர் அங்கு ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் கே ஆர் அசோகன் தலைமையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை மற்றும் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

    தேவகோட்டை, காரைக்குடியை தொட ர்ந்து திருப்பத்தூரில் மாவட்ட செயலாளர் தலைமையில் திருப்பத்தூர் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலா ளர்கள் நாகராஜன் தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் விஜயராஜ், மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம் மற்றும் பலர் பங்கேற்றனர். 

    • வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ராஜபாளையம் ரிதம் அறிவுசார் குறை பாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் முனியசாமி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், மாணவி ஜீவிதா நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவி அமலா கிரிக்கெட் பந்து எறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    முன்னாள் படைவீரர் கொடிநாளையொட்டி 2019-ம் ஆண்டில் அதிக வசுல் செய்து சாதனை புரிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சார் பதிவாளர் முத்துச்சாமி ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில், ஆனையூர், மங்களம், கீழ திருத்தங்கல் பகுதிகளை சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு தலா 2 சென்ட் வீதம் தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.65ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 30ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    • திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
    • போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே கண்டாங்கி பட்டியில் உள்ள மவுண்ட் லிட்டரா சி.பி.எஸ்.இ. பள்ளியில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மாநிலங்களுக்கு இடையே தமிழக மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 19 வயதுக்குட்பட்ட 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். இறுதி நாள் போட்டியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு பரிசு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் பல தடைகளை மீறி சிறப்பான மக்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். 8½ கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் குறை இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் அணி திரள வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட மாணவ விடுதிகளில் உணவு, சமையலறை, கூடுதல் இடவசதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் பெரியகருப்பன் நடத்தி வைத்தார்.
    • மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    சிவகங்கை

    இந்து சமய அறநிலை யத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில், 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    ரூ.4.97 லட்சம் மதிப்பீட்டில் 13 ஜோடிகளுக்கு திரு மாங்கல்யம், மணமகள் மற்றும் மணமகன் ஆகியவர்களுக்கான ஆடைகள், மணமக்களுக்கு மாலை, புஷ்பம், பாத்தி ரங்கள், பித்தளை குத்து விளக்கு, பாய், தலையணை, கேஸ் அடுப்பு உள்ளிட்ட சீர்வரிசைகள் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் கோவில் உபயதாரர்களின் பங்களிப்புடன் வழங்கப்படது.

    இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர்கள் செல்வ ராஜ் (சிவகங்கை), ஞான சேகரன் (ராமநாதபுரம்) வில்வமூர்த்தி (மடப்புரம்), திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல், கோவில் அறங்காவலர்கள் லெட்சுமணன், சபா அருணா சலம், சம்பத், ராஜா சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு சங்க விற்பனையாளர்-கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 14-ந் தேதி தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் ஜினு தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதார ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளது.

    விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பத்துள்ள தகுதியான விண்ணப்பதா ரர்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையிலும் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 23-ந் தேதி அன்றும் சிவகங்கை, திருப்பத்தூர் ரோடு, மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரில் அமைந்துள்ள ஏ.எம்.கே.மஹாலில் நடைபெறவுள்ளது.

    நேர்முகத்தேர்விற்கான அனுமதிச்சீட்டினை சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு இணைய தளத்திலிருந்து (http/www.drbsvg.net) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுயஒப்பம் இட்ட இரு நகல்களுடன் இரு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான வணங்களுடன் நேர்முகத் தேர்விற்கு வரும் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நேர்முகத் தேர்விற்கான அனுமதி சீட்டில் தெரிவிக்க ப்பட்ட விண்ணப்பதா ரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள்ள ப்படுகிறது. இது குறித்தான சந்தேகங்கள் ஏற்பட்டால் சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் அலைபேசி எண் 70942 55260 மற்றும் என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் ஜினு தெரிவித்துள்ளார்.

    • சாலை விதிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பள்ளி அரங்கத்தில் நடந்தது. மாவட்ட போக்கு வரத்து அலுவலர் மூக்கன் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து அலுவலர் மூக்கன் பேசுகையில், சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடும்.

    சாலை விதிகளில் விழிப்பு ணர்வு இல்லாமை, கவனச்சிதறல், பொறுப்பு ணர்வு, விதிமுறைகளை கடைப்பிடிக்காதிருத்தல், வாகனங்கள் பற்றி அறியாமை, அவசரம், அலட்சியம், போன்ற வற்றைச் சொல்லலாம்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நடக்கிறது. இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார். 

    • அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள விசாலை யன்கோட்டை, கீழக்கோட்டை, சொக்கநாதபுரம், பாகனேரி, நகரம்பட்டி, பனங்காடி, மல்லல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 13 பள்ளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறையும், பல்வேறு பள்ளிகளுக்கு ரூ.90ஆயிரம் மதிப்பில் உபகரணங்களை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

    இதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருகிற அரையாண்டு தேர்வில் 1 முதல் 12 வகுப்பு வரை முதலிடம் பிடிக்கும் மாணவர்களை தனது சொந்த செலவில் ஆசிரியர்களுடன் கல்வி சுற்றுலாவாக சட்டமன்றத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

    இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன்அருள்ராஜ், பழனிசாமி, சிவாஜி, கோபி, காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேசுவரி கோவிந்தராஜன், கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ், தேவதாஸ், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சதீஸ்பாலு, மாவட்ட பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மாதிரி பள்ளி செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு செய்தார்.
    • ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசின் மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கல்விகற்றல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட றிந்தார்.

    பள்ளியில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று அவர், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஆய்வின்போதுமாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவிலான நுழைவு தேர்வு தயார் செய்யும் விதமாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினத்தன்று மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதில் சிவகங்கை கீழக்கண்டனி அரசு மாதிரி பள்ளியும் ஒன்று. இதில் 77 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உணவு விடுதி, கட்ட மைப்பு வசதிகள் செய்யப்ப ட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எவ்வித போட்டி தேர்வுகளையும், நுழைவு தேர்வுகளையும் எதிர்கொள்ள இந்த பள்ளிகள் தொடங்கப்ப ட்டுள்ளது. திறன்மிக்க ஆசிரியர்களை வைத்து இங்கு பாடங்கள் கற்பிக்க ப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வின்போது முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன், ஒருங்கி ணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
    • வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அகிழ்மனைத்தெரு முத்தையா பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார் காத்த பெருமாள் மனைவி சொர்ணத்தம்மாள். இவரின் வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.

    உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியம் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் பாம்பு பிடிக்கும் உபகரண கருவிகள் கொண்டு சுமார் 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

    • கண்மாயில் கழிவு நீரை திறந்துவிடும் தனியார் மது ஆலையை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • நடவடிக்கை எடுப்பதாக சிவகங்கை தாசில்தார் உறுதியளித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள உடைகுளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மது மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு பின்புறம் உடைகுளம் கிராமத்திற்கு சொந்தமான 160 ஏக்கர் விவசாய நிலமும், அதற்கு நீர்வள ஆதாரமாக திகழும் கண்மாயும் உள்ளது.

    மது ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அந்த கண்மாய்க்குள் திறந்து விடுகின்றனர். இதனால் கண்மாய் நீரின் தன்மை மாறுவதுடன் நிலத்தடி நீரும் மாசு பட்டு உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் பல ஆண்டுகளாக விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இந்த நீரை அருந்தினால் இறந்துவிடுவதால் மேய்ச்சலுக்காக அழைத்து செல்ல முடியாத நிலை யும் ஏற்பட்டுள்ளது. இந்த மது ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் பழுதாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று கனரக வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காளையார்கோவில் தாசில்தார் கிராம மக்களை சமாதானம் செய்ததுடன், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மது ஆலை அதிகாரி களிடம் விசாரணை நடத்திய தாசில்தார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    ×