என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • தேவகோட்டையில் பிளாஸ்டிக் பைகளில் இருந்த மாவு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • குடிசைத்தொழில் போல் நடைபெறுவதால் சாலை யோரங்களில் மாவு பாக்கெட்டுகளை விற்கின்றனர்.

    தேவகோட்டை

    சிவங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சில மாதங்களாக மாவு பாக்கெட்டு விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத்தொழில் போல் நடைபெறுவதால் சாலை யோரங்களில் மாவு பாக்கெட்டுகளை விற்கின்றனர்.

    சமீப காலமாக இந்த மாவு தரமற்றதாக உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு உடல் உபாதையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல் முருகனுக்கு மாவுப்பொருட்கள் தரமற்ற முறையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரும், உதவியாளர் மாணிக்கமும் சாலையோரங்களில் விற்கப்படும் மாவு பாக்கெட்டுகளை திடீர் ஆய்வு செய்தனர்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் சுமார் 20 கிலோ மாவுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மாவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • கல்லல் யூனியனில் ரூ.111.97 கோடியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றி யத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படு த்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாகவும், அதன் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 14-வது நிதிக்குழு மானியம், 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, எஸ்.ஐ.டி.எஸ்.திட்டம், ஒன்றிய பொது நிதி உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 2019-2020-ம் ஆண்டில் மொத்தம் 865 பணிகள் ரூ.2584.29 லட்சம் மதிப்பீட்டிலும், 2020-21-ம் ஆண்டில் மொத்தம் 1,328 பணிகள் ரூ.3896.49 லட்சம் மதிப்பீட்டிலும், 2021-22-ம் ஆண்டு 1,910 பணிகள் ரூ.4716.63 லட்சம் மதிப்பீட்டிலும் என மேற்கண்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டப்பணிகள் தொடர்பாக, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தளக்காவூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.2.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் இணைப்புகள் பணிகள் தொடர்பாகவும், கம்பனூர் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக்கடைக் கட்டிடம் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், 15-வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தே க்கத்தொட்டி கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், என்.மேலையூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்றக்கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்படுவது தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவ லர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவித் திட்ட இயக்குநர் செல்வி, சிவகங்கை மாவட்ட செயற்பொறியாளர் வெண்ணிலா, தேவ கோட்டை உதவி செயற்பொ றியாளர் ஜெயராஜ், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள், உதவிப்பொறியாளர்கள் விஜயலெட்சுமி, செல்லையா, கணேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • சிவகங்கையில் அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

    சிவகங்கை

    சட்டமேதை அம்பேத்கரின் 68-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன், கவுன்சிலர்கள் அயூப்கான், ராமதாஸ், விஜயகுமார், கார்த்திகேயன், மதியழகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் அருள்ஸ்டீபன், கோபி, அவைத்தலைவர் பாண்டி, கவுன்சிலர்கள் கிருஷ்ணாகுமார், ராபர்ட், நிர்வாகிகள் மோகன், கே.பி.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா, கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், தங்கசாமி, மாவட்ட கவுன்சிலர் சாந்தாராணி, கணேசன் ஆரோக்கியசாமி, ரமேஷ் உட்பட்ட பலர்மாலை அணிவித்தனர்.

    கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, நகரபொது செயலாளர் பாலமுருகன், சதிஷ், பொருளாளர் கவுதம் உட்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதேபோன்று விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு புளியால் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் புளியால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். தனிப்போட்டி பிரிவில் 7-ம் வகுப்பு மாணவர் தமிழ் அமுதன் பறை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் ஜெகதீசுவரன் முதலிடமும், ஒயிலாட்ட போட்டியில் ஜீவிதாஷிரி முதலிடமும் பெற்றனர்.

    9-ம் வகுப்பு மாணவர் வாசு பறை இசை போட்டியில் முதலிடமும், டிரம்ஸ் போட்டியில் அருண் முதலிடமும், கீ போர்டு போட்டியில் ஆல்வின் புஷ்பராஜ் முதலிடமும், செவ்வியல் நடனத்தில் சுருதி முதலிடமும், களிமண் சிற்ப போட்டியில் கமலேஷ் முதலிடமும், தனி நடன போட்டியில் முகிதா‌ 2-ம் இடமும், பானை ஓவியப் போட்டியில் ஜெயபாலா 2-ம் இடமும், தலைப்பை ஒட்டி வரைதல் போட்டியில் பால் தினகரன் 2-ம் இடமும், பல குரல் பேச்சு போட்டியில் ஹரி சதிஷ் 2-ம் இடமும் வெற்றி பெற்றனர்.

    குழுப் போட்டியில் விவாத மேடையில் ரித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், சமூக நாடகத்தில் முகமது ஹாரிஸ்‌, நித்திஷ்குமார் குழுவினர் முதலிடமும், கிராமிய நடனத்தில் வைஷ்ணவி, நிஷா குழுவினர் 2-ம் இடமும் பெற்றனர். அனைவரும் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜோசப் இருதயராஜ், ஜெயந்தி ஆகியோரையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் பலர் பாராட்டினர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வட்டார வள மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் உள்ள கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழா நடந்தது. 5 தினங்களாக நடந்த இந்த விழாவில் கரகாட்டம், காய்கறி சிற்பங்கள், ஒவியம் வரைதல், களிமண் சிற்பங்கள் உள்ளிட்ட 92 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்த மாணவ-மாணவிகள் குழுக்கள் முதல் 2 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு பெறுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் கலை குழுக்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெறும் முதல் 2 குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். கலை திருவிழா போட்டிக்கு சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் இந்தியன் செந்தில், கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி, கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் ரமேஷ், துணைத் தலைமை ஆசிரியர் ஞான அற்புதராஜ் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியராஜ், ஐ.டி.கே. ஒருங்கிணைப்பாளர் பாக்கியகுமார் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • திருப்புவனத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சோனைரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மனோன்மணி மதிவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலசந்தர், கிளைச் செயலாளர்கள் மணலூர் பிரபு, ராஜ், பீசர் பட்டினம் ராமசந்திரன், கீழடி சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இளையான்குடி ஒன்றியத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலா ளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, நகர் செயலாளர் நாகுர்மீரா ஒன்றிய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஜெயல லிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மானாமதுரை ஒன்றி யத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் காளையார்கோவில் ஒன்றியத்தில் பஸ்நிலையம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை இணைச்செ யலாளர் மோசஸ், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை ஓ.பி.எஸ். அணி

    சிவகங்கை அ.தி. மு.க., (ஓ.பன்னீர் செல்வம் அணி) சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு ஊர்வலமாக வந்து மலர்

    தூவி மரியாதை செலுத்தி னர். நகர் செயலாளர் கே.வி., சேகர், மாவட்ட துணை செயலாளர் என்.எம்., ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் சுந்தரபாண்டியன், தொகுதி செயலாளர் நாக ராஜன், நகர் துணை செய லாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    சிவகங்கை

    மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வின் 6-ம் ஆண்டு நினைவு நாள் சிவகங்கை மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.

    சிவகங்கை நகர அ.தி.மு.க. சார்பில் செயலாளர் என்.எம்.ராஜா.தலைமையில் நிர்வாகிகள் அரண்மனை வாயில் வழியாக மவுன ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் ஸ்டிபன்அருள்சாமி, செல்வமணி, நகர் அவைத்தலைவர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, சக்தி, மாரிமுத்து, கவுன்சிலர்கள் தாமு, ராபர்ட், கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெயலலி தாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.வி. நாகராஜன் மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

    காந்தி சிலையில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக நடந்து சென்று ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், பேரவை மாவட்ட இணை செயலாளர் சி.எம். முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜா முகமது, நகர துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள் சின்னையா, ஆறுமுகம், கவுன்சிலர்கள் பழனியப்பன், சையது ராபின் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் நகரில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளரும், ஆவின் சேர்மனுமான கே.ஆர். அசோகன் தலைமையில் நகரச் செயலாளர் முருகேசன்,ஒன்றிய கழக செயலாளர்கள் நாகராஜன், தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாதன் முன்னிலையில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    அவரது படத்திற்கு மலர் தூவி மவுனஅஞ்சலி செலுத்தியதோடு, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார், விஜயராஜ்,மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம், திருப்பத்தூர் நகர் நிர்வாகிகள், ராம ராஜன், ஆனந்த்ராஜ், ராமகிருஷ்ணன், மலைச்சாமி, சரவணன், கணேசன், வெள்ளைக்கண்ணு,விஜயா, மோகன் காதர், ஜோதிபாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ.-முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் மாவட்ட பேரவை ஊரவயல் எஸ்.பி.ராமு, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட பேரவை துணை செயலாளர் இயல் தாகூர், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, நகர மகளிரணி செயலாளர் சுலோசனா, வட்ட செயலாளர்கள் சீனிவாசன், சரவணன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் என்.ஜி.ஓ. காலனி மற்றும் பர்மா காலனி பகுதிகளில் ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பி ரமணியன், தேவிமீனாள், ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதில் நகர செயலாளர் பாலா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, நிர்வாகி திருஞானம், மாவட்ட பாசறை செயலாளர் அங்கு ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட ஆவின் சேர்மன் கே ஆர் அசோகன் தலைமையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை மற்றும் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

    தேவகோட்டை, காரைக்குடியை தொட ர்ந்து திருப்பத்தூரில் மாவட்ட செயலாளர் தலைமையில் திருப்பத்தூர் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலா ளர்கள் நாகராஜன் தேவேந்திரன் கணேசன், சிவா, தொகுதி செயலாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இதில் கல்லல் ஒன்றிய செயலாளர்கள் தென்கரை சுப்பிரமணியன், முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் விஜயராஜ், மாவட்ட பேரவை இணைச்செ யலாளர் திருஞானம் மற்றும் பலர் பங்கேற்றனர். 

    • வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ராஜபாளையம் ரிதம் அறிவுசார் குறை பாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் முனியசாமி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், மாணவி ஜீவிதா நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவி அமலா கிரிக்கெட் பந்து எறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    முன்னாள் படைவீரர் கொடிநாளையொட்டி 2019-ம் ஆண்டில் அதிக வசுல் செய்து சாதனை புரிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சார் பதிவாளர் முத்துச்சாமி ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில், ஆனையூர், மங்களம், கீழ திருத்தங்கல் பகுதிகளை சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு தலா 2 சென்ட் வீதம் தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.65ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 30ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    • திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
    • போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே கண்டாங்கி பட்டியில் உள்ள மவுண்ட் லிட்டரா சி.பி.எஸ்.இ. பள்ளியில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மாநிலங்களுக்கு இடையே தமிழக மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 19 வயதுக்குட்பட்ட 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். இறுதி நாள் போட்டியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு பரிசு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் பல தடைகளை மீறி சிறப்பான மக்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். 8½ கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் குறை இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் அணி திரள வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட மாணவ விடுதிகளில் உணவு, சமையலறை, கூடுதல் இடவசதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் பெரியகருப்பன் நடத்தி வைத்தார்.
    • மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    சிவகங்கை

    இந்து சமய அறநிலை யத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில், 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    ரூ.4.97 லட்சம் மதிப்பீட்டில் 13 ஜோடிகளுக்கு திரு மாங்கல்யம், மணமகள் மற்றும் மணமகன் ஆகியவர்களுக்கான ஆடைகள், மணமக்களுக்கு மாலை, புஷ்பம், பாத்தி ரங்கள், பித்தளை குத்து விளக்கு, பாய், தலையணை, கேஸ் அடுப்பு உள்ளிட்ட சீர்வரிசைகள் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் கோவில் உபயதாரர்களின் பங்களிப்புடன் வழங்கப்படது.

    இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர்கள் செல்வ ராஜ் (சிவகங்கை), ஞான சேகரன் (ராமநாதபுரம்) வில்வமூர்த்தி (மடப்புரம்), திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல், கோவில் அறங்காவலர்கள் லெட்சுமணன், சபா அருணா சலம், சம்பத், ராஜா சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு சங்க விற்பனையாளர்-கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 14-ந் தேதி தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் ஜினு தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதார ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளது.

    விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பத்துள்ள தகுதியான விண்ணப்பதா ரர்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையிலும் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 23-ந் தேதி அன்றும் சிவகங்கை, திருப்பத்தூர் ரோடு, மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரில் அமைந்துள்ள ஏ.எம்.கே.மஹாலில் நடைபெறவுள்ளது.

    நேர்முகத்தேர்விற்கான அனுமதிச்சீட்டினை சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு இணைய தளத்திலிருந்து (http/www.drbsvg.net) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுயஒப்பம் இட்ட இரு நகல்களுடன் இரு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான வணங்களுடன் நேர்முகத் தேர்விற்கு வரும் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நேர்முகத் தேர்விற்கான அனுமதி சீட்டில் தெரிவிக்க ப்பட்ட விண்ணப்பதா ரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள்ள ப்படுகிறது. இது குறித்தான சந்தேகங்கள் ஏற்பட்டால் சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் அலைபேசி எண் 70942 55260 மற்றும் என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் ஜினு தெரிவித்துள்ளார்.

    • சாலை விதிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பள்ளி அரங்கத்தில் நடந்தது. மாவட்ட போக்கு வரத்து அலுவலர் மூக்கன் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து அலுவலர் மூக்கன் பேசுகையில், சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடும்.

    சாலை விதிகளில் விழிப்பு ணர்வு இல்லாமை, கவனச்சிதறல், பொறுப்பு ணர்வு, விதிமுறைகளை கடைப்பிடிக்காதிருத்தல், வாகனங்கள் பற்றி அறியாமை, அவசரம், அலட்சியம், போன்ற வற்றைச் சொல்லலாம்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நடக்கிறது. இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார். 

    ×