என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை உயர்வை கண்டித்து"

    • பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அனைத்து பேரூராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காரைக்குடி

    மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அனைத்து பேரூராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காரைக்குடி தாலுகாவில் கண்டனூர், புதுவயல், பள்ளத்தூர், கோட்டையூர், கானாடுகாத்தான் பேரூராட்சிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்-சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்நாதன், மாசான், சுப்பிரமணியன், முருகன், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், மாணிக்கம், சேகர், குணசேகரன்.

    முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ஆறுமுகம், நரிவிழி கிருஷ்ணன், முருகன், சிதம்பரம், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவி மீனாள், ஒன்றிய துணை செயலாளர் வைரவபுரம் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    ×