என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காரைக்குடியில் அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    அ.தி.மு.க வினர் நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.

     காரைக்குடி

    அண்ணா நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர துணை செயலாளர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சித்திக், கலா காசிநாதன், கார்த்திகேயன், அவைத் தலைவர் சன் சுப்பையா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை ஊரவயல் ராமு, இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திராதேவி, விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம்,சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, அரியக்குடி கிளை செயலாளர்ஆறுமுகம், காரைக்குடி துணை செயலாளர் கணேசன், வழக்கறிஞர் அணி செயலாளர் பாலமுருகன், பேரவை ரவி, மஞ்சுநாத், அபி மன்யு, சரவணன், இளைஞரணி ஆறுமுகம், சுல்தான்,மாணவரணி வெங்கடேஷ்,அழகேசன்,லெட்சுமணன்,சிறுபான்மை பிரிவு சகுபர்,ஜாவித்,மகளிரணி ராமாமிர்தம், காளீஸ்வரி, ரேவதி, மாலதி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதில் தெற்கு நகர செயலாளர் கார்த்திக், வடக்கு நகர செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் முத்துபாரதி, சிறுபான்மை பிரிவு பொருளாளர் மாலிக்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணி செயலாளர் ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    • பிரான்மலை கோவிலில் தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • பால் பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சுவாமிக்கு அபிஷே ஆராதனைகள் நடந்தன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் பிரசித்திபெற்ற மங்கைபாகர்-தேனம்மை மற்றும் வடுக பைரவர் கோவில் உள்ளது. இந்த மலைப்பகுதி சுமார் 2,500 அடி உயரம் கொண்டது. இதில் பாதாளம், பூலோகம், கைலாயம் என 3 அடுக்குகளாக சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார்.

    பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர்-குயில்முகநாயகியும், பூலோகத்தில் உமா மகேசுவரர்-விசாலாட்சி அம்பாளுடனும், கைலாயத்தில் திருமண கோலத்தில் மங்கைபாகர்-தேனம்மை யாகவும் அருள் பாலித்து வருகின்றனர்.

    திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமை கொண்ட தாகும். இந்த மலையை கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்டதாக கூறப்படுகிறது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் 5 கோவில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடை பெறும்.

    முருகப்பெருமானுக்கு வேறு எங்கும் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தை பூசத்திருநாளான இன்று பிரான்மலை மங்கை பாகர்-தேனம்மை கோவிலில் இருந்து விநாயகர் முன்செல்ல வள்ளி-தெய்வானை உள்ளிட்ட தேவியருடன் முருகப்பெருமான் சப்பரத்தில் புறப்பட்டு 3 மைல் தொலைவில் உள்ள மேலப்பட்டி பிள்ளை யார்பட்டியில் உள்ள சுயம்பெருமாள் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கோவில் தோப்பில் தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அதனை தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்ற சுயம்பெருமாள் ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பால் பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சுவாமிக்கு அபிஷே ஆராதனைகள் நடந்தன.

    அதனை தொடர்ந்து மகா தீபாராதனையுடன் பூஜைகள் நிறைவு பெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை 5 கோவில் தேவஸ்தானம் செய்திருந்தது. ஆகம பூஜைகளை தேவஸ்தானபரம்பரை ஸ்தானிகம் சிவஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் செய்தார்.

    • அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
    • ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்தவர் தமிழ் செல்வன். இவருக்கும், ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்த அருண்குமாரின் தாயாருக்கும் தகாத உறவு இருந்தது.

    கடந்த 10.4.2019-ந் தேதி இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் அருண்குமார் கேட்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கினைந்த வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அருண்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

    • எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா நடந்தது.
    • கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கோவிலூரில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அருளாசியுடன் நடந்தது.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி அ.தி.மு.க நகர செயலாளர் மெய்யப்பன்,தொழிலதிபர் சத்குரு தேவன் முன்னிலை வகித்தனர். கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி சுப்பிரமணியன் வரவேற்றார். தொழிபதிபர் படிக்காசு திறந்து வைத்தார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன், மாங்குடி, ஆடிட்டர் ராஜகோபால், மாநில நல்லாசிரியர் வீரபாண்டியன், சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோ மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். லிப்ட் வசதியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனும், ஜெனரேட்டரை ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் மனோஜ்குமாரும் தொடங்கி வைத்தனர்.

    ஆவின் சேர்மன் அசோகன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி,ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுணசேகரன், சேவியர்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • சிவகங்கையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது.
    • கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலானவிளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை தடகள விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை போஸ் நகரில் உள்ள பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெறும்.

    8-ந் தேதி காலை கபடி, ஆக்கி, கூடைப்பந்து. கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகியவிளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 9-ந் தேதி கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். 10-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், தடகள விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி,கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியிலும், இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும் நடைபெற உள்ளன.

    11-ந் தேதி காலை நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும், கபடி, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, மேசைப்பந்து, கால்பந்து விளையாட்டுப்போட்டிகள் கல்லூரி மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    13-ந் தேதி காலை கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 14-ந் தேதி காலை கிரிக்கெட் போட்டிகள் பொதுப்பிரிவினர் பெண்களுக்கு மட்டும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. 15-ந் தேதி காலை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், இறகுப்பந்து போட்டிகள் பொதுப்பிரிவினர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிவகங்கை பேட்மிட்டன் அகாடமியிலும், பொதுப்பிரிவினர்ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, கையுந்து பந்து, தடகளம் விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது.

    16-ந் தேதி காலை அரசு ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,கையுந்து பந்து, கபடி, செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும்,17-ந் தேதி காலை மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, தடகளம்,எறிபந்து, கபடி, adopted volley ball ஆகிய போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி காலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடிஅழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், 21-ந் தேதி காலை பள்ளி மாணவிகளுக்கு மட்டும் கிரிக்கெட் போட்டிகள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

    டென்னிஸ் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. பளு தூக்கும் போட்டிகள் 23-ந் தேதி காலை மாணவர்களுக்கும், 24-ந் தேதி காலை மாணவிகளுக்கும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெறும்.

    கடற்கரை கையுந்து பந்து போட்டிகள் 13-ந் தேதி ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள வரும்போது, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், Bonafied சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
    • தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.

    பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.

    இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    • காரைக்குடி அருகே 126 ஆண்டுகளுக்கு பிறகு கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா புதுவயல் அருகில் உள்ள சின்ன வேங்காவயல் மற்றும் வலயன்வயலில் கைலாச விநாயகர் கோவில் உள்ளது. கடைசியாக 1897ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 126 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கண்டனூர் வேங்காவயலார் வீடு அழகப்ப செட்டியார் குடும்பத்தார் மற்றும் மணிகண்டன் செட்டியாரால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிறப்புபூைஜகள் நடைபெற்றன. நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட இளைய தலைமுறையினர் அரசு திட்டங்களின் மூலம் தொழில்கள் தொடங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி வட்டம், அரியக்குடியில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வியாபாரம், சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கி முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றி ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.

    கலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்கான கலையினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் வகையில், ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, காரைக்குடி வட்டம், அரியக்குடியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக வெண்கல குத்துவிளக்கு, கடவுள் உருவங்கள், மணிகள், திருவாட்சி மற்றும் பிற பூஜை பொருட்களை உற்பத்தி செய்யும் பணியினை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்கள், அவர்கள் மேற்கொண்டு வரும் தொழிலை மேம்படுத்தும் வகையில், அரசால் வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் வெண்கல உலோக உற்பத்தியா ளர்களுக்கான குழுமம் ஒன்றை அமைத்து தருவதற்கு கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில் அதற்கான இடத்தையும் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு, இளைய தலை முறையினர்கள் இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி, பயன்பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை, புள்ளி விவர ஆய்வாளர் நாகராஜன், சிவகங்கை தொழில் கூட்டுறவு அலுவலர் ருத்ரமூர்த்தி, தொழில் கூட்டுறவு மேற்பார்வையாளர் முத்துக்குமார், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நாளை ெதாடங்குகிறது.
    • மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 கணினி வழியில், நாளை (3-ந்தேதி) முதல் 8-ந் தேதி வரை முதற்கட்டமாகவும் (ேபட்ச்-1),இ 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 2-வது கட்டமாகவும் (ேபட்ச்-2), 2 கட்டங்களாக காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.

    திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரி, காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் நாளில் காலையில் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 7.30 மணிக்கும், மதியம் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 12.30 மணிக்கும் வருகை தர வேண்டும். மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலம் புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும், சுயதொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & hair Dressing) பயிற்சி தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

    இதில் ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development of India) யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம்.சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தேவகோட்டையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர்.
    • தேவகோட்டையை சேர்ந்த முருக பக்தர்கள் காவடிகள் எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு காவடிகள் எடுத்து பழனி முருகன் ேகாவிலுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 5-ந் தேதி நடைபெற இருப்பதால் தேவகோட்டையை சேர்ந்த முருக பக்தர்கள் காவடிகள் எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர். இன்று காலை அவர்கள் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பகுதி வழியாக பழனி நோக்கி சென்றனர்.

    தங்களது முன்னோர்கள் காட்டிய வழியில் ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாதயாத்திரையை தொடருவார்கள். இரவில் வழியில் தங்கி செல்வார்கள். அவர்களுக்கு ஆங்காங்கே கிராமமக்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்த பக்தர்கள் தைப்பூச தினத்தன்று பழனியை சென்றடைந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பாதயாத்திரையாகவே தங்களது வீடுகளுக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிங்கம்புணரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
    • பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரவுறுதி தரநிலைகள் குழுவினர் டெல்லியில் இருந்து வருகை தந்து ஆய்வு செய்தனர்.இந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வெளி நோயாளிகள் அதிகம் வருகின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரசவம் நடக்கிறது. இந்த குழுவை சேர்ந்த டாக்டர்கள் சசிகலா, கிர்திமன் மஹர்தா ஆகியோர் கட்டிட வசதி, வெளி நோயாளிகள் வருகை, மருத்துவ பரிசோதனை கருவிகளின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்.

    நோயாளிகளின் விபரங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பிரசவமான குழந்தைகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சேவைகள் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு மாலை வரை நீடித்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    ×