என் மலர்tooltip icon

    சேலம்

    • அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
    • அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6111 கனஅடியாக இருந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியதால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.60 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6111 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 89.69 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார்.

    அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார்.

    அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    இந்நிலையில், சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்," பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார்.

    2026 தேர்தலில் திமுகவுக்கும் - தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது" என்றார்.

    • அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.
    • தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மழையின் காரணமாக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமார பாளையம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர். பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன்.

    * எடப்பாடி பழனிசாமி உடன் அரசியல் எதுவும் பேசவில்லை.

    * அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக காலம் வரும்போது சொல்கிறேன்.

    * அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.

    * தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.

    * விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது.

    * கூட்டம் வருவதை வைத்து தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என விஜய் சொல்லக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 118.62 அடியாக இருந்தது.
    • மேட்டூர் அணையில் 91.28 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 118.62 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 9 ஆயிரத்து 731 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 11 ஆயிரத்து 397 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.28 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.
    • ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.

    ஓமலூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * அ.தி.மு.க. உள் விவகாரத்தில் தலையிட மாட்டேம் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

    * அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடவில்லை.

    * என்னுடைய எழுச்சி பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார்.

    * கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அ.தி.மு.க.வில் வழக்கம்.

    * முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.

    * ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.

    * ஜெயலலிதா இருக்கும் வரை சென்னைக்கு வராதவர் டி.டி.வி. தினகரன்.

    * அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்து சென்றவர் டி.டி.வி. தினகரன்.

    * பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி வெளியேற்றப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்.

    * அமித்ஷாவை சந்திக்க யாருடன் சென்றேன் என்பதை கேட்க கூடாது.

    * கார் இல்லாததால் தான் கிடைத்த காரில் ஏறி சென்றேன்.

    * அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பானது தான்.

    * டி.டி.வி.தினகரன் கூட்டணியில் இணைவது என்பது உட்கட்சி விவகாரம்.

    * செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வெளியே சொல்ல முடியாது என்றார். 

    • முகத்தை மறைத்து கொண்டு வெளியே செல்வதற்கு எந்த காரணமும் இல்லை.
    • வேறு எந்த காரணமும் இல்லாததால் தி.மு.க.வினர் நான் முகத்தை துடைத்ததை வைத்து விமர்சிக்கின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க.விற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    * யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் ரத்தின கம்பளம் விரித்தனர்.

    * தி.மு.க.விற்கு ஆளுங்கட்சி என்றால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சி என்றால் ஒரு நிலைப்பாடு.

    * எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் வருகைக்கு ஸ்டாலின் கருப்பு கொடி காட்டினார்.

    * நான் அமித்ஷாவை சந்திக்கிறேன் என்பது அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும்.

    * நேரம் அதிகம் இருந்ததால் என்னுடன் இருந்தவர்களை அனுப்பி விட்டேன்.

    * நான் மட்டும் அமித்ஷாவுடன் 10 நிமிடம் தனியாக சந்தித்து பேசினேன்.

    * அரசாங்க காரில் தான் அமித்ஷாவை சந்திக்க சென்றேன்.

    * அமித்ஷா வீட்டில் இருந்து காரில் வெளியில் வந்த போது கைக்குட்டையால் முகத்தை துடைத்தேன்.

    * முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது.

    * ஒரு கட்சியின் பொதுச்செயலாளரை திட்டமிட்டு அவதூறு பரப்புவது சரியல்ல.

    * முகத்தை மறைத்து கொண்டு வெளியே செல்வதற்கு எந்த காரணமும் இல்லை.

    * வேறு எந்த காரணமும் இல்லாததால் தி.மு.க.வினர் நான் முகத்தை துடைத்ததை வைத்து விமர்சிக்கின்றனர்.

    * பொதுவெளியில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.

    * அ.தி.மு.க.வை விமர்சிக்க தி.மு.க.வினருக்கு எந்த தகுதியுமில்லை, அருகதையுமில்லை.

    * முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கடிதம் அளித்தேன்.

    * நன்றியை மறந்து அமைச்சர் ரகுபதி செயல்படுகிறார்.

    * கிட்னி முறைகேடு நடந்ததை அரசே ஒத்து கொண்டுள்ளது.

    * தி.மு.க. சட்டமனற் உறுப்பினரின் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடந்துள்ளது.

    * கிட்னி திருட்டு போன்றவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

    இதனிடையே செந்தில் பாலாஜி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை எடப்பாடி பழனிசாமி காட்டினார். இதன்பின், ஊழல்வாதி என கூறிய செந்தில்பாலாஜிக்கு எப்படி அமைச்சர் பதவியை ஸ்டாலின் கொடுத்தார் என கேள்வி எழுப்பினார்.  

    • அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 342 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • தற்போது அணையில் 91.49 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. அதன் படி நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்தது. ஆனாலும் மேட்டூர் அணையில் இருந்து நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக குறைந்து காணப்பட்டது.

    அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 342 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.49 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர்.
    • ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர்.

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வரவேற்றார்.

    விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாம் தொலைக்காட்சிகளை பார்க்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர். ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர். நான் கூறுகிறேன், கடைசியாக எல்லாத்தையும் 'ஓவர்டேக்' செய்து வெற்றி பெறுவது பிங்க் கலர் பஸ்தான். இது மகளிர்களான நீங்கள் பயன்படுத்தும் முதலமைச்சரின் அந்த 'பிங்க் கலர்' பஸ் தான் மற்ற எல்லா பஸ்களையும் ஓரம் கட்டிவிட்டு வெற்றி பெறும் என்றார்.

    • இரண்டு பாமக எம்.எல்.ஏ.-க்கள் ஒற்றுமையாக பாராட்டியுள்ளனர்.
    • அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும்.

    சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கி பேசினார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    இங்கு நடப்பது அரசு விழாவா? மகளிர் விழாவா? என்ற அளவிற்கு எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு வந்துள்ளீர்கள். இந்த விழாவிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது. நம்முடைய கூட்டணியில் கூட (இப்போது) கிடையாது.

    சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகிய இருவரும், சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பாராட்டுகள் என போட்டி போட்டு கொண்டு பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒற்றுமையாக பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 564 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
    • மேட்டூர் அணையில் தற்போது 93.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.71 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 564 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு சேலம் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே போல மற்ற இடங்களுக்கும் காணொலி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    பிற்பகல் 3 மணியளவில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மறு சீராய்வு கூட்டத்தில் பங்கேற்கும் அவர் மாவட்டத்தில் ஏற்கனவே செய்துள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து இனி வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்வுகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் 15-ந் தேதி மாலை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சேலம் வருகிறார். அப்போது அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பல ஆயிரம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    மேலும் அவர் வந்து செல்லும் பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
    • மேட்டூர் அணையில் தற்போது 93.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதன் காரணமாக மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கிருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

    நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்தது.

    பின்னர் மழை மீண்டும் பெய்ய தொடங்கியதால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதியும், 3-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதியும், ஜூலை 25-ந் தேதி 4-வது முறையாகவும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி 5-வது முறையாகவும், கடந்த 2-ந் தேதி 6-வது முறையாகவும் நிரம்பியது.

    இதற்கிடையே மீண்டும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் அணைக்கு வரும் நீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 228 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் இந்தாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் தற்போது 93.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×