என் மலர்
நீங்கள் தேடியது "milk packets"
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 95.78% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட 35.86% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்த விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
ஆவான் பால் பாக்கெட்டில் "தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிரத்திருந்த கணக்கீட்டு படிவத்தினை தங்களது வாக்காளர் நிலை அலுவலரிடம் ஒப்படைத்து விட்டீர்களா" என்று வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
- பால் பாக்கெட்களை அனுப்புவதற்காக சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர்.
- பால் பாக்கெட்களை ஆய்வு செய்த போது, பால் பாக்கெட்கள் அதிகம் இருப்பது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான பால் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த கௌதம் (வயது34) சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பால் பாக்கெட்களை அனுப்புவதற்காக சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர்.
இதன் ஓட்டுனராக பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது41) பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, பால் நிறுவனத்தில் இருந்து, குறிப்பிட்ட அளவுக்கு மேல் பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று சரக்கு வேனில் ஏற்றப்பட்ட பால் பாக்கெட்களை நிறுவன மேலாளர் சகாய பாபு ஆய்வு செய்த போது, குறிப்பிட்ட அளவைவிட பால் பாக்கெட்கள் அதிகம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் விசாரித்த போது இருவரும் பால் பாக்கெட்களை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, பால் பாக்கெட்டுகள் திருட்டு குறித்து மேலாளர் சகாய பாபு புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






