என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது- எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது- எடப்பாடி பழனிசாமி

    • காற்றை எப்படி தடைபோட முடியாதோ., அப்படி எவராலும் அதிமுக-வை தடுத்து நிறுத்த முடியாது.
    • அதிமுக-வை தாக்க தாக்க வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    ஓமலூரில் அதிமுக 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * எத்தனை எட்டப்பன்கள், துரோகிகள் நம் இயக்கத்தில் இருந்து கொண்டே நம்மை வீழ்த்த முயற்சி செய்தார்கள். மக்கள், தொண்டர்கள் துணையோடு அனைத்து துரோகங்களையும் முறியடித்து உள்ளோம்.

    * என்ன பூச்சாண்டி காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்

    * அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்கவோ.. ஆட்டவோ முடியாது.

    * காற்றை எப்படி தடைபோட முடியாதோ., அப்படி எவராலும் அதிமுக-வை தடுத்து நிறுத்த முடியாது.

    * திமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

    * அதிமுக-வை தாக்க தாக்க வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    * 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெறும்.

    * பழுத்த மரத்தில்தான் கல்லடி படும் என்பதுபோல் அதிமுக மீது அவதூறு பிரசாரம்.

    * எந்த இயக்கத்திலும் இப்படி ஒரு பிரச்சனை வந்தது கிடையாது.

    * ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நிறைய சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    Next Story
    ×