என் மலர்tooltip icon

    சேலம்

    • அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.58 அடியாக குறைந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.

    இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 12,713 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை அதிகரித்து வினாடிக்கு 15,710 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர் வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.58 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 55.54 டி.எம்.சி. உள்ளது.

    • "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" இன்று நடைப்பெற்றது.
    • சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா" சேலம் பத்மவாணி கல்லூரியில் இன்று நடைப்பெற்றது.

    இவ்விழாவில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், "இயற்கை விவசாயம் மண் வளத்தை மட்டுமல்ல மனித குலத்தையும் வளமாக்குகிறது" என பேசினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. இது மண் வளம் பற்றியது மட்டுமல்ல மனித குலத்தின் வளமும் அதில் தான் இருக்கிறது. மனிதர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அதிகப்படியான கூட்டம் மருந்து கடைகளில், மருத்துவமனையில் இருப்பதை பார்க்க முடிகிறது.

    காரணம் மண் வளம் இல்லாமை. இன்றைய இயற்கை சீற்றங்கள் அனைத்திற்கும் நாம் தான் காரணம். 40 ஆண்டுகள் முன்பு கேன்சர் எங்கோ ஒருவருக்கு தான் இருந்தது.

    இன்று ஊரெங்கும் கேன்சர் மருத்துவமனை, மலட்டுத்தன்மை நீக்கும் மருத்துவமனை பார்க்க முடிகிறது. இதற்கு இயற்கையை காக்க வேண்டும், அதை காப்பதற்காக தான் ஈஷா அறக்கட்டளை இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

    மண் வளத்தை பெருக்க வேண்டும் என்பது தான் நோக்கம். இது உயர்ந்த நோக்கம் இதற்கு தலை வணங்குகிறோம், இதை ஈஷா மேலும் விரிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 92.60 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடக, தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று மாலை வினாடிக்கு 8 ஆயிரத்து 268 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 12 ஆயிரத்து 713 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 92.60 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் தற்போது 55.67 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 

    • பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி.
    • சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாகவும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் மாலை 4 மணிக்கு சாரல் மழையாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் திடீரென பலத்த மழையாக கொட்டியது.

    தொடர்ந்து இடி-மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் கூட்டமின்றி நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

    பலத்த மழை காரணமாக ஏற்காடு நகரம், நாகலூர், செம்மனத்தம், வெள்ளக்கடை, மஞ்சக்குட்டை, வாழவந்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    மேலும் கடுங்குளிரும் நிலவி வருகிறது. பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    இதே போல் சேலம் மாநகர பகுதியில் இரவு 9 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    மேலும் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு சாலையில் மண், கற்கள் குவியலாக காட்சி அளிக்கிறது.


    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 10 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. ஒரே நாள் இரவில் இவ்வளவு மழை பெய்ததால் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது.

    பொதுமக்கள் விடிய, விடிய, வீட்டில் புகுந்த மழை தண்ணீரை அப்புறப்படுத்தினர். இதே போல் பிரபாத் சிக்னல் பகுதியிலும் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் தண்ணீரை அகற்றினர்.

    புதிய பஸ் நிலையத்தையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இடுப்பளவுக்கு தண்ணீர் இருந்ததால் தண்ணீர் இருந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதே போல் வெண்ணங்கொடி முனிப்பன் கோவிலையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. மழையின் காரணமாக குளிரும் நிலவியது.

    மேட்டூர் மற்றும் நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது.


    இதன் காரணமாக கிராமப்புறங்களில் வயல் வெளிகளில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது. இதே போல் ஆத்தூர், கெங்கவல்லி, டேனிஷ் பேட்டை, சங்ககிரி, ஓமலூர் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேலம் மாநகரம் - 108.5, ஏற்காடு - 63.3, வாழப்பாடி - 4, ஆனைமடுவு - 80, ஆத்தூர் - 43, கெங்கவல்லி - 5, தம்மம்பட்டி - 18, ஏத்தாப்பூர் - 19, கரியக்கோவில் - 30, வீரகனூர் - 24, சங்ககிரி - 7, எடப்பாடி - 6, மேட்டூர் - 7.2, ஓமலூர் - 14, டேனீஷ்பேட்டை - 47, என மொத்தம் மாவட்டம் முழுவதும் ஒரே நாள் இரவில் 478 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் இரவு 9 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. ராசிபுரத்தில் இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. அதிக பட்சமாக ராசிபுரத்தில் 12 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதேபோல் மங்களபுரம், குமார

    பாளையம், கொல்லிமலை ஆகிய இடங்களிலும் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராசிபுரம் - 122, மங்களபுரம் - 50.20, எருமப்பட்டி - 40, புதுசத்திரம் - 26, நாமக்கல் - 21, கலெக்டர் அலுவலகம் - 19, குமாரபாளையம் - 9.60, சேந்தமங்கலம் - 9, கொல்லிமலை - 6 என மாவட்டம் முழுவதும் 331.80 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

    • ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.
    • மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் போல பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருந்தது. குறிப்பாக வழக்கத்தை விட சுட்டெரிக்கும் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் அவதிப்பட்டனர். இந்த நிலையில் திடீரென மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் திடீரென மழை கொட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை கொட்டியது.

    சேலம் அம்மாபேட்டை, உடையாப்பட்டி பகுதியில் சுமார் 30 நிமிடம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக செந்நிறத்தில் ஓடியது. இதே போல் வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, கரியகோவில், மேட்டூர், சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதுமே பலத்த மழை கொட்டியது.

    ஏற்காட்டில் நேற்று மாலை 3.50 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 20 நிமிடம் கொட்டியது. பின்னர் லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மீண்டும் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை ஒரு மணிநேரம் கனமழையாக நீடித்தது. தொடர்ந்து விடிய, விடிய, மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.

    தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் கடுமையான குளிர்நிலவி வருகிறது. இதே போல் பனிமூட்டமும் அதிகளவில் ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-6, ஏற்காடு-29, வாழப்பாடி-4.5, ஆனைமடுவு-29, ஆத்தூர்-41, கெங்கவல்லி-63, தம்மம்பட்டி-2, ஏத்தாப்பூர்-20, கரிய கோவில்-70, வீரகனூர்-40, நத்தகரை-28, சங்ககிரி-5.1, எடப்பாடி-2, மேட்டூர்-6.8, ஓமலூர்-3.5, டேனிஷ்பேட்டை-45.

    இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கொல்லிமலை, சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி ,கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலர்மலை, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்திவேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து கடும் இடி மின்னலுடன் கூடிய கனமழை சற்று வேகமாக விடிய விடிய பெய்தது . இதன் காரணமாக இரவு முழுவதும் குளிர்ந்த காற்று நிலவியது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேந்தமங்கலம் - 97, கொல்லிமலை - 84, நாமக்கல் - 88, திருச்செங்கோடு - 74, பரமத்திவேலூர் - 65.50, எருமப்பட்டி - 40, கலெக்டர் வளாகம் - 34, மோகனூர்- 31, மங்களபுரம் - 20, குமாரபாளையம் - 1.20, புதுச்சத்திரம் 17, ராசிபுரம் - 10.

    • கடந்த ஜூலை மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.
    • மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள், கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்றுகாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93.40 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 6 ஆயிரத்து 416 கனஅடியாக குறைந்தது. மேலும் அணையில் இருந்து டெல்டாவுக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 56.62 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • சென்னன் கோவிலுக்கு செல்வதற்காக தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
    • நாமக்கல் நோக்கி பருப்பு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்தானது.

    பனமரத்துப்பட்டி:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் சென்னன் (65). இவரது மகள் சுதா (38). இவரை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாள குண்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். சுதா-வெங்கடாசலம் ஆகியோருக்கு விஷ்ணு (12) என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளாள குண்டம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது விஷ்ணுவுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சுதா தனது மகன் விஷ்ணுவை அழைத்துக்கொண்டு திப்பம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் சென்னன் தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோருடன் சமயபுரம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி இன்று காலை சென்னன் கோவிலுக்கு செல்வதற்காக தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். தனது மோட்டார் சைக்கிளை மல்லூரில் உள்ள ஒரு ஸ்டேண்டில் நிறுத்திவிட்டு பஸ்சில் செல்ல திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சென்னன் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவு ரோட்டில் வந்தபோது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி பருப்பு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்தானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சென்னன், அவரது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.

    இதுபற்றி தெரியவந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் (57) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது.
    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக இருந்தது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பியது.

    பின்னர் நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர் மீண்டும் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டில் 2-வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 2 ஆயிரத்து 718 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 ஆயிரத்து 284 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன திட்டத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 58.92 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையில் தற்போது 60.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 96.19 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 556 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 718 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் தற்போது 60.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்ததால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.

    இதற்கிடையே தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    அவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான லேடிஸ் சீட், அண்ணாபூங்கா, ஏரிபூங்கா, ஐந்திணை பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயிண்ட் போன்ற இடங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    காலை நேரத்திலேயே படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக மலைப்பாதை, ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
    • கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    சேலம்:

    நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏ.டி.எம். கொள்ளை கும்பல் இந்தியா முழுவதும் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கண்டெய்னர் லாரிகளில் சென்று கூகுள் மேப் மூலம் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.களை கண்காணித்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    நாமக்கல்லில் பிடிப்பட்ட 5 பேரிடமும் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மகாராஷ்டிராவில் கடந்த 2021-ம் ஆண்டு கொள்ளையடிக்க முயன்ற போது இவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். அப்போது அவர்களின் பெயர், முகவரிகளை மாற்றி தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் புகைப்படம், கைரேகை பதிவாகி உள்ளது.

    இவர்கள் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த பணத்தை யாரிடம் கொடுக்கிறார்கள். சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை கும்பலில் 70 பேர் கொண்ட கும்பல் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

    • நாமக்கல் அருகே விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போலீசில் தகவல்.
    • டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது பணம் இருந்ததாக தகவல்.

    கேரள மாநில ஏ.டி.எம். கொள்ளை

    கேரள மாநிலம் திருச்சூரில் மாப்ராணம், கொளழி, சொரனூர் ரோடு பகுதிகளில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம்.மையங்களில் நேற்று இரவு யாரோ புகுந்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இன்று அதிகாலை அந்த வழியே சென்றவர்கள், ஏ.டி.எம். எந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வங்கி அதிகாரிகளும் ஏ.டி.எம். மையங்களுக்கு வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த ரூ.65 லட்சம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்தனர்.

    ஏ.டி.எம். மையங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பெயிண்ட் அடித்து பதிவுகள் தடுக்கப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ள மற்ற கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வெள்ளைநிற காரில் முகமூடி அணிந்த 4 பேர் வந்து இறங்குவதும், அவர்கள் கையில் கியாஸ் கட்டர் எடுத்து வந்திருப்பதும் தெரியவந்தது. 4 பேரும் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைவதும் அங்குள்ள கண்காணிப்பு காமிரா மீது பெயிண்ட் அடிக்கின்றனர். பின்னர்தான் அவர்கள் கியாஸ் கட்டர் கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி பணம் எடுத்துள்ளனர்.

    ×