என் மலர்
நீங்கள் தேடியது "வடமாநில கொள்ளையர்"
- சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
- தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கோவை:
கோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.
இங்கு குடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் ஆவர். 14 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று மர்மநபர்கள் நுழைந்தனர்.
அவர்கள் அங்கு குடியிருப்பில் பூட்டி இருந்த வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். முதலில் அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தை மர்மநபர்கள் அரங்கேற்றியுள்ளனர். இதுவரை 13 வீடுகளில் இருந்து 56 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், வெள்ளி நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த கைரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சுட்டுபிடித்தனர். அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 35 முதல் 40 வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்தது. கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் கொள்ளையர்களை பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
- கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சேலம்:
நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏ.டி.எம். கொள்ளை கும்பல் இந்தியா முழுவதும் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கண்டெய்னர் லாரிகளில் சென்று கூகுள் மேப் மூலம் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.களை கண்காணித்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.
நாமக்கல்லில் பிடிப்பட்ட 5 பேரிடமும் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மகாராஷ்டிராவில் கடந்த 2021-ம் ஆண்டு கொள்ளையடிக்க முயன்ற போது இவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். அப்போது அவர்களின் பெயர், முகவரிகளை மாற்றி தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் புகைப்படம், கைரேகை பதிவாகி உள்ளது.
இவர்கள் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த பணத்தை யாரிடம் கொடுக்கிறார்கள். சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை கும்பலில் 70 பேர் கொண்ட கும்பல் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.






