search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Flow Increased"

    • கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது
    • இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

    பெரும்பாறை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில், பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்கள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் நீரூற்றுகள் தோன்றியுள்ளன. மேலும் நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அதன்படி பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளியல் போட சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    மேலும் இந்த தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. கடந்த ஒரு வாரமாகவே நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவிபோல் கொட்டுவதால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் நல்லாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #NallaruRiver #NallaruFlood
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழங்கரை, ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் நல்லாற்றில் தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்ததால் பழமைவாய்ந்த தாமரை குளம், சங்கு மாங்குத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நல்லாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்வதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #NallaruRiver #NallaruFlood
    ×