என் மலர்tooltip icon

    சேலம்

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அந்தந்த பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • தாரமங்கலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.

    தாரமங்கலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அந்தந்த பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தாரமங்கலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மைய சங்க பொருளாளர் சேகர், கிளைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியா ளர்களை நியமிக்க கூடாது, போதுமான பணியாளர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கிளை பொருளாளர் விஸ்வ நாதன், முருகன், காளிதாஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மர்மநபர் ஒருவர் தான் உணவு பாதுகாப்பு அலுவலர் எனவும், உனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததால் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்தார்.
    • நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மளிகை கடை உரிமையாளர் குமார் நைசாக போலீசாருக்கு போன் செய்ய முயற்சி செய்துள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் செட்டிமாங்குறிச்சி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சோதனை

    இந்த நிலையில் அண்மையில் குமாரின் மளிகை கடைக்கு டிப்-டாப்பாக உடை அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் தான் உணவு பாதுகாப்பு அலுவலர் எனவும், உனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததால் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்தார்.

    அப்போது அந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மளிகை கடை உரிமையாளர் குமார் நைசாக போலீசாருக்கு போன் செய்ய முயற்சி செய்துள்ளார். இதை கண்ட அந்த நபர் கடைக்குள் இருந்த குளிர்பான பாட்டிலை எடுத்து உடைத்து குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி, கடையில் பணப்பெட்டியில் இருந்த ரொக்க பணம் ரூ.21 ஆயிரத்து 500 -ஐ கொள்ளை அடித்துக் கொண்டு தான் வந்த மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

    இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீசார் அப்பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மளிகை கடையில் கொள்ளை அடித்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    குமாரபாளையத்தை சேர்ந்தவர்

    போலீசாரின் விசார ணையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பதும், இவர் மீது இதேபோன்று 13 -க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

    இவர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே தனது கூட்டாளியான அங்கப்பன் என்பவருடன் சேர்ந்து போலி அதிகாரியாக நடித்து பெருந்தொகையினை கொள்ளை அடித்துச் சென்ற வழக்கில் தலைறைவாக இருந்து வருவதும், அவரை போலீசார் தேடி வருவதும் தெரியவந்தது.

    கைது- ஜெயிலில் அடைப்பு

    இந்த நிலையில் தான் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த குமாரின் மளிகை கடையில் மணிகண்டன் போலி அதிகாரியாக நடித்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இது போன்ற போலி நபர்கள் அதிகாரிகள் எனக்கூறி சோதனை செய்ய முற்படும் போது சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்மாறு வியாபாரிகளை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன்பெறும்.

    டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும் பாசனத்தின் தேவையை கருதி போதுமான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தது.

    அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 31 அடிக்கு கீழே சென்றது. இதனால் டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 2,688 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுபோல் பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,528 கன அடியாக வந்த நிலையில் இன்று 9,345 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்மட்டம் 33.10 அடியாகயும், நீர் இருப்பு 8.81 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

    நீர்வரத்து இதே நிலை தொடர்ச்சியாக நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது.
    • கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 76.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 64 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 682 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2ஆயிரத்து 688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நீர்திறப்பு 5ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 2ஆயிரத்து 688 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    • அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சேலம் கொண்டலாம்பட்டி இந்தியன் வங்கி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் ஜோதி பாசு தலைமை தாங்கினார்.

    சேலம்:

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சேலம் கொண்டலாம்பட்டி இந்தியன் வங்கி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் ஜோதி பாசு தலைமை தாங்கினார். இதில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காமல் அரசு வஞ்சித்து வருகிறது. எனவே சம்பள பணத்தை வழங்க வேண்டும். அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் உடனே வேலை கொடுக்க வேண்டும், வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வரும் அமானி கொண்டலாம்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, எஸ். ஆட்டையாம்பட்டி ஏழை மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • முருங்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26 -ந் தேதி மக்கள் சந்திப்பு முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
    • மேலும் சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதனை சந்தித்தும் மனு கொடுத்தனர். அப்போது ஒரு வாரத்திற்குள் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்வதாக கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26 -ந் தேதி மக்கள் சந்திப்பு முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.

    சஸ்பெண்டு

    இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அதிகமானோர் ஏறியதால் மேடை சரிந்து விழுந்தது .இதையடுத்து அந்த கிராமத்தின் பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியான கண்ணன் என்பவரை கோட்டாட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து முறையிட முயன்றனர். அப்போது கலெக்டர், அவர்களை சந்திக்க மறுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    மேலும் சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதனை சந்தித்தும் மனு கொடுத்தனர். அப்போது ஒரு வாரத்திற்குள் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்வதாக கூறினார் . ஆனால் இதுவரை அந்த சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யவில்லை.

    ஆர்ப்பாட்டம்

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் சூரமங்கலம் தர்மா நகரில் உள்ள சேலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியான கண்ணனை மேடை சரிந்ததற்காக சஸ்பெண்டு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் . மேலும் அவர் வகித்த கொத்தனூர் கிராம நிர்வாக பதவிக்கு வேறு ஒருவரை கூடுதல் பொறுப்பு வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே உடனடியாக அவரது சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • தூய்மை பணியாளர்கள் திடீரென இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • போராட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணாளன் தலைமை தாங்கினார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நியமனம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் திடீரென இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வாரவிடுமுறை

    அப்போது அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், வார விடுமுறை மற்றும் ஆயுள் காப்பீடு, விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் ஆகியவை அமல்படுத்தக் கோரியும் சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் விருப்பத்திற்கு மாறாக அதிகாரிகள் தன்னிச்சையாக பணியிடமாற்றம் செய்ததை ரத்து கோரியும் வலியுறுத்தினர்.

    100-க்கும் மேற்பட்டோர்

    இந்த போராட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணாளன் தலைமை தாங்கினார். ஆற்றில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    இதையடுத்து டவுண் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் தான் நாங்கள் ஆற்றில் இருந்து மேலே வருவோம் என கூறினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் பத்திரமாக ஆற்றில் இருந்து கரைக்கு வந்தனர்.

    ரூ.9,700 சம்பளம்

    இது குறித்து அவர்கள் கூறுகையில், சேலம் மாநகாட்சியில் 700-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றோம். கடந்த மாதம் வரை மாநகராட்சி மகளிர் சுய உதவிக்குழு மூலம் மாதம் ரூ.11 ஆயிரத்து 600 ரூபாய் கூலி வாங்கி வந்தோம். தற்போது இந்த மாதம் ரூ.9,700 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்குவது போல் எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    • கொளத்தூர் அருகே விநாயக புரம் பகுதியை சேர்ந்த வர் தமிழ்வாணன். இவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு ஐ.டி. துறையில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.
    • இவரது மனைவி ஜெகப்பிரியா(22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்துள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே விநாயக புரம் பகுதியை சேர்ந்த வர் தமிழ்வாணன். இவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு ஐ.டி. துறையில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெகப்பிரியா(22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்துள்ளார்.

    விஷம் குடித்தார்

    இந்த தம்பதிக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ஜெகப்பிரியா தனது கணவர் வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

    இதை யாரிடமும் செல்லாமல் தனக்கு வயிற்று வலி, வாந்தி வருவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை கொளத்தூர், அந்தியூர், ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    சிகிச்சை பலனின்றி பலி

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கோவையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிகிச்சை அளித்த மருத்துவரிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக ஜெகப்பிரியா தெரிவித்தார்.

    இதை கேட்டு மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேி ஜெகப்பிரியா உயிரிழந்தார்.

    ஆர்.டி.ஓ. விசாரணை

    இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெகப்பிரியா எதற்காக விஷம் குடித்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மேட்டூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணமான 30 நாட்களில் புதுப்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த கோவிலில் தை மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் விஷேச பூஜைளும் நடத்தப்படும்.
    • கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் பழமையான முத்தாளம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் தை மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் விஷேச பூஜைளும் நடத்தப்படும்.

    கோவிலுக்கு சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

    உண்டியல் திருட்டு

    இக்கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் என்கின்ற வெள்ளையன் என்பவர் பூசாரியாக உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் இந்த கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாத்தியம்பட்டியை சேர்ந்த கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவில் நிர்வாகிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    சி.சி.டி.வி கேமிரா

    அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

    இதில் முத்தாளம்மன் கோவிலின் பூசாரி வெள்ளையன் கோவிலில் இருந்த வேலை பயன்படுத்தி பூட்டை உடைத்து உள்ளே செல்வதும் பின்னர் அங்கிருந்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அதிர்ச்சி

    இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பூசாரி வெள்ளையனை பிடித்து ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசாரி வெள்ளையனை கைது ெ சய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் பூசாரியே உண்டியல் உடைத்து பணத்தை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • மூன்றரை ஏக்கர் நிலத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வரை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் பெற்று இருந்தார்.
    • வெங்கடாசலம் தொடர்ந்து அனுமதியின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுப்பதாக சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருக்கு தகவல் கிடைத்தது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அன்னதானப்பட்டி கிராமம் பூத்தாளக்குட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், அதே பகுதியில் மூன்றரை ஏக்கர் நிலத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வரை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் பெற்று இருந்தார்.

    இந்த நிலையில் வெங்கடாசலம் தொடர்ந்து அனுமதியின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுப்பதாக சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருக்கு தகவல் கிடைத்தது.

    ஆய்வு

    இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் நேரில் சென்று தணிக்கை மேற்கொண்டார். அதில் உரிய நடைசீட்டு அனுமதியின்றி குத்தகை பரப்பிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் சுரங்கப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து வெட்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் கனிமத்தினை அளவீடும் பணி மேற்கொள்ளப்பட்டதில் உரிய நடைசீட்டு அனுமதியின்றி குத்தகை பரப்பிற்குள் 816.04 டன் சுண்ணாம்பு கற்களும் மற்றும் குத்தகை பரப்பிற்கு வெளியே 1,465.62 டன் என மொத்தம் 2281.66 டன் சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    வழக்கு பாய்ந்தது

    இதையடுத்து சுரங்க குத்தகை அனுமதியின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுத்தமைக்கும், அரசுக்கு ரூ. 8 லட்சத்து 45ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் வெங்கடாசலம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி தாசில்தார் செல்வகுமார் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வெங்கடாஜலத்தின் மீது சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலராக இருந்த கண்ணன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சேலம் ஆர்.டி.ஓ.வை கடந்த 29-ந் தேதி நேரில் சந்தித்து கண்ணன் பணியிட நீக்க உத்தரவினை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.

    சங்ககிரி:

    கிராம நிர்வாக அலுவலராக இருந்த கண்ணன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சேலம் ஆர்.டி.ஓ.வை கடந்த 29-ந் தேதி நேரில் சந்தித்து கண்ணன் பணியிட நீக்க உத்தரவினை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.

    ஆர்ப்பாட்டம்

    இதனை கண்டித்து நேற்று மாலை சங்ககிரி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சங்ககிரி வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்ககிரி வட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்ட பிரசார செயலாளர் முருகன், கோட்டச் செயலாளர் பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர் கண்ணனின் சஸ்பெண்டு உத்தரவை கண்டிக்கிறோம். இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ேகாஷம் எழுப்பினர். இதில் சங்ககிரி வட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

    மேட்டூர்

    கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். இதில் முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கர்ணனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் மீண்டும் அதே பகுதியில் பணிய மர்த்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள் அறிவழகன், சுதா, ராஜேஸ்வரி, சசிகுமார், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓமலூர்

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    • வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
    • இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பஜனை மடத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து படிப்பை தொடருமாறும், அல்லது ேவலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த தாய் மீனா அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் சென்னைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியில் உளுந்தூர் பேட்டை அருகே சென்ற போது திடீரென நெஞ்சு வலிப்பதாக தாமோதரன் கூறினார்.

    இதையடுத்து உறவி னர்கள்அவரை உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு நேற்று கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவி னர்கள் கதறி துடித்தனர். இது குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×