search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளத்தூர் அருகே பரபரப்புதிருமணமான 30 நாட்களில் புதுப்பெண் தற்கொலை
    X

    ஜெகப்பிரியா

    கொளத்தூர் அருகே பரபரப்புதிருமணமான 30 நாட்களில் புதுப்பெண் தற்கொலை

    • கொளத்தூர் அருகே விநாயக புரம் பகுதியை சேர்ந்த வர் தமிழ்வாணன். இவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு ஐ.டி. துறையில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.
    • இவரது மனைவி ஜெகப்பிரியா(22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்துள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே விநாயக புரம் பகுதியை சேர்ந்த வர் தமிழ்வாணன். இவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு ஐ.டி. துறையில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெகப்பிரியா(22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்துள்ளார்.

    விஷம் குடித்தார்

    இந்த தம்பதிக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ஜெகப்பிரியா தனது கணவர் வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

    இதை யாரிடமும் செல்லாமல் தனக்கு வயிற்று வலி, வாந்தி வருவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை கொளத்தூர், அந்தியூர், ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    சிகிச்சை பலனின்றி பலி

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கோவையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிகிச்சை அளித்த மருத்துவரிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக ஜெகப்பிரியா தெரிவித்தார்.

    இதை கேட்டு மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேி ஜெகப்பிரியா உயிரிழந்தார்.

    ஆர்.டி.ஓ. விசாரணை

    இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெகப்பிரியா எதற்காக விஷம் குடித்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மேட்டூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணமான 30 நாட்களில் புதுப்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×