என் மலர்
சேலம்
- சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர்.
- அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின்பேரில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- போலீசார் மினி மாரத்தான் போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த வார விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாரமங்கலம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள்
மினி மாரத்தான் போட்டி
இதையடுத்து போலீசார் மினி மாரத்தான் போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போலீஸ் நிலையத்திலிருந்து தொடங்கி மினி மாரத்தான் போட்டி குறுக்குப்பட்டி, பவளத்தானூர் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்து அடைந்தது. அப்போது சப்- இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், ரவிச்சந்திரன், மதிவாணன் மற்றும் கருணாகரன் உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
- இங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலைய ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 40 பேர், நேற்று மாலை திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனை 30 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அனல் மின் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அனல் மின் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராசிபுரம் பிரிவு ரோட்டில் இருந்து மல்லியகரை வரை சாலை விரிவாக்கப் பணி கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (25) மேற்பார்வையாளராக இருந்தார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரமூர்த்தி, மேம்பாலம் கட்ட பள்ளம் தோண்டிய மண் மீது நடந்து சென்றபோது சறுக்கி விழுந்தார்.
அப்போது இதை கவனிக்காமல் டிரைவர் சக்திவேல் என்பவர் பொக்லைன் எந்திரத்தை பின்னால் இயக்கினார். இதில் ஈஸ்வரமூர்த்தி மீது பொக்லைன் எந்திரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் பொக்லைன் எந்திரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் சக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர்.
- பூக்களை வாங்கி செல்வதற்கு பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கண்டிபாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், தண்ணீர் பந்தல், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களைப் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர்.
பூக்களை வாங்கி செல்வதற்கு பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.
நேற்று குண்டுமல்லி கை கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.50- க்கும், அரளி ரூ.80- க்கும், ரோஜா ரூ.150- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் வாங்கிச் சென்றனர். புரட்டாசி மாதம் திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் அதிகமாக இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
- சிமிலி ஏஜென்ஸ் (வயது 42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வீராணம் அருகே உள்ள பருத்தி காடுக்கு சென்றுள்ளார்.
- பின்னர் அவர் மறுநாள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் காதர்கான் தெருவை சேர்ந்தவர் எபினேசர். இவரது மனைவி சிமிலி ஏஜென்ஸ் (வயது 42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வீராணம் அருகே உள்ள பருத்தி காடுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் வீட்டில் இருந்து எதுவும் திருடு போகவில்லை.
மற்றொரு சம்பவம்
இதேபோல் சேலம் கந்தம்பட்டி பகுதியில் வரதராஜன் மனைவி ராஜாமணி என்பவர் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியனவையாக கருதப்படும்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்களாக கருதப்படுவர். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பின்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக கருதப்படுவர்.
குறிப்பாக, 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலை வாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும்.
வீரர், வீராங்கனையர்கள் மேற்காணும் வழிகாட்டு தலின்படி 3 சதவித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவ தற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனையர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்து கொள்ளப்ப டுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- பல ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் 2ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
- அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களில் பல நூறு குறு, சிறுதொழில்கள் முடங்கி விட்டன. பலர் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட சிறு குறு தொழில் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டரிம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு, உச்ச நேர மின் கட்டண அறிவிப்பு மற்றும் நிலைக் கட்டண உயர்வு போன்ற கோரிக்கைகளை நீக்க வலியுறுத்தி தமிழக தொழிற்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தி எங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தோம்.
பல ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் 2ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களில் பல நூறு குறு, சிறுதொழில்கள் முடங்கி விட்டன. பலர் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர். குறு, சிறுதொழில்களை நம்பி தொழில்முனைவோர்களும், பல லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மின்சாரத்தை நம்பியே உள்ளது. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை வழங்கி வரும் சிறுதொழில்கள் மின் கட்டண உயர்வால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீதான மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு கொடுக்கும் போது மாவட்ட சிறு, குறு தொழில் சங்க தலைவர் இளங்கோ, லாரி பாடி பில்டர் சங்க தலைவர் தங்கவேல், தேங்காய் நார் சங்க தலைவர் குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று வழக்கம் போல் இரவு 7 மணியளவில் கண்ணன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
- மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.
இவர் ஆத்தூர் புறவழிச்சாலை அருகே உள்ள பெரியாண்டிச்சி கோவில் பகுதியில் டிவி பழுது பார்க்கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று வழக்கம் போல் இரவு 7 மணியளவில் கண்ணன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் இரவு 11 மணியளவில் அவருடைய பூட்டிய கடையில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் மற்ற இடத்திற்கு பரவாமல் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
- மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஏற்காட்டில் கனமழை பெய்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் நிழலை தேடி ஓடினர். மேலும் வாகன ஓட்டிகள் கடும் உஷ்ணத்தால் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பிற்பகல் 3 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன.
சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சேலம் 4 ரோடு, சங்கர் நகர், புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதாகப்பட்டி, ஜங்சன், பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்த படியே சென்றனர்.
இந்தநிலையில் நேற்றிரவு 11 மணியளவில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கன மழையாக கொட்டியது. நள்ளிரவு வரை பெய்த இந்த மழையால் சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கிச்சிப்பாளையம், நாராயணநகர், பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை, தாதாகாப்பட்டி, நெத்திமேடு, அத்வைத ஆசிரம ரோடு, சங்கர் நகர், சூரமங்கலம், ஜங்சன் உள்பட பல பகுதிகளில் சாக்கடை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஆறாக ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாநகரில் அஸ்தம்பட்டி, பெரமனூர் உள்பட பல பகுதிகளில் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 82.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆனைமடுவு 52, ஓமலூர் 24, கரியகோவில் 5, மேட்டூர் 2.2, பெத்தநாயக்கன்பாளையம் 1.5, ஏற்காடு 1.4, சங்ககிரி 1.3, எடப்பாடி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 171.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
- குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
- முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னம்பிள்ளையூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). விவசாயி. இவரது மகன் பிரசாந்த் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது தாய் மாமன் முருகேசனின் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்த முருகேசனின் மகள் திடீரென காணாமல் போனார். இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முருகேசனின் மகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பவானியில் உள்ள குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 2-ந்தேதி இருவரையும் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் இரு தரப்பையும் அழைத்து வாழப்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமி தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதால், சிறுமியை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பிரசாந்த் தனது தாய்மாமன் முருகேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மீண்டும் தனது மகளை அழைத்து செல்ல வந்ததாக கூறி முருகேசன் குடும்பத்தினர் பிரசாந்த்துடன் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் குணசேகரன் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசன் (52), அவரது மனைவி முத்தம்மாள் (45), முருகேசனின் தம்பி சிவக்குமார் (50), அவரது மனைவி தமிழரசி (40) ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதில் முருகேசன் மற்றும் சிவக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குணசேகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
- பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும்.
சேலம்:
பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934-ம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போக சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ அணையில் இருந்து பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டு கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடி அளவில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி தீவிரமாக மேற்கொண்டனர்.
இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும். இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும்.
ஆனால் நடப்பு ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. அதுமட்டும் அல்லாமல் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் முதல் இன்று வரை 125 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும். இந்த தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. ஆனால் 46 டி.எம்.சி நீர் மட்டுமே வந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து பெயரளவிலேயே தண்ணீர் திறந்து விட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 163 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 7.88 டி.எம்.சி.யாக குறைந்துள்ளதால் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மேட்டூர் அணையில் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் 30 அடி வரை தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும்.
இதனால் குடிநீர் மற்றும் மீன் வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு இன்று காலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது.
அதாவது சுமார் 110 நாட்களுக்கு முன்னதாகவே அணையில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா பாசன தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதங்களுக்கு பிறகு இன்று நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் முதல் இதுவரை 91 டி.எம்.சி. அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாநகராட்சி, ஆத்தூர், வேலூர், காடையாம்பட்டி ஆகிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தினாலும் குடிநீர் தேவைக்கு மாதம் 2 டி.எம்.சி வரை டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அணையில் தற்போது 8 டி.எம்.சி தண்ணீர் அணையில் இருப்பு உள்ளது என்றார்.






